R3088 (page 303)
“அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:
ஏற்ற கால சத்தியத்தினுடைய வெளிச்சத்தினை அறிந்தது முதற்கொண்டும், அதிலே நடப்பதற்குப் பிரயாசம் எடுத்தது முதற்கொண்டும், நான் அவைகளை வாசிப்பதற்கு (கணவனால்) மிகவும் தடைபண்ணப்பட்டிருக்கின்றேன் மற்றும் நடத்தப்படும் எந்தக் கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு அல்லது அன்புக்குரிய சகோதர சகோதரிகளிடம் எவ்விதமான சம்பாஷணைப்பண்ணுவதற்கு நான் அநேகந்தரம் தடைபண்ணப்பட்டிருக்கின்றேன்.
கொஞ்சம் காலம் நானும் அமைதியாகக் கீழ்ப்படிந்தவளாகக் காணப்பட்டேன் மற்றும் என் கணவன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் வேதாகமத்தைத் தவிர வேறு எந்தப் புத்தகங்களையும் “”நான்”” என் அருகே வைத்திருக்கிறதில்லை. பின்னர் நான் தைரியமடைய ஆரம்பித்தேன் மற்றும் மறுபடியுமாகக் கைப்பிரதி ஒன்றை ஆங்காங்கே (வீட்டில்) தெரியும்படி வைத்தேன். ஆனால் ஒவ்வொரு தாக்குதலும் மோசமானதாகவே இருந்தது; பின்னர் இறுதியில் என் கணவனோ: “”இந்தப் புத்தகங்களையோ அல்லது கைப்பிரதிகளையோ இனிமேலும் நான் பார்த்தேனாகில், நான் அவற்றை எரித்துப்போடுவேன்”” என்றார். என் மகனிடம் சில வேதாகமங்கள் இருந்தன; இவைகளும், டாண் (volumes) புத்தகங்களும், சத்தியத்தில் காணப்படாத என் மூத்த மகனின் பராமரிப்பில் கொடுத்து வைத்திருந்தேன்.
டாண் புத்தகங்களை நான் வாசித்தாக வேண்டும் என்று எண்ணினேன்; அவைகள் என் அனுதின ஆகாரத்தைப்பார்க்கிலும் எனக்கு மேன்மையானவையாக இருந்தன; அவைகளை இரகசியமாய் நான் வாசிப்பேன்; எனினும் யாரொருவரின் கால் நடையினுடைய சத்தம் கேட்டாலே நான் நடுங்கிப்போய், அவற்றை ஒளித்து வைத்துவிடுவேன். மனுஷனுக்கல்ல, தேவனுக்கே நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று எனக்குச் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளதினால், நான் மகிழ்ச்சியாய் இல்லை. கிறிஸ்து என் தலையாய் இருக்கின்றார் என்று நான் [R3089 : page 303] காண்கின்றபடியால், இது விஷயத்தில் என் கணவனுக்கு நான் கீழ்ப்படிய வேண்டுமா? இது விஷயத்தில் என்னை நான் ஒரு கோழையாய் உணர்கின்றேன்.
எங்கள் பதில்:
அன்புக்குரிய சகோதரிக்கு,
உங்கள் கடிதத்தை நான் பெற்றுக்கொண்டேன். நீங்கள் உங்களைக்குறித்து வெளிப்படையாய் வெளிப்படுத்தி இருக்கின்றபடியால் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் மற்றும் இந்த முக்கியமான விஷயத்தில் நீங்கள் தெளிந்த புத்தியுள்ள மனதினைப் பெற்றிருக்கின்றீர்கள் என்பதை நான் கவனிக்கையில், இதிலும் மகிழ்ச்சியடைகின்றேன். அநேகமாக உறுதியான மனமுள்ள மனிதனாகக் காணப்படும் உங்கள் கணவன் இது விஷயத்தில் உங்களிடத்திலுள்ள அவரது நடக்கையானது எந்தளவுக்கு நியாயமற்றதாயும், அடக்குமுறையாயும் இருக்கின்றது என்பதை முழுவதுமாய் உணராதவராய் இருக்கின்றார். மனைவிகள் தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்திட வேண்டும் எனும் வேதவாக்கிய கட்டளைக்கு நாங்கள் முழுமையாய் இசைவாகவே இருக்கின்றோம்; எனினும் இவ்வசனமானது, பரலோக மணவாளனுடைய அறிவுரைகளுக்கு எதிராகவுள்ள காரியங்களில், மனைவிகள் தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நீங்கள் புரிந்திருப்பதுபோன்று சுட்டிக்காட்டுகிறதில்லை. இப்படியான கோரிக்கைகளைப் பகுத்தறிவுள்ள எந்தப் பூலோக கணவனும் எதிர்ப்பார்க்கிறதில்லை மற்றும் உங்கள் கணவனும் காரியங்களை வித்தியாசமாய்க் கண்ணோக்குவார் என்று நாங்கள் நம்புகின்றோம். அவரை அன்பாய், பரிவாய் நடத்துவதையும் மற்றும் முறையாக மற்றும் சரியான விதங்கள் வாயிலாய் அவரைப் பிரியப்படுத்துவதற்கான உங்கள் உண்மையான பிரயாசத்தையும், அதேசமயம் மனசாட்சி சம்பந்தப்பட்ட உங்களுக்குரிய தகுதியான சுயாதீனங்கள் தொடர்புடைய விஷயங்களில் எல்லாம் உங்களது உறுதியான, உங்கள் நிலையான தீர்மானம் மற்றும் தயக்கமற்ற உறுதியான நடத்தையையும் அவர் காண்கையில், அவர் சரியான பாதையை அறிந்துகொள்வதற்கு உதவப்படுவார். ஒருவேளை நான் உங்கள் இடத்தில் காணப்பட்டிருந்தால், இல்லத்தில் என் கணவன் காணப்படுகையில் புத்தகங்களையும், கைப்பிரதிகளையும் அவர் பார்வைக்கு முன்பாக வைக்காமல் இருப்பதற்கு நான் முடிவெடுப்பேன்; ஆனாலும் அவைகளைக் குறித்துச் சிந்திக்கவோ, வாசிக்கவோ மாட்டேன் என்றோ அல்லது இந்த விலையேறப்பெற்ற விசுவாசத்தில் காணப்படும் மற்றவர்களின் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன் என்றோ நான் முடிவெடுக்க மாட்டேன்.
பூலோக கணவனை நான் நோக்கி: “”பரலோக மணவாளனுக்கு முதலாவது கீழ்ப்படிதலே நம் கடமை என்றும், “”சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்”” என்று பரலோக மணவாளன் கூறுகையில், எப்படியேனும் அந்தக் கட்டளையைக் கடைப்பிடிப்பது கடமையாகும் என்று நான் கருதுகின்றேன் என்றும், இதை நியாயமான மற்றும் சரியான நடத்தையாகத்தான் நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்று நான் நம்புகின்றேன் என்றும், கணவனுக்கும், குடும்பத்தினுடைய மற்ற அங்கத்தினர்களுக்கும் நான் செய்ய வேண்டிய நியாயமான, சரியான குடும்பக் கடமைகள் மற்றும் பொறுப்புகளைப் புறக்கணிப்பதற்கான எந்த எண்ணமும் எனக்கில்லை என்றும், மாறாக நான் இப்போது பெற்றிருக்கும் நம்பிக்கை இல்லாமல் வேறு ஏதேனும் ஒருவேளை பெற்றிருந்தால், அதனுடைய தாக்கத்தின் கீழிருந்து நான் எப்படிக் காணப்படுவேனோ அதைப்போலவே இப்போதும் உண்மையாக அல்லது அதைவிட அதிகம் உண்மையாகக் காணப்படுவேன் என்றும்”” தெளிவாய்ச் சொல்லிடுவேன். மேலும் கணவனை நோக்கி: “”இந்த மட்டிலுமான சுயாதீனமாகிலும் எனக்கு இருக்கும் என்று விவாக உறவிற்குள் பிரவேசிக்கையில் நாம் இருவரும் தெளிவாய்ப் புரிந்திருந்தோம் என்றும், ஒருவேளை கணவனாகிய உங்கள் விவாக வாக்குறுதியில் மனசாட்சியின் சுயாதீனத்தை எனக்கு அருளிட தாங்கள் நோக்கம் கொண்டிருக்கவில்லையெனில், நீங்கள் என்னை ஏமாற்றி, வஞ்சித்திருக்கின்றீர்கள் என்றும், என்ன நடந்தாலும் இத்தகைய அடிமைத்தனத்திற்கு நான் என்னை ஒப்புக்கொடுக்கமாட்டேன் என்றும் கூறிடுவேன்; சீக்கிரமாய் இது விஷயத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டால் நலமாயிருக்கும் என்றும், எந்தச் சந்தர்ப்பச்சூழ்நிலையிலும், என்னுடைய இந்த நிலைப்பாடானது கர்த்தருடைய சித்தத்திற்கு இசைவானது என்று நான் கருதிடுவதுவரையிலும், என்னுடைய இந்த நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சமும் நான் அசையமாட்டேன் என்றும், இக்காரியமானது ஏதேனும் நமக்கிடையே விரிசல் கொண்டுவருமானால், நான் ஒருபோதும் என்னுடைய மனசாட்சியின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்காத காரணத்தாலும் மற்றும் அப்படி விட்டுக்கொடுக்க ஒருபோதும் நோக்கம் கொண்டிராத காரணத்தாலும், உங்கள் மனசாட்சியினை நீங்களும் மீறும்படி நான் கேட்காத காரணத்தினாலும் – தவறும், மாற்றம் காண்பிக்க வேண்டியதும் நிச்சயமாய் உங்கள் பக்கமே என்றும், என்னுடைய இந்தக் கண்ணோட்டமானது வேதவாக்கியங்களுடைய பரீட்சையில் நிலைநிற்பது மாத்திரமல்லாமல், தெளிந்த பகுத்தறிவுள்ள மனுஷன் மற்றும் மனுஷி முன்பும் சரியானதாய்க் காணப்படுமென நான் நம்புகின்றேன் என்றும்”” கூறிடுவேன்.
இதோடுகூடச் சத்தியமானது கணவனுக்குரிய நலனுக்கடுத்த காரியங்களில், என்னை அலட்சியமுள்ளவளாக்குவதற்குப் பதிலாய், மனைவியெனவுள்ள என் கடமைகள் விஷயத்தில் என்னை அதிகம் ஜாக்கிரதையுள்ளவளாக்கிடும் என்று நான் என் கணவனுக்கு உறுதிப்படுத்திடுவேன்; மேலும் நான் செய்யத் தீர்மானித்திருப்பது போன்று கணவனாகிய தாங்கள் ஒருவேளை சரியான கண்ணோட்டம் மற்றும் நிலைப்பாடு எடுத்துக்கொள்வீர்களானால், அது நம் இருவருக்கும் மற்றும் வீட்டாருக்கும் ஆசீர்வாதத்தை அதிகரிக்கின்றதாய் இருக்கும் என்று நான் நம்புவதாகக் கணவனுக்கு உறுதிப்படுத்திடுவேன்.
ஒருவேளை என் மனசாட்சியினை விலங்கிடுவதற்குரிய இத்தனை முயற்சிகளுக்கு எதிராய் இப்படிப் பொறுமையாயும், அன்பாயும் மறுத்து விளக்கிக் கூறியும், எந்த மாற்றமும் இல்லையெனில், நான் என் கணவனால் கைவிடப்பட்டுள்ளேன் என்று கருதிடுவேன் – அதாவது அவர் என் கணவனாகக் காணப்படுவதை நிறுத்திவிட்டு, என்னை ஒடுக்குகிறவராகியுள்ளார் மற்றும் மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கப்பட்டு நடத்தப்படும் அடிமை போன்றுகூட அவர் என்னை நடத்தவில்லை என்று கருதிடுவேன். இக்காரியத்தினை நான் கர்த்தரிடத்திற்கு எடுத்துச்சென்று, விடுதலைக்காய் – கிறிஸ்து உண்டாக்கின சுயாதீனத்திற்காய்க் கர்த்தரை நோக்கிடுவேன். இது மறுமணம்பண்ணிடுவதற்கான சுயாதீனமல்ல; (மத்தேயு 19:9-ஆம் வசனத்தில் இடம்பெறும் ஒரே காரணத்தினால் தவிர மற்றப்படி) திருமணத்தினை நிரந்தரமான ஒன்றாக்கிடும் திவ்விய பிரமாணமானது, அனைவருக்கும் பொருந்தும்.
கர்த்தர் உங்கள் காரியங்களை வழிநடத்தத்தக்கதாக, கிருபையின் சிங்காசனத்தினிடத்தில் உங்களை நினைவுகூர்ந்திடுவேன்.