R3267 (page 358)
2 சாமுயேல் 18:24-33
“மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.” – ( நீதிமொழிகள் 17:25 )
தன் மகனுக்காக இராஜாகொண்டிருந்த அன்பானது, சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய மிக ஏற்ற நடைமுறை வழியினை எடுத்துக்கொள்ளாமல் இருந்தது என்பது வருந்தத்தக்க காரியமாகும். இவர் ஞானமுள்ள தகப்பனாய் இருப்பதைவிட செல்லங்கொடுக்கும் தகப்பனாய் இருந்துவிட்டார். இந்த இளைஞனின் இயல்பான திறமைகளின் மினுக்கும், பகட்டும் ஜனங்களை மாத்திரம் வசீகரிக்காமல், அவரது தகப்பனையும் வசீகரித்துள்ளது என்பது உறுதியே… இதனால் அவன் விரும்பின அனைத்தையும் பெற்றுக்கொண்டவனாய் இருந்தான்; மேலும் கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்றும், ஞானம் சுட்டிக் காண்பித்திடும் இப்பாதையில் மாத்திரமே உண்மையான ஐசுவரியம் கண்டடையப்படமுடியும் என்றும், தான் கற்றுக்கொண்ட விலையேறப்பெற்ற படிப்பினைகளை இராஜா தன் குமாரனுடைய விஷயத்தில் செயல்படுத்திட தவறிவிட்டார். தன் குமாரனுக்காய் இவர் பெற்றிருந்த ஞானமற்ற அன்பானது தன் குமாரன் தான் தோன்றித்தனமாக / கட்டுப்பாடற்று வாழட்டும் என்றும், அதிகம் கட்டுப்படுத்தப்பட வேண்டாம் என்றும் எண்ணங்கொள்ள இராஜாவை வழிநடத்திற்று; மேலும் இப்பொழுது அவர் பின்விளைவைக் கண்டபோது அவருடைய இருதயம் துக்கத்தினால் துடிதுடித்தது. இப்படியாகவே அநேகம் தகப்பன்மார்களும், அநேகம் தாய்மார்களும் காணப்படுகின்றனர் – இவர்கள் கர்த்தருக்குரியவர்களாக உண்மையில் இருப்பினும், வேதனையான அனுபவங்கள் வாயிலாகக் கர்த்தர் தங்களுக்குக் கற்பித்துத் தந்ததான படிப்பினைகளைத் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் செயல்படுத்த தவறிப் போகின்றவர்களாக இருக்கின்றனர். இத்தகைய அன்பின் ஞானமின்மைக்குறித்து விமர்சனம் தெரிவிப்பதற்கும், இதில் கிறிஸ்தவ பெற்றோர்களுக்குக் காணப்படும் படிப்பினைகளை நாம் சுட்டிக்காட்டுவதற்கும் அவசியமில்லை அதுவே சுட்டிக்காண்பிக்கின்றது; மேலும் இதனை நமது பாடத்தினுடைய ஆதாரவசனத்தின் வார்த்தைகளாகிய, “மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்” என்று ஞானமுள்ள குமாரனாகிய சாலொமோன் பேசுகையில், கனிவாக வெளிப்படுத்திட்டார்; மேலும் “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்” எனும் வார்த்தைகளையும் கவனியுங்கள். நடைமுறைச் சார்ந்த கண்ணோட்டத்தின்படி பார்க்கையில், மேலோட்டமாய்க் கவனிக்கிறவனுக்குக் காரியமானது எப்படித்தான் காட்சியளித்திட்டாலும், ஞானத்தின் சாரமானது “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதிமொழிகள் 22:6) எனும் அவரின் கண்டுபிடிப்பிலேயே அடங்கியுள்ளது. தங்கள் பிள்ளைகளை ஒன்றில் சரியான வழியில் அல்லது தவறான வழியில் நடப்பிப்பவர்கள் எதிர்க்காலத்திற்கான சந்தோஷங்களை அல்லது வருத்தங்களைத் தங்களுக்காகவே வித்திட்டுக் கொள்கின்றனர் எனும் உண்மையானது பெற்றோர்களினால் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாததாகத் தெரிகின்றது.
தன் குமாரன் குறித்து “பிள்ளையாண்டான் சுகமாய் இருக்கிறானா?” எனும் இராஜாவாகிய தாவீதின் கேள்வியானது தங்கள் குமாரர்கள் மற்றும் தங்கள் குமாரத்திகள் தொடர்புடைய விஷயத்தில் ஒவ்வொரு தகப்பனுடைய, ஒவ்வொரு தாயினுடைய கேள்வியாக இருந்திட வேண்டும்; ஆனாலும் தாவீது செய்ததுபோன்று செய்யாமல் இருப்பார்களாக – அதாவது பாவமானது முளைவிட்டுப் பூப்பூத்துத் தீமையின் கனிகளைக் கொணர்வதுவரையிலும் காத்துக்கொண்டு இருக்காமல் இருப்பார்களாக. தங்கள் பிள்ளைகள் விஷயத்திலிருக்கும் தங்கள் கடமைகளை உணர்ந்தவர்களாகக் குழந்தைப்பருவம் முதற்கொண்டே இதை நிறைவேற்றத் துவங்குவார்களாக. தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கிறிஸ்தவ பெற்றோர்கள் பெற்றிருக்கும் கடமையானது, கர்த்தருக்கு அவர்கள் பெற்றிருக்கும் தங்கள் கடமைக்கு அடுத்தப்படியானதாகும்;; பரிசுத்தவான்களுடைய பூமிக்குரிய கடமைகள் அனைத்தின் மத்தியிலும் பெற்றோருக்குரிய கடமையானது முதலாவதாக இருக்கும்படிக்குக் கர்த்தர் சுட்டிக்காண்பித்துள்ளார் என்பது உண்மையே.