R2100 – பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2100 (page 38)

பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்

QUESTIONS OF GENERAL INTEREST

“தாயாகிய ஏவாள் மீட்கப்பட்டிருக்கின்றாளா?

கேள்வி: — மனிதனாகிய கிறிஸ்து இயேசு ஆதாமுக்காகவும், அவர் அரையிலிருந்து பிறந்திடாத சந்ததியாருக்காகவும் தம்மையே ஈடுபலியென அல்லது சரிநிகர் சமான விலையாகக் கொடுத்தார் – காரணம் ஆதாமில் பிறந்திடாத சந்ததி, அவர் கீழ்ப்படியாமல் போன காலக்கட்டத்தில் அவருடைய அரையில் காணப்பட்டு, பின்னர்ப் பிறந்தது முதற்கொண்டு அவருடைய தண்டனையின் அனைத்து அம்சங்களிலும் இயல்பாகவே பங்கடைந்தவர்களாய் இருக்கின்றனர் என்று வேதவாக்கியங்கள் போதிக்கின்றன என்று நீங்கள் நிரூபிப்பது உண்மையாக இருக்குமானால், தாயாகிய ஏவாளின் விஷயம் எப்படியாக இருக்கும்? மீறுதலின்போது அவள் ஆதாமுக்குள்ளாகக் காணப்படவில்லை, மாறாக ஒரு தனிப்பட்ட ஜீவியாக தன் சொந்தக் கிரியைகளுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவளாகவும், கீழ்ப்படியாமையின் பாவத்தில் முதலாவது பங்கெடுத்தவளாகவும் காணப்பட்டாள் மற்றும் இதனால் ஆதாமுக்கு முன்னதாகவே மரணத்தண்டனைத் தீர்ப்பில் பங்கெடுப்பவளாக இருக்கின்றாள். அவளுக்கான ஈடுபலி எப்படிச் செலுத்தித்தீர்க்கப்பட்டது அல்லது எப்போதேனும் அது செலுத்தித் தீர்க்கப்பட்டதா மற்றும் தண்டனைத் தீர்ப்பினின்று அவள் எப்போதேனும் விடுவிக்கப்படுவாளா?

பதில்: — ஆரம்பத்தில் ஏவாள் ஆதாமினுடைய சரீரத்தின் ஒருபாகமாய் இருந்தாள் மற்றும் சரீரரீதியில் ஆதாமிடமிருந்து ஏவாள் பிரிக்கப்பட்ட பிற்பாடு, அவள் உண்மையில் ஆதாமிடமிருந்து பிரிக்கப்பட்டவளாக இல்லை ஆதாம் கூறினதுபோல “”இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய்”” இருக்கிறாள் – அவர்கள் இருவரல்ல, மாறாக ஒரே மாம்சமாய் இருந்தார்கள்;. ஏவாளுக்கு உதவிப்புரியும் துணைவனாக இருக்கும்படிக்கு ஏவாளுக்காய் ஆதாம் கொடுக்கப்படாமல், மாறாக ஆதாமுக்கு (பொருத்தமான) துணைவியாக இருக்கும்படிக்கு ஏவாள் ஆதாமுக்காகக் கொடுக்கப்பட்டாள். இதில் எதுவும் ஏவாளை, ஆதாம் அடிமையாக நடத்திடுவதற்கு அல்லது அவளிடத்தில் கொடுமையாய்க் காணப்படுவதற்கு அல்லது அவளைப் புண்படுத்திடுவதற்கு அல்லது அவளிடத்தில் அன்பற்று இருப்பதற்கு, ஆதாமிடம் உரிமையிருப்பதாக விழுந்துபோன சந்ததியில் சிலர் கற்பனைபண்ணிக்கொள்வது போன்று ஏதுமில்லை. முற்றிலும் நேர்மாறாக ஆதாம் ஓர் உண்மையான மனுஷனாகக் காணப்பட்டு ஏவாளை தன் “”சொந்தச் சரீரமெனப் பாவித்து,”” அவளை அன்புகூர்ந்து, அவளுக்காகத் திட்டங்கள்பண்ணி மற்றும் அவளுக்காக அக்கறைக்கொண்டிருந்தார். தேவன் பிரித்தபோது ஒருவர் இன்னொருவருடைய தேவைகளுக்குப் பொருத்தமானவர்களாய் இருக்கும்படிக்குப் பார்த்துக்கொண்டார். சரீர ரீதியிலும், மனரீதியிலும் பலமானவராய்க் காணப்பட்ட ஆதாம், தன்னுடைய பராமரிப்பு மற்றும் அன்பின் தேவையில் உள்ள ஒரு துணைவியைப் பெற்றிருப்பதில் மகிழ்ந்தார். “”வலுக்குறைந்த பாத்திரமாகிய”” ஏவாள் சரீர ரீதியிலும், மனரீதியிலும், பாங்கிலும் மென்மையானவளாக இருந்தபடியினால், அவள் தனது கணவனாகிய இராஜாவினுடைய கனிவான மற்றும் உயர்தரமான உணர்வுகளைத் தன்பால் ஈர்க்கப்பெற்றவளானாள் மற்றும் ஆதாமும் தன் ஆட்சிக்குட்பட்ட ஆசீர்வாதங்கள் மற்றும் கனங்கள் அனைத்திலும் இராணியென, அவளுக்கு ஒரு பங்கினைக் கொடுத்திட பிரியமாய் இருந்தார்.

ஆனால் அவர்கள் இருவரல்ல, மாறாக ஒருவரே ஆவர் மற்றும் அந்த ஒருவருக்கு ஆதாம் தலையாக இருந்தார். அவர்களைக் கையாளும்போது தேவன் தனித்தனியே பார்க்காமல் ஒருவராகவே பார்த்தார். ஆதாம் தன்னுடைய சொந்த ஆள்துவத்தை மாத்திரம் அல்லாமல், தன் மனைவியின் ஆள்துவத்தையும் அடையாளப்படுத்துகின்றவராகவே இருந்தார்; ஏனெனில் அவள் ஆதாமின் சொந்தச் சரீரமாய் இருந்தாள் மற்றும் ஆதாமின் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாய் இருந்தாள் – அவள் ஆதாமின் ஒரு பாகமாவாள்.
[R2100 : page 39]

ஆகையாலே “”ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கின்றார்கள்”” என்று எழுதப்பட்டுள்ளது. இப்படியாகவே ஏவாளின் அடையாளம் ஆதாமுடன் இணைக்கப்பட்டிருந்தது; விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும் பாவத்தில் ஒருவேளை அவள் பங்கெடுக்காமல் இருந்தாலும், அவள் ஆதாமின் ஒரு பாகமென, அவரது துணைவியென அவரது தண்டனையாகிய மரணத்தில் பங்கடைந்திருப்பாள். அதுபோல மீறுதலில் ஏவாளே முதலாவதாக உட்பட்டிருந்தபோதிலும், அவளுடைய செய்கையானது சந்ததியினை அபாயத்திற்குள்ளாக்கவில்லை ஏனெனில் சந்ததியானது அவளுக்குள் இல்லாமல் ஆதாமுக்குள்ளே இருந்தது (1 கொரிந்தியர் 15:22). “”இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று”” (ரோமர் 5:12-19).

இன்னுமாகப் பொறுப்பானது குடும்பத்தின் தலைவனாகிய ஆதாமினிடத்தில் காணப்படுவதினால் ஏவாள் அடைந்த ஏமாற்றமும், அவளுடைய மீறுதலும் அவள் மீது மரணத்தைக் கொண்டுவந்தாக வேண்டும் என்ற அவசியமும் கண்டிப்பாய் இல்லை அவள் அநேகமாகச் சிட்சிக்கப்பட்டிருந்திருப்பாள். இந்த ஒரு கொள்கையானது, இதே சிருஷ்டிகரினால் வடிவமைக்கப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்க் கர்த்தரினால் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது – இதுவும் கணவன் மற்றும் தகப்பனையுமே எல்லாவற்றிலும் குடும்பத்தினுடைய தலையாகவும், பிரதிநிதியாகவும் அங்கீகரித்தது மற்றும் இந்த ஏற்பாட்டினையே முன்வைக்கவும் செய்தது. உதாரணத்திற்கு எந்தவொரு மனுஷனும் கர்த்தருக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தால், அதினின்று அவனால் தப்பிக்க இயலாது; ஆனால் ஒருவேளை ஒரு மனைவியோ அல்லது மகளோ கர்த்தருக்கென்று ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தால், அது கணவனால் அல்லது தகப்பனால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் தவிர மற்றபடி அது செல்லாததாகிவிடுகின்றது (எண்ணாகமம் 30:2,5,8,13,16). வேறுவார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் மனுஷனைக் குடும்பத்தின் தலைவனாகச் செயல்பட வைப்பதை மற்றும் ஸ்திரீயானவளை அவரது துணைவியாக வைப்பதை இயற்கையின் விதிகள் மூலம் இப்படியாகக் குடும்ப உறவுகளைத் தேவன் நிறுவினதோடல்லாமல், “”கனமிக்கதும்,”” “”நீதியானதும்,”” “”நன்மையானதுமாக”” இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களிலும்கூட மேற்கூறிய காரியத்தினை அவர் தெளிவாய் வெளிப்படுத்தியுள்ளார் (ரோமர் 7:12).

திவ்விய ஏற்பாடுகளினுடைய இந்தக் காரியங்களை நாம் பார்க்கையில் ஏவாள் ஆதாமின் ஒரு பாகமாக மாத்திரம் கர்த்தரினால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டாள் என்பதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகின்றது; ஆகையால் இதினிமித்தம் அவள் ஆதாமின் மீறுதலில் மாத்திரமல்ல, அதன் விளைவாகிய தண்டனையாகிய மரணத்திலும் அவளைச் சம்பந்தப்படுத்தியது என்று நம்மால் பார்க்கமுடிகின்றது. இன்னுமாக ஆதாமின் மீட்பு என்பது ஆதாமின் பாகமாகிய, “”அவரது சரீரமாகிய”” ஏவாளின் மீட்பையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. திவ்விய ஒழுங்கில் கணவன் மனைவிக்கு இடையிலான இந்த நெருக்கமான உறவானது அப்போஸ்தலனாகிய பவுலினால் மிகத்தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது (எபேசியர் 5:22-33).

***
இப்பொழுது அநேக திருமணங்கள் திவ்விய மாதிரியின்படியாக இருப்பதில்லை. மனரீதியிலும், ஒழுக்க ரீதியிலும், சரீர ரீதியிலும் மனுஷஜாதியினுடைய விழுகையானது அதன் பல்வேறு அங்கத்தினர்களை – சிலரை அதிகமாகவும் மற்றும் சிலரைக் குறைவாகவும் பாதித்துள்ளது. ஆதியில் பூரண பொருத்தத்துடன் காணப்பட்ட ஜோடி பெற்றிருந்த உயர்க்குணலட்சணங்களை அனைத்துப் புருஷர்களும், அனைத்து ஸ்திரீகளும் ஏறக்குறைய இழந்துவிட்டனர். ஆகையால் பொருத்தமற்றச் ஜோடிகள் அநேகர் இக்காலங்களில் இணைவதும் மற்றும் இதன் விளைவாக மகிழ்ச்சியற்ற நிலைமை ஏற்பட்டிருப்பதைக் காண்கையில் – அதுவும் விசேஷமாகப் பொருத்தத்தின் விஷயத்தில் திவ்விய ஒழுங்கானது அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதைக் காண்கையில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. திவ்விய மாதிரியின்படி ஒரு மனுஷன் தன்னைவிட மேம்பட்டவளாக ஒரு ஸ்திரீயையும், அதேசமயம் தன்னைவிட கீழ்ப்பட்டவளாக இருக்கும் ஒரு ஸ்திரீயையும் திருமணம்பண்ணிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்; ஏனெனில் தன்னைவிட கீழ்ப்பட்ட ஒரு ஸ்தீரி எனும்போது ஜீவியத்தில் அவள் பொருத்தமற்றத் துணைவியாக இருப்பதினால், அவனால் அவளிடம் உண்மையான ஐக்கியத்தினைக்கொண்டிருக்க முடியாது; தன்னைவிட மேம்பட்ட ஸ்திரீயினுடைய விஷயத்தில் மேம்பட்ட ஒருவளுக்குத் தலையாக அல்லது கணவனாக இருக்கும் ஸ்தானத்தினை நிறைவேற்றிடுவதற்கு அவன் இயலாதவனாக இருப்பதினால், தொடர்ந்து போராட்டமே நிலவிடும். அதுபோலவே ஸ்திரீயும் தன்னைவிட கீழ்ப்பட்ட ஒரு புருஷனை, அதாவது “”மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்”” (எபேசியர் 5:22-23) என்ற திவ்விய கட்டளைக்கு ஏற்ப குடும்பத்தின் தலைவனாகவும், பொருத்தமான கணவனாகவும் தன்னால் பார்க்க முடியாத ஒரு நபரைத் திருமணம்பண்ணிக்கொள்ளாதபடிக்கு விசேஷமாய் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

[R2101 : page 39]
மனுஷன் நாகரிகமற்ற நிலைமைக்குள் மூழ்கினபோது, ஸ்திரீயும் அவனோடேகூட மூழ்கினாள்; மனுஷன் நாகரிகமான நிலைக்கு உயர்ந்ததுபோல, ஸ்திரீயும் அவனேடாடேகூட உயர்ந்தாள்; இதுபோலவே மனிதன் சீரழிவிற்குப்போனபோது அல்லது சீரடைந்தபோது, இதற்கேற்ப அவன் கீழுள்ள விலங்கு ஜீவராசிகளும், தாவரங்களும் சபிக்கப்பட்டன அல்லது ஆசீர்வதிக்கப்பட்டன. இது திவ்விய பிரமாணத்தினுடைய செயல்பாடாகும். சிறுவர்களுக்கான பள்ளிகளுடைய ஏற்பாடு போலவே, சிறுமிகளுக்கான பள்ளிக்கூடங்களும், பயிற்சிக் கல்லூரிகளும், புருஷர்களாலேயே ஏற்பாடு பண்ணப்பட்டன. வளர்ந்துவரும் நாகரிகத்திற்கு ஏற்ப படிப்படியாக மாறிவரும் சட்டங்களானது புருஷர்களுடைய, அதே சமயம் ஸ்திரீகளுடைய உயர்ந்துவரும் நிலைமைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றது; எனினும் இந்தச் சட்டங்களானது புருஷர்களாலேயே இயற்றப்படுகின்றது.

மனித சட்டங்களும், திவ்விய சட்டங்களைப் போலவே கணவன் மற்றும் தகப்பனையே – இவரில் பாகமாய் இருக்கும் இவரது மனைவிக்கு மாத்திரமல்லாமல், இவரது சிறு வயதுள்ள பிள்ளைகளுக்கும், பொதுவான நலனுக்கடுத்த காரியங்களில் பிரதிநிதியாகக் கருத்தில் எடுத்துக்கொள்கின்றது – அதாவது இஸ்ரயேலில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது போலவும், ஏதேனுக்குள் பாவம் பிரவேசிப்பதற்கு முன்பு அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது போலவுமாகும். நவீன காலங்களில் குடும்பத்தின் ஒற்றுமையை அழித்துப்போடுவதற்கும், ஒருவராய் இருந்த கணவன் மனைவியினை இருவர் ஆக்கிடுவதற்குமான பிரயாசங்களானது – தற்கால தீமைகளுக்கான தீர்வாயிருக்கும் என்ற நம்பிக்கையில் மனுக்குலமானது பற்றிக்கொண்டிருக்கும், மற்ற வஞ்சனைகள் போன்றதொரு வஞ்சனையே ஆகும். தங்கள் கணவன்மார்களுடனும், மகன்களுடனும் இணக்கமாயிராத தாய்மார்களும் மற்றும் தங்கள் சகோதரர்களுடனும், தகப்பன்மார்களுடனும் இணக்கமாயிராத சகோதரிகளும் இதினிமித்தம் உரிமைக்கோர அபாத்திரர்களாகத் தங்களை நிரூபித்துக்கொள்கிறவர்களாக இருக்கின்றார்கள். ஆனாலும் இணக்கமாய் இருப்பவர்களுக்கு உரிமைக்கோர அவசியமில்லை, காரணம் இவர்கள் தேவன் ஏற்படுத்தியுள்ள ஒழுங்குடன் இசைவாக இருந்து, அதை உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.