R5650 (page 83)
தேவனுடைய பிள்ளையானவன் ஒருவேளை, தன்னைக்குறித்து, தான் கவனமற்று இருந்துள்ளதை உணருவானேயாகில், அவன், “இனியும் / இதற்குமேல் நான் என்மேல் பொறுமையாய் இருக்கமாட்டேன். என் விஷயத்தை நான் கையில் எடுத்துக்கொண்டு, என்னுடைய குணலட்சணத்தைப் பெலவீனமாக்குவதற்கும், அநேகமாக மற்றவருக்கு அமைதியின்மையும், வேதனையும் ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக, நான் கொஞ்சம் அனுமதித்திட்ட இந்தப் பெலவீனத்தை நான் மேற்கொள்வேன். இதை உதவியற்ற என்னுடைய சொந்தப் பலத்தினால் என்னால் செய்ய இயலாது, மாறாக கர்த்தருடைய கிருபையினால், இக்காரியத்தை மேற்கொள்ள நான் முடிவு எடுத்துள்ளேன்” என்று கூறவேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கையாளும் விஷயத்தில் அதிகமான பொறுமையைக் / சகிப்புத்தன்மையைக் கொண்டிருப்பது அவசியம். பொறுமையின் எல்லையானது, பிள்ளைகளுக்கு ஏற்ப வித்தியாசப்படலாம். ஆகவே ஒவ்வொரு பிள்ளையும் எந்தளவுக்குச் சரியான காரியத்தைச் செய்கின்றது எனவும், எந்தளவுக்குப் பிள்ளையானது அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு, நன்மையடைந்து உள்ளது எனவும் ஞானமுள்ள பெற்றோர்கள் நிதானித்துக்கொள்வார்கள். ஒருவேளை ஒருவன் தனது பிள்ளை, வேண்டுமென்றே தவறு செய்கின்றது என்பதைக் கண்டுபிடிப்பானானால், அவன் பொறுமையாய்த் தொடர்ந்து காணப்படக்கூடாது, பிரம்பைப் பயன்படுத்த வேண்டும். இப்படிச்செய்வது என்பது பெற்றோர் பொறுமையாய் இருப்பதை நிறுத்திவிட்டார்கள் என்பதாகாது. அடுத்த நாள் அவன் அப்பிள்ளையிடம் பொறுமையுடன் இருக்கும் சூழ்நிலை வரலாம், அடுத்தும்கூடப் பிரம்பைப் பயன்படுத்துவதற்குரிய நிலைமை திரும்பவுங்கூட ஏற்படலாம். பொறுமையற்றவர்களாகவும், அனுதாபம் அற்றவர்களாகவும் நாம் காணப்படாமல், நாம் மிகுந்த பொறுமைசாலிகளாகவும், மிகுந்த அனுதாபம் உடையவர்களாகவும் காணப்பட வேண்டும். நம்முடைய பெலவீனங்களை உணர்ந்தவர்களாக, நாம் நமது பெலவீனங்களை மேற்கொள்வதற்கு நாடுவதுபோன்று, தங்களுடைய பெலவீனங்களை மேற்கொள்வதற்கு என்று நாடுகின்ற மற்றவர்களிடத்திலும் நாம் பொறுமையைக் காண்பிக்க வேண்டும். இந்த ஒரு பொறுமை, சகிப்புத்தன்மையானது, நம்மீதும் காண்பிக்கப்பட வேண்டிய அவசியத்திலேயே நாம் அனைவரும் காணப்படுகின்றோம்.