R4749 (page 27)
கேள்வி: — முற்பிதாக்களைக் குறித்துக் குறிப்பிடுகையில் வேறு யாரையும் இல்லாமல் ராகாபை (எபிரெயர் 11) மாத்திரம் பரிசுத்த பவுல் அடிகளார் குறிப்பிடுகின்றார் என்ற உண்மையின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகையில், புதிய சுபாவம் மற்றும் பரம அழைப்பிற்கான பந்தயப் பொருளுக்குரிய ஓட்டப்பந்தயத்தில் ஸ்திரீயானவள் எவ்வாறு சமவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும்?
பதில்: — ஸ்திரீகளுக்கு எதிராய் வேதவாக்கியங்கள் வேற்றுமைப் பாராட்டும் எந்தவொரு இடத்தையும் நாங்கள் கண்டதில்லை. அவர்கள் இந்தச் சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவோடுகூட உடன் சுதந்திரர்கள் ஆகிடுவதற்கான வாய்ப்பினை உடையவர்களாய் இருக்கின்றனர்; இந்த ஒரு வாய்ப்பில் பாலின, நிற அல்லது இனப்பாகுபாடு ஏதும் இல்லை.
ஸ்திரீகளுக்கு எதிரான எதுவும் வேதவாக்கியங்களில் இல்லை. கர்த்தரானவர் சபையின் வாய்க்கருவிகளாகப் புருஷர்கள் இருக்கும்படிக்குத் தெரிந்துகொண்டது என்பது அவருடைய சொந்தக் காரியமாய் இருக்கின்றது. இந்த விஷயத்தில் கர்த்தருடைய சித்தத்தைக்குறித்துக் கேள்வி கேட்கவோ, வயதான புருஷர்களை அல்லது வாலிபர்களை அல்லது குறிப்பிட்ட வயதுள்ள ஸ்திரீகளைக் கர்த்தர் விரும்புவாரா அல்லது யாரையுமே இல்லையா என்று கேள்வி கேட்பதற்கோ யாருக்குமே உரிமை கிடையாது. தேவன் தம்முடையவர்கள் விஷயத்தில் தம்முடைய சித்தத்தின்படி செய்வார். ஆனால் அவர் இத்தகைய தெரிவைச் செய்வதற்கான காரணம் ஒன்றினை நம்மால் காணமுடிகின்றது. ஸ்திரீ சபைக்கு அடையாளமாகவும், புருஷன் சபையினுடைய தலைக்கு அடையாளமாகவும் இருக்கின்றனர். ஆகையாலே ஸ்திரீயானவள் சபையில் போதகராக இருக்கக்கூடாது என்றும், ஆண்கள் போதகராக இருக்க வேண்டும் என்றும் நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதவாக்கியங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வெளியே, மனித விவகாரங்களிலும்கூட ஸ்திரீயினுடைய காரியங்கள் அபாயத்திற்குள்ளாகி இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் ஒவ்வொரு ஸ்திரீயும் ஒன்றில் ஆணுக்குச் சகோதரியாகவோ, ஒரு ஆணுக்குத் தாயாகவோ, ஆணுக்கு மகளாகவோ இருக்கின்றாள். இப்படி இருபாலினர்களும் மிக நெருக்கமான உறவுகொண்டிருப்பதினால் வாக்களிப்பதற்கென்று வாக்குச் சாவடிக்கு முழுக்குடும்பமும் செல்லவேண்டிய அவசியம் இருப்பதில்லை, மாறாக குடும்பத்தின் பிரதிநிதியாகப் புருஷன் காணப்படுகின்றான் மற்றும் இப்படியாகப் பட்டணத்திலோ, நகரத்திலோ, நாட்டிலோ நடைபெறும் எல்லா விஷயத்திலும் அனைவரும் பங்குகொண்டவர்களாய் இருப்பார்கள்.
ஒருவேளை இப்படியாக இருக்கவில்லையெனில் சூழ்நிலைகள் மிகவும் விரும்பத்தகாததாய் இருந்திருக்கும் என நம்மால் கற்பனைபண்ணிப்பார்க்க முடிகின்றது; இது ஆணினுடைய தன்மையாய்க் காணப்படும் மிகப் பிரத்தியேகமான சிலாக்கியங்களில் ஒன்றினை ஆண் தொலைத்துவிட்டவராய் இருந்திருப்பார் என்றும்;; மறுபக்கத்தில் ஸ்திரீயின் சார்பிலும் கவனக்குறைவும் இருந்திருக்கும் என்றும் காண்பித்திருக்கும். ஸ்திரீயினுடைய செயல்பாட்டு எல்லைக்குறித்து அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகின்றார். தன்னை மதிக்காத புத்திரனுடைய எந்தத் தாயானவளும் மிகவும் அமைதலாய் இருக்கக்கடவள். குழந்தைப் பருவத்தின் மற்றும் வாலிபப் பருவத்தின் வருடங்கள் அனைத்திலும் அந்தப் பிள்ளை அவளிடம்தான் இருந்தது. மேலும் அத்தனை வருஷக்காலங்களும் அந்தப் பிள்ளை தனக்கு மரியாதை காண்பிக்க அவள் கட்டளையிடாமல் இருந்திருந்தாளானால், அவளே குற்றஞ்சாட்டப்பட வேண்டும்.
ஒருவேளை இந்த விஷயத்தில் ஸ்திரீயானவள் சரியான பார்வையைப் பெற்றுக்கொள்வாளானால், பெண் உரிமைக்கான குரலெழுப்புதல்கள் முடிவிற்கு வரும் என நாங்கள் நம்புகின்றோம். ஸ்திரீகள் இல்லத்தில் தங்களுக்கு ஒரு கடமை இருப்பதை உணர்ந்துகொள்வார்கள். ஒவ்வொரு சட்டத்திற்கும் விதிவிலக்குகள் உண்டு. கிறிஸ்தவ பெற்றோர்கள் பின்வருமாறு: “”சத்தியமானது எனக்கு முதலிலே கிடைத்திருந்திருக்குமானால், ஒரு சிறந்த தகப்பனாக, ஒரு சிறந்த தாயாக எப்படி இருக்க வேண்டும் என்று நான் அறிந்திருப்பேன்; ஆனால் பெற்றோரென என்மீது இருக்கும் கடமைகள் குறித்தும், குழந்தையைச் சரியாய்ப் பயிற்றுவிப்பது என்றால் என்ன என்பது குறித்தும், எதுவும் எனக்குக் கற்பிக்கப்படவில்லை”” என்று கூறியிருக்கின்றனர். ஒரு தாயார் என்னிடம் பின்வருமாறு: “”என்னுடைய குழந்தைகள் சிறுபிள்ளைகளாக இருந்தபோது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நோக்கம் கொண்டிருந்தேன். இதற்காக வேண்டி என் கணவனோடுகூட நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். நாங்கள் கொஞ்சம் பணம் சம்பாதித்தோம். ஆனாலும் என் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பினைத் தொலைத்துவிட்டேன்; ஒருவேளை இப்பொழுது நான் அவர்களை வேறுவிதமாகப் பயிற்றுவிக்க வேண்டுமானால் நடைமுறையில் நான் அவர்களைக் கொன்றுபோடத்தான் வேண்டும்”” என்று கூறினாள். அத்தாயாரிடம் நாங்கள் பின்வருமாறு: “”ஆம்! இந்த உண்மைகள் அனைத்தினுடைய கண்ணோட்டத்தின்படி பார்க்கையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடத்தில் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் [R4750 : page 28] பலவந்தம் படுத்துவதற்குப் பதிலாக, முன்மாதிரியினாலும், முன் உதாரணங்கள் மூலமாகவும் பிள்ளைகளைச் சரியான நிலைமைக்குக் கொண்டுவர முயற்சியுங்கள்”” என்று கூறினோம். ஒருவேளை அவளது கருத்துக்களைப் பிள்ளைகள்மீது அவள் திணித்திட முற்படுவாளானால் அவர்களை அவள் கலவரம்பண்ணும், நிர்ப்பந்தம்பண்ணும் நிலைக்கு ஆக்கிடுவாள் என்றும் அத்தாயாரிடம் கூறினோம்.
அவள் திருமணத்திற்குத் தீவிரமான எதிர்ப்புத் தெரிவித்தவளாக இருந்தாள். இப்படிக் காணப்பட்டாளானால் அவள் பிள்ளைகள் அவளை எதிர்த்திடும் நிலைக்கு அவளால் வழிநடத்தப்படுவார்கள் என்றும், பிள்ளைகள் எதிர்ப்பாலின தோழமையைப் பெற்றிடுவதற்கு அவள் அனுமதித்திடுவது நலமென்றும், பிள்ளைகள் தன்னிடம் வரவும், தன் அறிவுரைகளை நாடவும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் நாங்கள் அவளிடம் கூறினோம். ஆனால் அத்தாயார் அப்படியாகச் செய்யவில்லை. இதன் விளைவாக ஒரு மகள் ஒரு மனுஷனைத் திருமணம்பண்ணினாள்; அவனோ பிற்பாடு, சிறைச்சாலைக்குச் சென்றுவிட்டான். பிற்பாடு தான் நிதானமாய்ச் செயல்பட்டிருக்கலாமே என்று அத்தாயானவள் எண்ணினாள்.