R4917 (page 421)
“தற்பொழிவை நாடாத”” சுயநலமற்ற அன்பு என்னிடத்தில் உள்ளதா? அதாவது என்னுடைய சுய விஷயங்களுக்காக நாடாத சுயநலமற்ற அன்பு என்னிடத்தில் உள்ளதா? அதாவது மற்றவரின் நலம் கருதி என்னுடைய சில உரிமைகளையே பலி செலுத்தும் அன்பு என்னிடத்தில் உள்ளதா? அல்லது ஒவ்வொரு தருணத்திலும் என் உரிமைகளை நாட்ட விரும்பும் சுயநலம், என்னிடத்தில் காணப்படுகின்றதா? அல்லது மற்றவரின் நலம், உரிமை மற்றும் வசதிகளைக் கருதாமல், என் உரிமைகளை நாட்ட விரும்பும் சுயநலம் என்னிடத்தில் காணப்படுகின்றதா? இவ்வகையான அன்பினைப் பெற்றிருப்போமானால் மற்றவர்களுக்குக் கேடுவிளைவிக்கும் விதத்தில் அநீதியாய் நடந்துகொள்வதிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்வதில் விழிப்பாயிருப்போம், மேலும் தவறுசெய்வதைவிட தீங்கு அனுபவிக்க விரும்பிடுவோம்; அநீதி செய்வதைக்காட்டிலும் அநீதி அனுபவிக்க விரும்பிடுவோம்.
மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக, மாம்சத்தின்படி தேவைகளுக்கு நம்மைச் சார்ந்திருக்கும் நபர்களின் பராமரிப்பை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதாக இல்லை. எல்லாக் கோணங்களிலும் பார்க்கும் போது, அன்பு வீட்டிலேயே ஆரம்பிக்கின்றது. பூரண அன்பின் ஆவியை உடைய புருஷனும், ஸ்திரீயும் ஜீவியத்தின் எந்த விஷயங்களிலும் தங்களுடைய சொந்த நலன்களை மாத்திரமே சிந்தித்துக்கொண்டிருக்கமாட்டார்கள் என்று நாங்கள் புரிந்துகொள்கின்றோம். இவ்விதமான அன்பு செயல்முறைப்படுத்தப்படும்போது, ஜீவியத்தின் அனைத்து விஷயங்களிலும், அதாவது வீட்டிற்குள்ளும், குடும்பத்திற்கு வெளியேயும் அதிக செல்வாக்குப் பெற்றிருக்கும்.