R5563 (page 319)
மாற்கு 14:27-31,53,54,66-72
“இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” 1 கொரிந்தியர் 10:12
பரிசுத்தவானாகிய பேதுரு மனபலமுடைய, மிகவும் தைரியமுடைய மனுஷனாவார், அதே நேரம் சிந்திக்காமல் செயல்படுகிறவராகவும் காணப்பட்டார். “படிப்பறியாதவர்களென்றும், பேதைமையுள்ளவர்களென்றும்” ஜனங்களால் அடையாளங்கண்டுகொள்ளப்பட்ட இரண்டு சீஷர்களில், பேதுருவும் ஒருவர் ஆவார் (அப்போஸ்தலர் 4:13). சில விஷயங்களில் யூதாசைக் காட்டிலும், பேதுருவுக்குச் சாதகமற்ற, அனுகூலமற்ற சூழ்நிலைக் காணப்பட்டது. எனினும் இருவரும் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் சரிசமமான வாய்ப்புகளைப் பெற்றவர்களாய் இருந்தார்கள்; எனினும் இந்த இரண்டு மனிதர்களுடைய முடிவும் எத்துணை வித்தியாசத்துடன் காணப்பட்டது. ஒருவர் இழிவான இரண்டாம் மரணத்திற்குள் கடந்துச்சென்றார். மற்றொருவரோ சோதனையிலும், பயிற்சியிலும் மேலும், கீழும் ஏறி இறங்கினவராகக் கடந்துச்சென்ற பிற்பாடு, தனது ஆண்டவரோடுகூட மகிமை, கனம் மற்றும் அழியாமை எனும் பலன்களில் பங்கடைந்தார் மற்றும் அப்போஸ்தலர்கள் மத்தியிலும் உயர்வானவராய்க் கருதப்பட்டார்.
நமது கர்த்தருடைய மரணத்தின் காலக்கட்டத்தில் பரிசுத்தவானாகிய பேதுருவுக்கு வந்திட்டதான விசேஷமான “புடைத்தல்களைக்” குறித்தே நம்முடைய இன்றைய பாடத்தில் பார்க்கவிருக்கின்றோம்; இது குறித்துப் பேதுரு, இயேசுவினால் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டார் மற்றும் அவரிடம் இயேசு: “சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்” என்றார் (லூக்கா 22:31, 32). அநேக பல தருணங்களில் வெளிப்பட்டதான பரிசுத்தவானாகிய பேதுருவின் தைரியமானது, உண்மையில் அவரது பெலவீனமாகவே இருந்தது. பேதுருவுக்கு வரவிருக்கின்றதான புடைக்கிற அனுபவங்கள் குறித்தெல்லாம் அவரை இயேசு முன்கூட்டியே எச்சரித்தப் பிற்பாடுங்கூட, பரிசுத்தவானாகிய பேதுரு எவ்விதமான அச்சமும், திகிலும் கொண்டிராதவராகவே காணப்பட்டார். ஆகையால் அவர் விழிப்புடனும், ஜெபத்துடனும் இருக்க வேண்டியிருக்க, அவர் விழிப்புடனும், ஜெபத்துடனும் காணப்படாதவராகவே காணப்பட்டார்; சுயத்தின் மீதான நம்பிக்கையானது, அவரை இப்படியாகக் கொஞ்சங்காலம் காணப்பட வழிநடத்தினது.
இதே பரிசுத்தவானாகிய பேதுருதான், இவர் அடுத்தநாள் காலையில், சேவல் கூவுகிறதற்கு முன்பாக நமது கர்த்தரை மறுதலிப்பார் என்று கூறப்பட்டபோது, இது நிச்சயமாய்த் தவறு, காரணம் தன்னுடைய ஆண்டவருக்காக தான் மரிப்பதற்கு ஆயத்தமாய்க் காணப்படுகின்றாரெனக் கூறினார். இதே பரிசுத்தவானாகிய பேதுருதான், தனது பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக் காரனுடைய காதை வெட்டிப் போட்டார் மற்றும் இந்த வேலைக்காரன் பிற்பாடு இயேசுவினால் சொஸ்தமாக்கப்பட்டான். உணர்ச்சிவசப்படுகின்றதான இதே பரிசுத்தவானாகிய பேதுருதான், இயேசுவினுடைய மேசியாத்துவத்தை முதலாவதாக ஒப்புக்கொண்டவராக/தெரிவித்தவராக இருந்தார்.
தம்மைக்குறித்து ஜனங்கள் என்ன கூறுகின்றார்கள், அதாவது தாம் யார் என்று சொல்லுகிறார்களென இயேசு கேட்டார். பின்னர் “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது பரிசுத்தவானாகிய பேதுரு பிரதியுத்தரமாக: “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றார். இந்த ஒரு பதிலானது, பரிசுத்தவானாகிய பேதுரு தேவனுடன் ஓர் ஆசீர்வாதமான உறவின் நிலையில் காணப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றது இல்லையேல், இப்பதிலைக் கொடுப்பதற்கான அறிவு அவருக்கு இருந்திருக்காது என்று இயேசு கூறினார். இயேசு அவரை நோக்கி: “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” என்றார் (மத்தேயு 16:17). சிறந்த பண்புகளுள்ள இதே பாத்திரம், தனது ஆண்டவரை மறுதலிக்கும் அளவுக்கு அதுவும் சாபங்களுடன் மறுதலிக்கும் அளவுக்கு, பயத்தினால் மிகவும் திணறிப்போவார் என்று யாராவது எண்ணியிருந்திருப்பார்களா!
புதிய ஏற்பாட்டினுடைய எழுத்தாளர்கள், உண்மையை எவ்விதமான மாற்றங்கள் செய்யாமலும் அல்லது உண்மையை மறைக்காமலும் பதிவு செய்துள்ளதிலிருந்து, அவர்கள் பெரும்பான்மையான எழுத்தாளர்களிடமிருந்து நிச்சயமாய் மிகவும் வேறுபட்டவர்களாய்க் காணப்படுகின்றனர் என்ற கருத்தானது நம்முடைய மனங்களில் உடனடியாகவும், அழுத்தத்துடனும் பதிகின்ற ஒரு காரியமாய் இருக்கின்றது. இப்படியான விதத்தில், வேதாகமத்தைத் தவிர, வேறு எந்தப் புத்தகமும் நிச்சயமாய்க் காணப்படுவதில்லை. உலகப்பிரகாரமான மகா மத அமைப்புகளையும், பல்வேறு பிரிவினராகிய அமைப்புகளையும் ஸ்தாபித்தவர்கள், மிகவும் வேறுபட்ட ஆவியையே வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களது தலைவர்கள் அனைவரும் சிறந்தவர்களாகவும், தலைச் சிறந்தவர்களாகவும், கல்வியறிவுள்ளவர்களாகவும், வீரர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் – நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், தனது ஆண்டவரைப் பரிசுத்தவானாகிய பேதுரு மறுதலித்ததின் மூலம் வெளிப்படுத்தின பெலவீனங்கள் போன்றதான பெலவீனங்கள் தங்களின் தலைவர்களில் – காணப்பட்டதென அனைவருக்கும் சுட்டிக்காட்ட வேண்டுமென நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்.
இது வேதாகமத்தின் மீதும், அதன் உண்மையின் மீதும், அதன் வாய்மையின் மீதும் நமக்கு நிச்சயமாய் மிகுந்த நம்பிக்கையை உண்டுபண்ணுகின்றதாய் இருக்கின்றது. இப்படியாக தங்களது தவறுகளைக் குறித்து வெளிப்படையாய்க் கூறுகின்றவர்களும், தாங்கள் படிப்பறியாதவர்கள் என்று கூறுகின்றவர்களுமான மனிதர்கள், மகா தைரியமும், மகா உண்மையும், சத்தியத்திற்காக மகா அன்பும் கொண்ட மனிதர்களாக இருக்க வேண்டுமென்ற உண்மையில் நாம் நம்பிக்கைக் கொள்ளலாம். நிச்சயமாய் இவர்களது சாட்சியமானது, ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பாத்திரமானதேயாகும்.
சோதனைகளானது இரகசியமான விதத்தில் வருகின்றதாய் இருக்கின்றது. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதைப் பரிசுத்தவானாகிய பேதுரு வெட்டினபோது, அவர் நமது கர்த்தரை மறுதலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்திருப்பார் என்று நாம் எண்ணவே முடியாது. ஆனால் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் மாறினது. ஆண்டவர் கைதியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முந்தைய தருணங்களிளெல்லாம், அதாவது “அவரது வேளை இன்னும் வராத” காலக்கட்டங்களில், அவர் தமது சத்துருக்கள் மத்தியில் சஞ்சரிக்கத்தக்கதாக, அவரால் செயல்படுத்தப்பட்ட அந்த வல்லமையை, அவர் இப்பொழுது செயல்படுத்தவில்லை, காரணம் “அவரது வேளை வந்துள்ளது.” பரலோகத்தினுடைய நண்பர்கள்/ஆதரவு இல்லாமல், தனது ஆண்டவர், அவரது சத்துருக்கள் வசத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதையும், ஒரு நீதிமன்றத்திலிருந்து, இன்னொரு நீதிமன்றத்திற்கு இப்படியாக அழைத்துக்கொண்டுப் போகப்படுவதையும் பார்த்த பரிசுத்தவானாகிய பேதுரு உறைந்து போனார்.
அரண்மனையிலிருந்த யாரோ ஒருவரோடு பரிசுத்த.யோவானுக்குப் பழக்கம் இருந்ததினால், அவர் உள்ளே பிரவேசிப்பதற்கும், தன்னோடுகூடப் பரிசுத்தவானாகிய பேதுருவை உள்ளே கொண்டுவருவதற்கும் அனுமதிக்கப்பட்டார்; ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குக் காணப்படவில்லை. பரிசுத்தவானாகிய பேதுரு முற்றத்தில் காணப்பட்டார். குளிராய் இருந்தபடியினால், அவர் குளிர்க் காய்ந்துக்கொள்ளத்தக்கதாக, அங்கிருந்த கனல் தட்டை அணுகினார். அரண்மனையின் வேலைக்காரர்கள் பேசிக்கொண்டு காணப்பட்டதான முற்றத்தினுடைய வெளிச்சத்தில், அவர் வேலைக்காரிகளில் ஒருவளால் மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்டார் மற்றும் அவள்: நீயும் அந்த நசரேயனுடைய சீஷரில் ஒருவனல்லவா” என்றாள்.
தான் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டதைக் குறித்துத் திகைப்படைந்தவராகவும், இதனால் தனக்கு என்ன நடக்குமோ என்று யோசித்தவராகவும், பரிசுத்தவானாகிய பேதுரு உடனடியாக, தனக்கு இயேசுவை யார் என்று தெரியாதென மறுத்துவிட்டார். பின்னர் ஜனங்கள் குறைவாகவும், இருளும் நிழலும் அதிகமாகவும் காணப்பட்டதான முற்றத்திலுள்ள மற்றொரு பகுதிக்குச் சென்றுவிட்டார். ஆனால் அவர் மீண்டுமாக கலிலேயன் என்று அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, அவர் இயேசுவின் சீஷர்களில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். மீண்டுமாக அவர் மறுதலித்தார். மூன்றாம் முறையாக அவர் இயேசுவின் சீஷர்களில் ஒருவர் என்றும், ஒரு கலிலேயன் என்றும், அவருடைய பேச்சுபாணியே, அவரைக் காட்டிக் கொடுக்கின்றது என்றும் அதே குற்றச்சாட்டுகள், அவர்மேல் சுமத்தப்பட்டன. மீண்டும் தனது ஆண்டவரைத் தனக்குத் தெரியாது என்று மறுதலித்து, சபித்தார்.
பயங்கரமாயுள்ளது என்றே நாம் இதைக் குறிப்பிட வேண்டும். நிச்சயமாக பரிசுத்தவானாகிய பேதுருவும்கூட, இது பயங்கரமாயிருந்ததாகத்தான் பிற்பாடு எண்ணியிருந்திருப்பார்; ஏனெனில் அவ்வேளையில், அதிகாலையில், சேவல் கூவவே, சாத்தான் பேதுருவைக் கோதுமையைப் புடைக்கின்றதுபோல் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான் என்றும், சேவல் கூவுவதற்கு முன்னதாக, பேதுரு தனது ஆண்டவரை மூன்று முறை மறுதலித்திருந்திருப்பார் என்றுமுள்ள ஆண்டவருடைய வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தார். இவை அனைத்தும் அவரை நொறுக்கினது; அவர் தனது போர்வையினால், தனது தலையைப் போர்த்திக்கொண்டு, மனங்கசந்து அழுதவராக வெளியேறி, இருளில் நடந்துச் சென்றார்; ஏனெனில் சேவல் கூவினபோது, இயேசு பேதுருவிடமிருந்து சற்றுத் தொலைவில் நடத்திச் செல்லப்பட்டுக்கொண்டிருக்க, பேதுரு இயேசுவை ஏறெடுத்துப்பார்த்த போது, ஆண்டவர் தமது கண்களை ஏறெடுத்து, பரிசுத்தவானாகிய பேதுருவைப்பார்த்தார். அது கோபத்துடன்கூடிய ஒரு பார்வையாக இருக்கவில்லை; அது அனுதாபமிக்கப் பார்வையாக இருந்தது; ஆனால் அப்பார்வை பேதுருவின் இருதயத்தைப் போய்த் தொட்டது.
பரிசுத்த பேதுருவின் குற்றம் என்பது, எவ்விதத்திலும் யூதாஸ் செய்த குற்றத்தைப் போன்றதாகக் காணப்படவில்லை; பேதுரு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மாத்திரம் நாடினவராக இருந்தார். அவர் ஆண்டவருக்குப் பாதகம் பண்ணவோ (அ) பாதகம் பண்ணிப் பார்க்கவோ நாடவில்லை. பரிசுத்த பேதுருவினுடைய முழுமையான மனந்திரும்புதலுக்கு, அவர் பிற்பாடு, மரணம் வரையிலும் உண்மையாய் இருந்த காரியம் பலமான சாட்சியமாய் அமைகின்றது. பரிசுத்த பேதுரு சிலுவையில் அறையப்படும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டார் என்றும், தனது ஆண்டவரை தான் ஒருகாலத்தில் மறுதலித்ததை நினைவுகூர்ந்தவராக, தனது கர்த்தர் அடைந்த அதே மரணத்தைப் போன்றதான ஒரு மரணத்தை தான் அடைவது என்பது, தனக்கு மிகவும் பெரிய கனத்தைச் சாற்றுவதாக இருந்துவிடுமெனப் பேதுரு எண்ணினார் என்றும், அவரது வேண்டுகோளின் பேரிலேயே, அவர் தலைக்கீழாகச் சிலுவையில் அறையப்பட்டார் என்றும் பாரம்பரியமானது தெரிவிக்கின்றது.
“தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவன்” என்பதான நமது ஆதார வசனமானது, பரிசுத்த பேதுருவின் அனுபவங்களிலிருந்துள்ள பாடத்தினை அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் புகட்டுகின்றதாய் இருக்கின்றது. நம்முடைய சொந்த கணிப்பில், நாம் பெலவீனர்கள் என்று இருக்கும்போதும், முழு விசுவாசத்துடன் நாம் கர்த்தருடைய கரத்தை இறுக்கிப் பற்றிக்கொண்டிருக்கும் போதும்தான் நாம், தேவன் தமது நித்திய குமாரன் வாயிலாக அளிக்கும் வல்லமையில், உண்மையில் பலவான்களாயிருப்போம். தேவனுடைய ஜனங்களுக்கான அனுபவங்களானது, எவ்வளவு வித்தியாசமானவைகளாகக் காணப்பட்டாலும், முதலாம் உயிர்த்தெழுதலுக்கு முன்னேறிக் கொண்டிருப்பவர்கள், கடுமையான புடைக்கப்படுதல்களைச் சகித்து நிலை நிற்பதற்கும், கர்த்தருக்கான, சத்தியத்திற்கான, சகோதரா சகோதரிகளுக்கான தங்களது அன்பையும், தங்களது உண்மையையும்/நேர்மையையும் நிரூபிப்பதற்கும் எதிர்ப்பார்க்கப்படுவார்கள் என்பது மற்றொரு பாடமாகும்.
கர்த்தர் நம்மீது அக்கறையற்றவராக இருப்பதின் காரணமாக இராமல், மாறாகப் புடைத்தெடுத்தல்களிலும், சோதனைகளிலும் மற்றும் பரீட்சைகளிலும் நிலைநிற்க முடிகின்றவர்களே, இராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்களாய் இருப்பார்கள் என்பதினாலேயே புடைத்தெடுத்தல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடாமல் இருப்போமாக.