R2115 (page 68)
நமது கர்த்தரினால் நிறுவப்பட்டதும், அப்போஸ்தலர்களாலும், ஆதித் திருச்சபையாராலும் தொடரப்பட்டதுமான நினைவுகூருதல் இராப்போஜனமானது, பஸ்கா இராப்போஜனத்திற்குப்பதிலாக யூதருடைய முதல் மாதமாகிய நீசான் 14-ஆம் தேதியன்று இடம் பெற்றதாய் இருக்கின்றது. ஆதித் திருச்சபையாருடைய இந்த வழக்கமானது இன்றும் ஆங்கில, ரோம, கிரேக்க, அர்மேனிய மற்றும் மற்ற “கத்தோலிக்க” திருச்சபைகளினாலும், லூதரன் திருச்சபைகளாலும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் அப்போஸ்தலர்களுடைய மரணத்திற்குப் பின்னர் உடனடியாகச் சடங்கு, ஆச்சாரங்களானது படிப்படியாக உட்புகுந்து, மிகவும் பெரியளவில் உண்மையான, எளிமையான நினைவுகூருதல் வேறுமாதிரியாக்கிவிட்டது. பின்னர் பூசைபலி எனும் கருத்துக்கூட மலர்ந்தது; அதாவது ஆசரிப்பை குறிப்பிட்ட பாவங்களுக்கான மன்னிப்பிற்காகக் கிறிஸ்துவை மீண்டும், மீண்டுமாகக் பலிச்செலுத்தும் திருப்பலி/பூசைபலி எனும் கருத்துக்கூட மலர்ந்தது. பூசைபலி என்பது கல்வாரியில் நடைப்பெற்றதான மாபெரும் பலியினுடைய நினைவுகூருதல்கள் இல்லை மற்றும் அடையாளமான விதத்திலான பலிகளும் இல்லை, மாறாக அது புதிதாயும் மற்றும் உண்மையாயும் பலி செலுத்துதலைக் குறிக்கின்றதாகும். பூசைபலியானது எந்தக் குறிப்பிட்ட பாவங்களுக்காக ஏறெடுக்கப்படுகின்றதோ, அந்தப் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, கிறிஸ்துவைக் குருவானவர் புதிதாய்ப் பலியிடத்தக்கதாக, சாதாரணமான அப்பத்தையும், திராட்சரசத்தையும் கிறிஸ்துவின் நிஜமான சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றிடுவதற்குக் குருவானவர் விசேஷமாய்ப் பணியமர்த்தப்பட்டிருக்கின்றார். இந்தப் பூசைபலியானது – எந்த ஒரு நாளினுடைய (அ) இரவினுடைய எந்த ஒரு வேளையிலும் அனுசரிக்கப்படலாம் என்ற காரியம் தவிர, மற்றப்படி அநேக விதங்களில் நினைவுகூருதலின் இராப்போஜனத்தை நிறுவினப்போது, கர்த்தர் அப்பத்தையும், திராட்சரசத்தையும் பிட்டு, ஆசீர்வதித்தையே விவரிப்பதுபோன்று தோன்றுகின்றதாய் இருக்கின்றது.
இது தொடர்புடைய விஷயத்தில் சுமார் ஆயிரம் வருடங்களாகக் காணப்பட்டதான தவறானப் போதனைகள் மற்றும் தவறான அனுசரிப்புகளுக்குப் பிற்பாடு புராட்டஸ்டண்டினர்கள் விழித்தெழுந்து, “பூர்வ பாதைகளைக்” கண்டுபிடிப்பதற்கென நாடினபோது, அவர்கள் இந்த விஷயத்திலும், மற்ற விஷயங்களிலும் போப்மார்க்கத்தின் தப்பறைகள் அனைத்தையும் கண்டுபிடிக்கத் தவறினதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவர்கள் பாவங்களுக்கான கூடுதல் பலிகள் என்ற (பாழாக்கும் அருவருப்பு என்று வேதவாக்கியங்களில் அழைக்கப்படுகின்றதான) போப்மார்க்கத்தின் பூசைபலியினை விலக்கிவிட்டாலும் மற்றும் “பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் (கிறிஸ்து) என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்” என்று நம்பினாலும் மற்றும் கற்பித்தாலும், இவர்கள் திருவிருந்து என்று அழைக்கின்ற ஆசரிப்பின் விஷயத்தில் அடிக்கடி ஆசரிக்கும் காரியமானது, பூசை பலி அடிக்கடி ஆசரிப்பதுபோன்றது என்கிறதும், நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாளே, [R2115 : page 69] அதன் நினைவுகூருதலை ஆசரிப்பதற்கான ஏற்ற ஒரேவேளை மற்றும் நியமிக்கப்பட்ட ஒரேவேளை என்கிறதுமான உண்மைகளைக் காணத்தவறினவர்களாகக் காணப்படுகின்றனர். (எபிரெயர் 10:14)
ஆகையால் சிலர் இதை வருடத்திற்கு மூன்றுமுறை என்றும், சிலர் நான்குமுறை என்றும், சிலர் வாரந்தோறும் என்றும் ஆசரிக்கின்றனர். “அடிக்கடி ஆசரிப்பதே சிறந்தது” என்ற வாதம் சரியானதாய் இருக்குமானால், ஏன் தினந்தோறும் அதை அவர்கள் ஆசரிக்கக்கூடாது? ஏதேனும் வேளையில் அது உண்மையாய்ச் செய்யப்படும்போது, அது பூசைபலிபோன்று பாவமான அருவருப்பு என்று நம்மால் சொல்லமுடியாது என்றாலும், இன்றைய நாட்களின் மனிதர்கள் நமது கர்த்தரையும், சபையின் தேவ ஏவுதலின் பேரிலான போதகர்களாகிய அப்போஸ்தலர்களைக் காட்டிலும் ஞானவான்கள் இல்லை என்பதிலும், ஆதி நிறுவுதலின் காரியங்களிலிருந்து எதிலாகிலும் மாறுவது என்பது பாதகமானதாகவே இருக்கும் என்பதிலும் நமக்கு நிச்சயமே. நினைவுகூரப்படும் காரியத்திற்குச் சம்பந்தமில்லாமல் திரும்பத்திரும்ப ஆசரிக்கப்படுவதின் காரணமாக இந்நிகழ்வானது, அதன் முக்கியத்துவத்தையும், அதன் தாக்கத்தினையும் இழந்துபோகின்றது. தேசம் சார்ந்த நினைவுகூருதல்களானது, வருடத்திற்கு மூன்று முதல் ஐம்பது முறைகள் திரும்பத்திரும்பக் கொண்டாடப்பட்டால், அவைகள் எந்த முக்கியத்துவத்தை மனதில் பதியத்தக்கதாக கொடுக்கப்பட்டதோ, அந்த முக்கியத்துவத்தை எவ்வளவாய் இழந்துபோகின்றதாய் இருக்கும்! உதாரணத்திற்கு ஜூலை 4-ஆம் தேதியானது, ஐக்கிய நாடுகளினுடைய அரசாங்கம் நிறுவப்பட்டதாகிய மாபெரும் நிகழ்வின் தேதியாகும் மற்றும் இது பொதுவாய்க் கொண்டாடப்படுகின்றது. ஒருவேளை இது வாரந்தோறும் (அ) காலாண்டுதோறும் கொண்டாடப்பட்டால், இப்படிச் செய்வதென்பது இதன் முக்கியத்துவத்தையும், தாக்கத்தினையும் இழக்கச்செய்கிறதாய் இருக்குமல்லவா? நிச்சயமாகவே ஆகும்; இப்படியாகவே நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதலின் விஷயத்திலாகும்; இதன் ஆண்டு நிறைவு நாளே, இது ஆசரிக்கப்படுவதற்கு ஏற்ற ஒன்றாகவும், நியமிக்கப்பட்ட ஒன்றாகவும் காணப்படுகின்றது. ஆதியில் நிறுவப்பட்ட விதம் கவனிக்கத்தவறப்பட்டபோது, பரவலாய்க் கவனமின்மையும், அலட்சியத்தன்மையும் ஏற்பட்டது; இதனால் இது எப்போதும் வேதவாக்கியங்களில் “இராப்போஜனம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், இது இப்பொழுது பொதுவாய் மதியவேளையில் ஆசரிக்கப்படுகின்றது மற்றும் ஒருபோதும் இதன் மாதிரிபடி இராப்போஜனமாக (அ) மாலை உணவாகப் புசிக்கப்படுவதில்லை.
“ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:26) என்ற வார்த்தைகளானது, “இதை உங்கள் விருப்பத்திற்கேற்ப அடிக்கடி செய்யுங்கள்” என்ற அர்த்தத்தைக் கொடுப்பதாக அநேகரால் தவறாய்ப் புரிந்துகொள்ளப்படுகின்றது. ஆனால் “இதை” என்ற வார்த்தைக்கே கவனம் கொடுக்கப்பட வேண்டும்; நமது கர்த்தரினால் நிறுவப்பட்டதான இந்த வருடாந்தர நினைவுகூருதலை, நீங்கள் ஆசரிக்கும்போதெல்லாம், நீங்கள் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள் மற்றும் இப்படியாக அவரது இரண்டாம் வருகைவரையிலும், அதாவது நினைவுகூருதலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதான அனைத்தும் முடிவடைகின்ற (அ) நிறைவேறி தீருகின்றதான காலப்பகுதியாகிய, அவரது இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு, நீங்கள் மகிமையடையும் காலம்வரை செய்யவேண்டும்.
தேவனுடைய ஜனங்களானவர்கள் “பூர்வ பாதைகளை” நாடுகின்றபடியால் (எரேமியா 6:16), தற்காலத்தினுடைய சத்தியத்தின் வெளிச்சமானது பரவுகையில், மீட்பின் மைய உண்மையை (மாபெரும் பாவநிவாரண பலியை) அதன் ஆண்டு நிறைவு நாளில் ஆசரிப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துவருகின்றது; அநேகமாக 5-ஆம் நூற்றாண்டிலிருந்து இதுவரைக்கும் காணப்பட்டதிலும், அதிகமான எண்ணிக்கையில், இந்த வருடம், தேவனுடைய ஜனங்கள் தங்கள் மீட்பரை நினைவுகூரும் வகையில் அவரது மரணத்தினுடைய ஆண்டு நிறைவு நாளில் “இதைச் செய்வார்கள்.”
ஆண்டு நிறைவு நாளை கணக்கிடும் முறைமையை “கத்தோலிக்க” திருச்சபைகள் கொஞ்சம் மாற்றிக்கொண்டதால் அவர்கள் எப்போதுமே ஒரு வெள்ளிக்கிழமையை, நம்முடைய கர்த்தருடைய மரணத்திற்கென்றும் (புனித வெள்ளி என்றும்), தொடந்துவரும் ஞாயிற்றுக்கிழமையை, அவரது உயிர்த்தெழுதலுக்கென்றும் (ஈஸ்டர் ஞாயிறு என்றும்) ஆசரிக்கின்றனர். வராத்தினுடைய குறிப்பிட்ட சில நாட்கள் என்று கவனம்கொடுக்காமல், ஆதித்திருச்சபையினர் யூதருடைய கணக்கிடுதல் முறைமையையே பின்பற்றினார்கள் மற்றும் நாமும் அப்படியாகவே செய்கின்றோம். சிலரால் பின்வருமாறு கூறப்படுகின்றது: அதாவது இளவேனிற் சம இரவு பகல் நாளில் (அ) இதற்குப் பின்னர் உள்ள அமாவாசையுடன், ஒவ்வொரு வசந்த/இளவேனிற் காலத்திலும், யூதர்கள் மாதங்களினுடைய ஆரம்பத்தினைச் சடுதியாய்/திடீரென்று பெற்றிருப்பதினால், பொதுவாகவே ஓய்வுநாளாகவும், ஒரு சுற்றினுடைய புதிய ஆரம்பமுமான பஸ்காவின் துவக்கத்துடன், வாரத்திற்கான துவக்கம் திடீரென்று துவங்குகின்றது; எப்படியாக இருப்பினும், அவர்களது பஸ்கா வராமானது எப்போதும் தெய்வீகக் கட்டளையின்பேரில் நீசான் 15-ஆம் தேதியன்றே ஆரம்பமானது (யாத்திராகமம் 12; எண்ணாகமம் 28:16,17).
கிறிஸ்தவர்களாகிய நாமோ, பஸ்கா வாரத்தினை ஆசரிப்பதில்லை. பஸ்கா வாரத்திற்கான நிஜமானது, இராஜ்யத்தின் மகிமை எதிர்க்காலத்தில் அனுபவிக்கப்படும்போது நிறைவேறுகின்றதாய் இருக்கும். யூதர்கள் அவ்வளவுக்குக் கவனம் செலுத்தாத (அ) கவனமே செலுத்தாத நீசான் 14-ஆம் தேதியையே நாம் ஆசரிக்கின்றோம். நீசான் 14-ஆம் தேதியானது பொதுவாய் ஆசரிக்கப்பட்டு வந்ததாய்த் தோன்றுகின்றது; ஆனால் யூதர்கள் நேரத்தின் விஷயத்தில் அதிருப்திக்கொண்டு, தொழிலில் ஈடுபடுவதற்கு ஒருநாளை கூடப்பெற்றுக் கொள்ளத்தக்கதாக, இராப்போஜனத்தையும் 15-ஆம் தேதியுடன் கூடத் திணித்துக்கொண்டார்கள். 14-ஆம் தேதியில் பஸ்கா ஆட்டுக்குட்டியினை அடிப்பதும், புசிப்பதும் இரண்டும் செய்யப்படுவது சரியே; ஏனெனில் இப்படியே நமது கர்த்தரும், பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் செய்தார்கள் மற்றும் அதே நாளில்தானே நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்; இதனை மாலை 6 மணியோடு ஒவ்வொரு நாளையும் துவக்கும் யூதருடைய கால ஏற்பாடானது சாத்தியமாக்கிற்று (லேவியராகமம் 23:5,6).
யூதருடைய கணக்கீட்டுமுறைமையின்படி கணக்கிடும்போது, நீசான் 14-ஆம் தேதியானது, இந்த வருடம் ஏப்ரல் 15-ஆம் தேதி, வியாழன் அன்று, மாலை 6 மணிக்குத் துவங்குகின்றது. இரவு 8 மணிக்கு, அலிகெனியிலுள்ள (Allegheny) சிறு கூட்டத்தாரையும் உள்ளடக்கின நிலையில், உலகமெங்கும் காணப்படுகின்றதான உண்மையுள்ள கிறிஸ்தவர்களாகிய கொஞ்சம்பேர், நம்மை அன்புகூர்ந்தவரும், நமக்காகத் தம்மையே கொடுத்தவருமானவரை நன்றியோடு நினைவுகூரும் வகையிலும், இந்தத் தற்காலத்தின் பாடுகளிலும், சோதனைகளிலும், அவரோடும், அவருடையவர்கள் அனைவரோடும்கூட ஐக்கியப்படுவதற்கு உறுதிகொடுக்கும் வகையிலும், எதிர்க்காலத்தில் அவரது மகிமையில் ஐக்கியப்படுவதற்கான நமது நம்பிக்கைகளைத் தெரியப்படுத்தும் வகையிலும் நினைவுகூருதலின் அப்பத்தைப்பிட்டு, நினைவுகூருதலின் திராட்சப்பழரசத்தைச் சுவைப்பார்கள். வாசகனே, நீ அந்த வேளையில் எங்களோடு கலந்துகொள்ள மாட்டாயா? தனிமையில் ஆசரித்தாலும் சரி, சிறுசிறு கூட்டத்தினராய் ஆசரித்தாலும் சரி, பல நூறு மைல்கள் தொலைதூரத்தில் ஆசரித்தாலும் சரி, நாம் நிச்சயமாய் விசேஷித்த ஆசீர்வாதத்ததைப் பெற்றுக் கொள்வோம்; மற்றும் இதை நாம் நாடுவோமானால், சந்தேகத்திற்கிடமின்றி நாம் நமது பரலோக மணவாளனுக்கு விசேஷமாய் அருகாமையில் வரவேற்கப்படுவோம் மற்றும் அவரது சிலுவையைச் சுமப்பதற்கும், பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்பதற்கும் விசேஷமாய்ப் பலப்படுத்தப்படுவோம்.
இரண்டு விசேஷித்த காரணங்களினிமித்தமாக முன் காலத்தில் செய்ததுபோன்று பொதுவான கூடுகை கூடுவதற்கு இத்தருணத்தில் நாம் அழைப்புவிடுப்பதில்லை; அந்தக் காரணங்கள் பின்வருமாறு: (1) முன்புபோல் வருபவர்களை உபசரிக்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் காணப்படுகின்றோம்; மற்றும் (2) இந்த ஒரு தருணத்தின்போது ஒவ்வொரு சிறுசிறு கூட்டத்தாரும் கூடிக்கொள்வது நன்மை பயக்கின்றதாய் இருக்கின்றது என்று நாங்கள் நம்புகின்றோம். ஒவ்வொரு குடும்பமும் ஒன்றுகூட வேண்டுமென்பதே யூதருக்கான பிரமாணமாய் இருந்தது; மற்றும் இதுவே நமக்கும் ஏற்றதாகவும், நன்மை பயக்கின்றதாகவும் இருக்கும்.
இதற்குமுன் நாம் சுட்டிக்காண்பித்துள்ளதுபோன்று கர்த்தருடைய ஜனங்களில் எவர் வேண்டுமானாலும், கூட்டத்தாரின் விருப்பப்படி, நமது ஆண்டவருடைய பிட்கப்பட்ட சரீரத்திற்கும், சிந்தப்பட்ட இரத்தத்திற்குமான அடையாளங்களைப் பரிமாறலாம். “குருமார் வகுப்பார்” மற்றும் “சாதாரண ஜனங்கள் வகுப்பார்” என்ற வித்தியாசங்கள் எல்லாம் தேவனால் உண்டானவையல்ல. மாறாக மனிதனால் தவறாய் எடுத்துக்கொள்ளப்பட்டவையாகும். அடையாளங்களை எடுப்பதற்கும், புசிப்பதற்கும், பானம்பண்ணுவதற்கும், பரிமாறுவதற்கும், உண்மையான “சீஷர்கள்” அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். கத்தோலிக்க பாதிரிமார்கள் தாங்கள் செய்வதாகக் கூறிக்கொள்வதுபோன்று, எந்த ஒரு மனிதனுக்கும் அப்பத்திலிருந்தும், திராட்சரசத்திலிருந்தும் தேவனை சிருஷ்டிக்க வேண்டுமானால் அதிக அளவிலான அதிகாரமும், நியமனமும் [R2115 : page 70] அவசியமாயிருக்கும்; ஆனால் இந்த அருமையான நினைவுகூருதல் தொடர்புடையதாக நமது கர்த்தர் கொடுத்த கட்டளை எதையும் மற்றும் அனைத்தையும் முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ள, தாழ்மையுள்ள விசுவாசி மாத்திரமே செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றான். ஆகையால் அவருடையவர்களும், அவரது ஏற்பாட்டினுடைய அருமையைக் காண்கின்றவர்களுமாகிய நாம் அனைவரும் கீழ்ப்படிந்து, அவரை நினைவுகூரும்படியாக “இதைச் செய்வோமாக.” புளிப்பு அடையாளப்படுத்துகின்றதான பாவத்திலிருந்து கர்த்தர் விலகினவர் என்பதற்கும், அவரது தூய்மைக்கும் அடையாளமாகப் புளிப்பற்ற அப்பத்தைப் [R2116 : page 70] பயன்படுத்துவது சிறந்தது. திராட்சப்பழரசம் (fruit of the vine) என்பது திராட்சரசமாகும் (wine) அல்லது (ஏற்றது என்று நாம் எண்ணுவது என்னவெனில்) புளிப்பற்ற திராட்சப்பழச்சாறு (அ) நீருடன் வேகவைக்கப்பட்ட உலர்த்திராட்சச்சாறாகும்; “திராட்சப்பழரசம்” (fruit of the vine) என்பது விரிவான அர்த்தம் கொண்ட வார்த்தையாகும்.
நிழலில் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் மாத்திரமே பஸ்கா இராப்போஜனத்தைப் புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதன் நிஜம் இருதய விருத்தசேதனம் ஆகும்; அதாவது அப்போஸ்தலன் விவரிப்பது, சுட்டிக்காட்டுவது போன்று கர்த்தருக்கான முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் பாவத்திலிருந்தும், மாம்சத்திலிருந்தும் விலகியிருத்தலும் ஆகும். அவரோடுகூடப் பிட்கப்படுவதற்கும், அவரது பாடுகளின் பாத்திரத்திலும், சுயத்தை வெறுத்தலிலும் பங்கடைவதற்கும் என்று அர்ப்பணம் பண்ணியுள்ளவர்கள் மாத்திரமே உண்மையாய்ச் “சீஷர்களாய்” இருக்கின்றார்கள் என்றும், “இதைச் செய்வதற்கு” அழைக்கப்படுகின்றார்கள் என்றும் நாம் கவனிப்போமாக. மத்தேயு 20:22,23-ஆம் வசனங்களைப்பார்க்கவும்.
விருத்தசேதனம் பண்ணியுள்ளவர்கள்கூடத் தங்கள் குடியிருப்புகளைச் சுத்திகரிக்க வேண்டும் மற்றும் புளிப்பினால் அடையாளப்படுத்தப்படும் பாவத்தை நீக்கிப்போட வேண்டும் என்பதையும் கவனியுங்கள். இரத்தமானது அவர்களது வீடுகளின் வாசல்களில் தெளிக்கப்படுவதாவது, இரத்தத்தின் மீதான விசுவாசம் வெளியரங்கமாய் அறிக்கைப்பண்ணப்படுவதை அடையாளப்படுத்தப்படுகின்றதாய் இருக்கின்றது. இவைகள் அனைத்தும் இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய கிறிஸ்தவ ஜீவியத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றது. புசிக்கிறவர்கள், பரமதேசத்தை நாடுகிற “பரதேசிகளாக” காணப்பட வேண்டும்; நம்முடைய “கசப்பான கீரைகளானது,’ கர்த்தருக்கான நமது உண்மையினிமித்தமாய் வரும் சோதனைகள், துன்பங்கள் மற்றும் வைதல்கள் மற்றும் ஏமாற்றங்களாக இருக்கின்றது; இவை மாத்திரமே, நமக்காக அடிக்கப்பட்டதான நமது பஸ்காவாகிய கிறிஸ்து எனும் நமது ஆட்டுக்குட்டியின்மீதான நமது பசியினை/ஆவலை அதிகரிக்கப்பண்ணுகின்றதாய் இருக்கின்றது (யாத்திராகமம் 12:8,11,12; 1 கொரிந்தியர் 5:7). நியாயப்பிரமாணத்தின்படி, ஆட்டுக்குட்டியினுடைய எந்தப் பாகமும், அடுத்தநாள் புசிக்கத்தக்கதாக மீதிவைக்கப்படக்கூடாது என்கிற காரியமானது, கர்த்தருடைய பலியில் பங்கெடுப்பதற்கான சிலாக்கியத்தை புசித்தலானது குறிக்கின்றது என்பதையும், பாடுகளில் இந்தப் – பங்கெடுத்தல் (அ) ஐக்கியங்கொள்ளுதலானது இந்தச் சுவிசேஷயுகத்திற்கு மாத்திரமே உரியது என்பதையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இது அப்போஸ்தலனாலும்கூடத் தெரிவிக்கப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 10:16,17).
கர்த்தருடைய ஜனங்கள் யாவரும் தங்களது இருதயங்களானது விருத்தசேதனம் பண்ணப்பட்டுள்ளதா என்றும், மாம்சத்தினுடைய சித்தத்தினின்று விலகி முழுக்க கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதா என்றும் பார்த்துக்கொள்ளத்தக்கதாகத் தங்களைப் பரிசோதனைப் பண்ணிக்கொள்வார்களாக. நாம் பொல்லாப்பு, துர்க்குணம் மற்றும் விரோதம் எனும் பழைய புளித்த மாவைப் புறம்பே களைந்து போடத்தக்கதாகவும், நம்முடைய இருதயங்களின் எண்ணங்களும், நோக்கங்களும் தூய்மையானதாகவும், பரிசுத்தமானதாகவும், இனிமையானதாகவும் காணப்படத்தக்கதாகவும், தவிர்க்க இயலாத பெலவீனங்களானது, விலையேறப்பெற்ற இரத்தத்தின்கீழ் மூடப்பட்டுக் காணப்படத்தக்கதாகவும் பார்த்துக்கொள்வோமாக. அநேகர் “லெந்து கால வழக்கத்தினை ஆசரிப்பதுபோன்று, 40 நாட்கள் உபவாசம் இருக்க வேண்டுமென்று கர்த்தரினாலும், அப்போஸ்தலர்களாலும் எந்தக் கட்டளையும் கொடுக்கப்படாமல் இருந்தாலும், மனிதனுடைய இத்தகைய ஆச்சாரமான கட்டளைகளை நாம் நிராகரித்தாலும், ஆயத்தமாகும் வண்ணமாக தானாய் விரும்பி, கொஞ்சம் உபவாசத்தையும், ஜெபத்தையும் யார் ஏறெடுக்கின்றார்களோ, அவர்கள் அவர்களது விசுவாசம், அன்பு மற்றும் பக்திக்கு ஏற்ப ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நாம் நம்புகின்றோம்.