(Q661:2)
கேள்வி (1910)-2- உணவு அருந்தும் மேஜையில், வீட்டில் இருக்கையில் என்ன செய்வது? தகப்பன் ஆசீர்வாதத்திற்காய் ஜெபிக்கும் எண்ணமே இல்லாதவராய் இருக்கின்றபடியால், மனைவியாகிய நான்தான் இதற்காய் ஜெபிக்கும் வழக்கம்கொண்டிருந்தேன். ஆசீர்வாதத்திற்கு ஜெபிக்க இனிமேலும் நான் தொடர வேண்டுமா?
பதில் – கணவன் சம்மதம் தெரிவிப்பாரானால், அவர் இதற்கு ஒப்புதல் உள்ளவராய் இருப்பாரானால், நீங்கள் தொடர வேண்டும். ஆகையால் கணவனை நோக்கி: “உணவிற்காய் நான் ஆசீர்வாத ஜெபம் ஏறெடுக்கலாமா? இதில் உங்களுக்குச் சம்மதமா?” என்று கேட்க வேண்டும். ஒருவேளை கணவன் கிறிஸ்தவன் இல்லை என்றாலும், அவரே தொடர்ந்து குடும்பத்தின் தலையாக அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும்; மேலும் கணவனை நோக்கி: “நான் ஆசீர்வாதத்திற்காய் ஜெபம் ஏறெடுக்கின்றேன்; இதைப்பற்றி நீங்கள் எதுவும் சொல்லக்கூடாது” என்று மனைவி கூறுவற்குப்பதிலாக, “கணவனே, இதில்; உங்களுக்கு மறுப்பு ஏதேனும் உள்ளதா?” என்று கேட்பது சிறந்ததாயிருக்கும். ஒருவேளை அவர் சம்மதம் தெரிவிப்பாரானால், பின்னர் அதைச் செய்வதற்கான அதிகாரம் உங்களுக்கு இருக்கின்றது; மேலும் நீங்களும் எந்த விதத்திலும் அதிகாரத்தைப் பறித்தெடுக்காதவர்களாய் இருப்பீர்கள்.