R5563 – பரிசுத்தவானாகிய பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5563 (page 319)

பரிசுத்தவானாகிய பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்

ST. PETER SIFTED LIKE WHEAT

மாற்கு 14:27-31,53,54,66-72

“இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” 1 கொரிந்தியர் 10:12

பரிசுத்தவானாகிய பேதுரு மனபலமுடைய, மிகவும் தைரியமுடைய மனுஷனாவார், அதே நேரம் சிந்திக்காமல் செயல்படுகிறவராகவும் காணப்பட்டார். “படிப்பறியாதவர்களென்றும், பேதைமையுள்ளவர்களென்றும்” ஜனங்களால் அடையாளங்கண்டுகொள்ளப்பட்ட இரண்டு சீஷர்களில், பேதுருவும் ஒருவர் ஆவார் (அப்போஸ்தலர் 4:13). சில விஷயங்களில் யூதாசைக் காட்டிலும், பேதுருவுக்குச் சாதகமற்ற, அனுகூலமற்ற சூழ்நிலைக் காணப்பட்டது. எனினும் இருவரும் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் சரிசமமான வாய்ப்புகளைப் பெற்றவர்களாய் இருந்தார்கள்; எனினும் இந்த இரண்டு மனிதர்களுடைய முடிவும் எத்துணை வித்தியாசத்துடன் காணப்பட்டது. ஒருவர் இழிவான இரண்டாம் மரணத்திற்குள் கடந்துச்சென்றார். மற்றொருவரோ சோதனையிலும், பயிற்சியிலும் மேலும், கீழும் ஏறி இறங்கினவராகக் கடந்துச்சென்ற பிற்பாடு, தனது ஆண்டவரோடுகூட மகிமை, கனம் மற்றும் அழியாமை எனும் பலன்களில் பங்கடைந்தார் மற்றும் அப்போஸ்தலர்கள் மத்தியிலும் உயர்வானவராய்க் கருதப்பட்டார்.

நமது கர்த்தருடைய மரணத்தின் காலக்கட்டத்தில் பரிசுத்தவானாகிய பேதுருவுக்கு வந்திட்டதான விசேஷமான “புடைத்தல்களைக்” குறித்தே நம்முடைய இன்றைய பாடத்தில் பார்க்கவிருக்கின்றோம்; இது குறித்துப் பேதுரு, இயேசுவினால் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டார் மற்றும் அவரிடம் இயேசு: “சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்” என்றார் (லூக்கா 22:31, 32). அநேக பல தருணங்களில் வெளிப்பட்டதான பரிசுத்தவானாகிய பேதுருவின் தைரியமானது, உண்மையில் அவரது பெலவீனமாகவே இருந்தது. பேதுருவுக்கு வரவிருக்கின்றதான புடைக்கிற அனுபவங்கள் குறித்தெல்லாம் அவரை இயேசு முன்கூட்டியே எச்சரித்தப் பிற்பாடுங்கூட, பரிசுத்தவானாகிய பேதுரு எவ்விதமான அச்சமும், திகிலும் கொண்டிராதவராகவே காணப்பட்டார். ஆகையால் அவர் விழிப்புடனும், ஜெபத்துடனும் இருக்க வேண்டியிருக்க, அவர் விழிப்புடனும், ஜெபத்துடனும் காணப்படாதவராகவே காணப்பட்டார்; சுயத்தின் மீதான நம்பிக்கையானது, அவரை இப்படியாகக் கொஞ்சங்காலம் காணப்பட வழிநடத்தினது.

இதே பரிசுத்தவானாகிய பேதுருதான், இவர் அடுத்தநாள் காலையில், சேவல் கூவுகிறதற்கு முன்பாக நமது கர்த்தரை மறுதலிப்பார் என்று கூறப்பட்டபோது, இது நிச்சயமாய்த் தவறு, காரணம் தன்னுடைய ஆண்டவருக்காக தான் மரிப்பதற்கு ஆயத்தமாய்க் காணப்படுகின்றாரெனக் கூறினார். இதே பரிசுத்தவானாகிய பேதுருதான், தனது பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக் காரனுடைய காதை வெட்டிப் போட்டார் மற்றும் இந்த வேலைக்காரன் பிற்பாடு இயேசுவினால் சொஸ்தமாக்கப்பட்டான். உணர்ச்சிவசப்படுகின்றதான இதே பரிசுத்தவானாகிய பேதுருதான், இயேசுவினுடைய மேசியாத்துவத்தை முதலாவதாக ஒப்புக்கொண்டவராக/தெரிவித்தவராக இருந்தார்.

தம்மைக்குறித்து ஜனங்கள் என்ன கூறுகின்றார்கள், அதாவது தாம் யார் என்று சொல்லுகிறார்களென இயேசு கேட்டார். பின்னர் “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது பரிசுத்தவானாகிய பேதுரு பிரதியுத்தரமாக: “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றார். இந்த ஒரு பதிலானது, பரிசுத்தவானாகிய பேதுரு தேவனுடன் ஓர் ஆசீர்வாதமான உறவின் நிலையில் காணப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றது இல்லையேல், இப்பதிலைக் கொடுப்பதற்கான அறிவு அவருக்கு இருந்திருக்காது என்று இயேசு கூறினார். இயேசு அவரை நோக்கி: “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” என்றார் (மத்தேயு 16:17). சிறந்த பண்புகளுள்ள இதே பாத்திரம், தனது ஆண்டவரை மறுதலிக்கும் அளவுக்கு அதுவும் சாபங்களுடன் மறுதலிக்கும் அளவுக்கு, பயத்தினால் மிகவும் திணறிப்போவார் என்று யாராவது எண்ணியிருந்திருப்பார்களா!

புதிய ஏற்பாட்டினுடைய எழுத்தாளர்கள், உண்மையை எவ்விதமான மாற்றங்கள் செய்யாமலும் அல்லது உண்மையை மறைக்காமலும் பதிவு செய்துள்ளதிலிருந்து, அவர்கள் பெரும்பான்மையான எழுத்தாளர்களிடமிருந்து நிச்சயமாய் மிகவும் வேறுபட்டவர்களாய்க் காணப்படுகின்றனர் என்ற கருத்தானது நம்முடைய மனங்களில் உடனடியாகவும், அழுத்தத்துடனும் பதிகின்ற ஒரு காரியமாய் இருக்கின்றது. இப்படியான விதத்தில், வேதாகமத்தைத் தவிர, வேறு எந்தப் புத்தகமும் நிச்சயமாய்க் காணப்படுவதில்லை. உலகப்பிரகாரமான மகா மத அமைப்புகளையும், பல்வேறு பிரிவினராகிய அமைப்புகளையும் ஸ்தாபித்தவர்கள், மிகவும் வேறுபட்ட ஆவியையே வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களது தலைவர்கள் அனைவரும் சிறந்தவர்களாகவும், தலைச் சிறந்தவர்களாகவும், கல்வியறிவுள்ளவர்களாகவும், வீரர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் – நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், தனது ஆண்டவரைப் பரிசுத்தவானாகிய பேதுரு மறுதலித்ததின் மூலம் வெளிப்படுத்தின பெலவீனங்கள் போன்றதான பெலவீனங்கள் தங்களின் தலைவர்களில் – காணப்பட்டதென அனைவருக்கும் சுட்டிக்காட்ட வேண்டுமென நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்.

இது வேதாகமத்தின் மீதும், அதன் உண்மையின் மீதும், அதன் வாய்மையின் மீதும் நமக்கு நிச்சயமாய் மிகுந்த நம்பிக்கையை உண்டுபண்ணுகின்றதாய் இருக்கின்றது. இப்படியாக தங்களது தவறுகளைக் குறித்து வெளிப்படையாய்க் கூறுகின்றவர்களும், தாங்கள் படிப்பறியாதவர்கள் என்று கூறுகின்றவர்களுமான மனிதர்கள், மகா தைரியமும், மகா உண்மையும், சத்தியத்திற்காக மகா அன்பும் கொண்ட மனிதர்களாக இருக்க வேண்டுமென்ற உண்மையில் நாம் நம்பிக்கைக் கொள்ளலாம். நிச்சயமாய் இவர்களது சாட்சியமானது, ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பாத்திரமானதேயாகும்.

பரிசுத்தவானாகிய பேதுருவின் சோதனை எதிர்பாராமல் வந்தது

சோதனைகளானது இரகசியமான விதத்தில் வருகின்றதாய் இருக்கின்றது. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதைப் பரிசுத்தவானாகிய பேதுரு வெட்டினபோது, அவர் நமது கர்த்தரை மறுதலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்திருப்பார் என்று நாம் எண்ணவே முடியாது. ஆனால் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் மாறினது. ஆண்டவர் கைதியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முந்தைய தருணங்களிளெல்லாம், அதாவது “அவரது வேளை இன்னும் வராத” காலக்கட்டங்களில், அவர் தமது சத்துருக்கள் மத்தியில் சஞ்சரிக்கத்தக்கதாக, அவரால் செயல்படுத்தப்பட்ட அந்த வல்லமையை, அவர் இப்பொழுது செயல்படுத்தவில்லை, காரணம் “அவரது வேளை வந்துள்ளது.” பரலோகத்தினுடைய நண்பர்கள்/ஆதரவு இல்லாமல், தனது ஆண்டவர், அவரது சத்துருக்கள் வசத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதையும், ஒரு நீதிமன்றத்திலிருந்து, இன்னொரு நீதிமன்றத்திற்கு இப்படியாக அழைத்துக்கொண்டுப் போகப்படுவதையும் பார்த்த பரிசுத்தவானாகிய பேதுரு உறைந்து போனார்.

அரண்மனையிலிருந்த யாரோ ஒருவரோடு பரிசுத்த.யோவானுக்குப் பழக்கம் இருந்ததினால், அவர் உள்ளே பிரவேசிப்பதற்கும், தன்னோடுகூடப் பரிசுத்தவானாகிய பேதுருவை உள்ளே கொண்டுவருவதற்கும் அனுமதிக்கப்பட்டார்; ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குக் காணப்படவில்லை. பரிசுத்தவானாகிய பேதுரு முற்றத்தில் காணப்பட்டார். குளிராய் இருந்தபடியினால், அவர் குளிர்க் காய்ந்துக்கொள்ளத்தக்கதாக, அங்கிருந்த கனல் தட்டை அணுகினார். அரண்மனையின் வேலைக்காரர்கள் பேசிக்கொண்டு காணப்பட்டதான முற்றத்தினுடைய வெளிச்சத்தில், அவர் வேலைக்காரிகளில் ஒருவளால் மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்டார் மற்றும் அவள்: நீயும் அந்த நசரேயனுடைய சீஷரில் ஒருவனல்லவா” என்றாள்.

தான் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டதைக் குறித்துத் திகைப்படைந்தவராகவும், இதனால் தனக்கு என்ன நடக்குமோ என்று யோசித்தவராகவும், பரிசுத்தவானாகிய பேதுரு உடனடியாக, தனக்கு இயேசுவை யார் என்று தெரியாதென மறுத்துவிட்டார். பின்னர் ஜனங்கள் குறைவாகவும், இருளும் நிழலும் அதிகமாகவும் காணப்பட்டதான முற்றத்திலுள்ள மற்றொரு பகுதிக்குச் சென்றுவிட்டார். ஆனால் அவர் மீண்டுமாக கலிலேயன் என்று அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, அவர் இயேசுவின் சீஷர்களில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். மீண்டுமாக அவர் மறுதலித்தார். மூன்றாம் முறையாக அவர் இயேசுவின் சீஷர்களில் ஒருவர் என்றும், ஒரு கலிலேயன் என்றும், அவருடைய பேச்சுபாணியே, அவரைக் காட்டிக் கொடுக்கின்றது என்றும் அதே குற்றச்சாட்டுகள், அவர்மேல் சுமத்தப்பட்டன. மீண்டும் தனது ஆண்டவரைத் தனக்குத் தெரியாது என்று மறுதலித்து, சபித்தார்.

பயங்கரமாயுள்ளது என்றே நாம் இதைக் குறிப்பிட வேண்டும். நிச்சயமாக பரிசுத்தவானாகிய பேதுருவும்கூட, இது பயங்கரமாயிருந்ததாகத்தான் பிற்பாடு எண்ணியிருந்திருப்பார்; ஏனெனில் அவ்வேளையில், அதிகாலையில், சேவல் கூவவே, சாத்தான் பேதுருவைக் கோதுமையைப் புடைக்கின்றதுபோல் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான் என்றும், சேவல் கூவுவதற்கு முன்னதாக, பேதுரு தனது ஆண்டவரை மூன்று முறை மறுதலித்திருந்திருப்பார் என்றுமுள்ள ஆண்டவருடைய வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தார். இவை அனைத்தும் அவரை நொறுக்கினது; அவர் தனது போர்வையினால், தனது தலையைப் போர்த்திக்கொண்டு, மனங்கசந்து அழுதவராக வெளியேறி, இருளில் நடந்துச் சென்றார்; ஏனெனில் சேவல் கூவினபோது, இயேசு பேதுருவிடமிருந்து சற்றுத் தொலைவில் நடத்திச் செல்லப்பட்டுக்கொண்டிருக்க, பேதுரு இயேசுவை ஏறெடுத்துப்பார்த்த போது, ஆண்டவர் தமது கண்களை ஏறெடுத்து, பரிசுத்தவானாகிய பேதுருவைப்பார்த்தார். அது கோபத்துடன்கூடிய ஒரு பார்வையாக இருக்கவில்லை; அது அனுதாபமிக்கப் பார்வையாக இருந்தது; ஆனால் அப்பார்வை பேதுருவின் இருதயத்தைப் போய்த் தொட்டது.

பரிசுத்த பேதுருவின் குற்றம் என்பது, எவ்விதத்திலும் யூதாஸ் செய்த குற்றத்தைப் போன்றதாகக் காணப்படவில்லை; பேதுரு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மாத்திரம் நாடினவராக இருந்தார். அவர் ஆண்டவருக்குப் பாதகம் பண்ணவோ (அ) பாதகம் பண்ணிப் பார்க்கவோ நாடவில்லை. பரிசுத்த பேதுருவினுடைய முழுமையான மனந்திரும்புதலுக்கு, அவர் பிற்பாடு, மரணம் வரையிலும் உண்மையாய் இருந்த காரியம் பலமான சாட்சியமாய் அமைகின்றது. பரிசுத்த பேதுரு சிலுவையில் அறையப்படும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டார் என்றும், தனது ஆண்டவரை தான் ஒருகாலத்தில் மறுதலித்ததை நினைவுகூர்ந்தவராக, தனது கர்த்தர் அடைந்த அதே மரணத்தைப் போன்றதான ஒரு மரணத்தை தான் அடைவது என்பது, தனக்கு மிகவும் பெரிய கனத்தைச் சாற்றுவதாக இருந்துவிடுமெனப் பேதுரு எண்ணினார் என்றும், அவரது வேண்டுகோளின் பேரிலேயே, அவர் தலைக்கீழாகச் சிலுவையில் அறையப்பட்டார் என்றும் பாரம்பரியமானது தெரிவிக்கின்றது.

அனைத்துக் கிறிஸ்தவர்களுக்குமான பாடம்

“தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவன்” என்பதான நமது ஆதார வசனமானது, பரிசுத்த பேதுருவின் அனுபவங்களிலிருந்துள்ள பாடத்தினை அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் புகட்டுகின்றதாய் இருக்கின்றது. நம்முடைய சொந்த கணிப்பில், நாம் பெலவீனர்கள் என்று இருக்கும்போதும், முழு விசுவாசத்துடன் நாம் கர்த்தருடைய கரத்தை இறுக்கிப் பற்றிக்கொண்டிருக்கும் போதும்தான் நாம், தேவன் தமது நித்திய குமாரன் வாயிலாக அளிக்கும் வல்லமையில், உண்மையில் பலவான்களாயிருப்போம். தேவனுடைய ஜனங்களுக்கான அனுபவங்களானது, எவ்வளவு வித்தியாசமானவைகளாகக் காணப்பட்டாலும், முதலாம் உயிர்த்தெழுதலுக்கு முன்னேறிக் கொண்டிருப்பவர்கள், கடுமையான புடைக்கப்படுதல்களைச் சகித்து நிலை நிற்பதற்கும், கர்த்தருக்கான, சத்தியத்திற்கான, சகோதரா சகோதரிகளுக்கான தங்களது அன்பையும், தங்களது உண்மையையும்/நேர்மையையும் நிரூபிப்பதற்கும் எதிர்ப்பார்க்கப்படுவார்கள் என்பது மற்றொரு பாடமாகும்.

கர்த்தர் நம்மீது அக்கறையற்றவராக இருப்பதின் காரணமாக இராமல், மாறாகப் புடைத்தெடுத்தல்களிலும், சோதனைகளிலும் மற்றும் பரீட்சைகளிலும் நிலைநிற்க முடிகின்றவர்களே, இராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்களாய் இருப்பார்கள் என்பதினாலேயே புடைத்தெடுத்தல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடாமல் இருப்போமாக.