R4375 (page 118)
புரூக்லின் கூடாரத்தில் (Brooklyn Tabernacle) கிட்டத்தட்ட 450 பேர் நமது அருமை மீட்பருடைய நினைவுகூருதல் இராப்போஜனத்தை, ஏப்ரல் 4-ஆம் தேதி, ஞாயிறு மாலையன்று ஆசரித்தார்கள். மிகவும் அதிகமானவர்கள் பங்குகொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. கலந்துகொண்டவர்கள் அனைவரும் புரூக்லினைச் சேர்ந்தவர்களல்ல. உண்மையைச் சொல்லவேண்டுமெனில் புரூக்கிலினில் வழக்கமாய்க் கலந்துகொள்ளும் சபையாரில் அநேகர் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வருபவர்களாகவே காணப்படுகின்றனர். அத்தருணமானது மிகவும் பயபக்தியுடனும், தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாகவும் காணப்பட்டது. எங்களுக்கு மதிய வேளையில் நிழலான மற்றும் நிஜமான பஸ்கா தொடர்பாகக் கொடுக்கப்பட்ட சத்திய தூதானது, பயபக்திக்குரிய நினைவுகூருதல் குறித்த உணர்ந்துகொள்ளுதலுக்கு நேராக, எங்கள் மனங்களை வழிநடத்தினதாய்க் காணப்பட்டது மற்றும் மாலை நேரத்தின்போதான விளக்கவுரைகளானது, அப்பம் மற்றும் பாத்திரத்தினுடைய அர்த்தம் தொடர்புடையதாகக் காணப்பட்டது. அப்பத்தைப் புசித்தல் என்பது, நமது கர்த்தருடைய மனுஷீக உரிமைகளைச் சொந்தமாக்கிக் கொள்வதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; இதன் காரணமாக நாம் நீதிமானாக்கப்படுகின்றோம்; இதன் காரணமாக அபூரணங்களை – சுதந்தரித்துக் கொண்டதின் நிமித்தமான, அபூரணங்களை நாம் கொண்டிருந்தாலும் கூட, தேவனுடைய பார்வையில் நீதிக்கேதுவான நம்முடைய நீதிமானாக்கப்படுதலானது தக்கவைக்கப்படுகின்றது என்று நாம் விளக்கினோம். இரத்தம் என்பது நம்முடையதாக்கிக் கொள்ளப்பட்டதும், நம்மை ஜீவனுக்கு ஏதுவாய்த் தீர்த்திட்டதுமான நமது கர்த்தருடைய பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமைகளை முதன்மையாய்க் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்று நாம் விளக்கினோம்.
அடுத்ததாக நாங்கள் இரண்டாவதும், பெரியதுமான கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டு, அப்போஸ்தலனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில், உண்மையுள்ளவர்கள் அனைவரும், இராஜரிக ஆசாரியக் கூட்டத்தாரிலுள்ள அனைவரும், கிறிஸ்துவினுடைய ஒரே சரீரத்தின் அங்கத்தினர்கள் அனைவரும், ஒரே அப்பமாகத்தக்கதாக தங்கள் ஆண்டவரோடு இணைந்துகொள்கின்றனர் மற்றும் அந்த அப்பம் பிட்கப்படுதலிலும் அவரோடுகூட இணைந்துகொள்கின்றனர் என்றும், இப்படியாக அந்த அப்பம் மனுக்குலத்தின் உலகத்திற்குரிய திரும்பக்கொடுத்தலின் அப்பமாகுகின்றது என்றும் கண்டோம். மேலும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளின் வெளிச்சத்தில், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாகுகையில், நாம் நமது கர்த்தரோடுகூட, அவரது பாடுகளின் பாத்திரத்திலும், பூமிக்குரிய ஜீவனை அவர் பலிச் செலுத்துவதிலும் பங்காளிகளாகுகின்றோம் என்றும் கண்டோம். இன்னுமாக எப்படித் தெய்வீக நோக்கங்களின்படி, நாம் என்றென்றுமாய்க் கையளித்துவிடுகின்றதான இந்தப் பூமிக்குரிய ஜீவனானது, புது உடன்படிக்கையின்கீழ் இஸ்ரயேலுக்கு, யூதாவுக்கு மற்றும் மனுக்குலத்தின் குடும்பங்கள் அனைத்திற்கும் கடந்துபோகும் மற்றும் நமக்கு ஆவிக்குரிய ஜீவனும், உரிமைகளும் அருளப்படும் என்றும் கண்டோம்.
*கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் அவரது பாடுகளில்) பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்.”(1 கொரிந்தியர் 10:16,17 திருவிவிலியம்)
இப்படியாக “தேவனுடைய ஆழங்களை” மீண்டுமாய்க் கணநேரம் கண்ணோக்கினபோது, எங்கள் இருதயங்களானது, உணர்ந்துகொள்ளுதலினால், ஆழமாய்த் தூண்டப்பட்டது. இந்தத் தற்காலத்தில் பாடுகளிலும், பின்வரும் மகிமையிலும் நமது கர்த்தரும், மீட்பருமானவருடன் இத்தனை நெருக்கமாய் இணைந்திடுவதற்கு நாம் அழைக்கப்பட்டிருப்பது, எத்துணை ஆச்சரியமாய்க் காணப்படுகின்றது! இதைக் காட்டிலும் குறைவாய் எதையும் கர்த்தர் நம்மிடம் எதிர்ப்பார்த்திட முடியாது என்றும், இது ஒரு நியாயமான ஊழியம், சிலாக்கியம் மற்றும் கனம் என்றும் உள்ள உண்மைகளை மனதினுடைய கவனத்திற்குள் கொண்டு வந்தோம். நாம் அவரது “அங்கத்தினர்களென” ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, நாம் பண்ணின வாக்குறுதிக்கு உண்மையற்றுப்போவதன் காரணமாக, நமது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் நாம் உறுதிப்படுத்திட தவறுவதினால் உண்டாகும் இழப்பானது, எத்துணை பெரிய இழப்பாய் இருக்கும் என்று மீண்டுமாக நாங்கள் உணர்ந்துகொண்டோம். திரள் கூட்டத்தில் அடங்குபவர்கள்கூட, மகா உபத்திரவத்தில், அந்த நிலைப்பாட்டினை அடைந்தாக வேண்டும் என்றும், இருதயத்தில் சுத்தமுள்ளவர்களும், அவரது ஆவியினால் நிரம்பியிருப்பவர்களுமே தவிர, வேறு எவரும் நித்திய ஜீவன் பெற்றிடுவதற்குக் கர்த்தரினால் பாத்திரமாய்க் கருதப்பட முடியாது என்றும், அப்போஸ்தலன் கூறுகின்றது போல நம்முடைய காரியம் ஒன்றில் நித்தியமான ஜீவன் (அ) நித்தியமான மரணமாகக் காணப்படுகின்றது என்றும் நாங்கள் சுட்டிக்காட்டினோம். ஜெயம்கொள்ளத்தக்கதாக நித்தியமான ஜீவனைப் – பெற்றுக்கொள்ளத்தக்கதாக நாங்கள் ஒருவரையொருவர் மகா பரிசுத்தமான விசுவாசத்திலும், அன்பிலும், பக்தியிலும், வைராக்கியத்திலும் கட்டியெழுப்பிடுவதற்கு மீண்டுமாக நாடினோம். லேவியர்களால் அடையாளப்படுத்தப்படும் ஆவிக்குரிய ஜீவிகள் கீழான தளத்தில் ஜீவனைப் பெற்றுக்கொள்வதைக் காட்டிலும், உயர்தளத்தில் நித்தியமான ஜீவனையும், திவ்விய சுபாவத்தையும், இராஜரிக ஆசாரியக்கூட்டத்தில் அங்கத்துவத்தையும் பெற்றுக்கொள்வது என்பது சில விதங்களில் உண்மையில் சுலபமானதாகவே காணப்படும் என்று நாங்கள் புத்திக்கூறினோம்.
அங்குக் கூடியிருந்த அனைவருமே நினைவுகூருதலின் அடையாளச்சின்னங்களில் பங்கெடுத்தார்கள் மற்றும் நாங்கள் ஆராதனையை ஜெபத்துடன் நிறைவுசெய்தோம், பின்னர் ஸ்தோத்திர பாடல் பாடினோம்; பிற்பாடு வழக்கமாய்ச்சொல்லும் வாழ்த்துதல்கள் எதையும் சொல்லாமல், முடிந்தமட்டும் அத்தருணத்தின் விலையேறப்பெற்ற சிந்தைகளைச் சுமந்துகொண்டிருக்கத்தக்கதாக, அமைதலுடன் வெளியேறினோம்.
இதுவரையிலும் நாங்கள் பெற்றுக்கொண்டதான அறிக்கை தகவல்களை வைத்துப்பார்க்கும்போது, ஆசரிப்பானது பரவலாய் ஆசரிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பான்மையான கூடுகைகளில், கடந்த வருடத்தைக்காட்டிலும், சபை கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிகின்றது. சில இடங்களில் எண்ணிக்கையின் அதிகரிப்புக் கொஞ்சமாகவும் (அ) இல்லாமலும் இருந்திருக்கின்றது; ஏனெனில் முன்பு பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து ஓர் இடத்தில் ஒன்றுகூடினவர்கள், இப்பொழுது தனியே கூடிடுமளவுக்கு அதிக எண்ணிக்கையில் வளர்ந்துள்ளனர். பிட்ஸ்பர்கிலிருந்து (Pittsburgh) வந்த தகவலானது சிறப்பானதாய்க் காணப்பட்டது – நாங்கள் எதிர்ப்பார்த்ததுபோலவே காணப்பட்டது; பைபிள் ஹவுஸ் சாப்பலானது (Bible House Chapel) நிறைந்துபோனதால், கூடுதலான நாற்காலிகள் அவசியப்பட்டு, கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் முன் தருணங்களில் காணப்பட்ட அளவுக்கு அதிகமாய் இருக்கவில்லை; நிழலிலுள்ள அறிவுரைப்படி குடும்பங்கள் கூடிக்கொள்வதுபோன்று, ஒவ்வொரு இடங்களிலுமுள்ள நண்பர்கள் தங்களுக்குள்ளாகக் கூடிக்கொள்வது நலமாய் இருக்கும் என்று நாம் அடிக்கடி நினைப்பூட்டின பிற்பாடும்கூட, முன் தருணங்களில் அருகாமையிலுள்ள இடங்களிலுள்ள நண்பர்களுடைய வருகையின் காரணமாக நினைவுகூருதல் ஆராதனையானது வழக்கமாக கார்நீஜீ அரங்கிலோ (Carnegie Hall) அல்லது வேறு ஏதேனும் பெரிய மண்டபத்திலோ நடைபெற்றுவந்தது.
அறுவடை வேலை மீதான பொதுவான கவனமானது ஆழமாகிக் கொண்டும், விரிவடைந்துக் கொண்டும் வருகின்றது. எவ்வளவுதான் சபை பரீட்சிக்கப்பட வாய்ப்பில்லாததுபோன்று தோன்றினாலும், அறுவடை வேலையினுடைய இறுதிவரையிலும் விசுவாசம் மற்றும் அன்பிற்கான பரீட்சைகள் தொடர்ந்து கொண்டிருப்பதையும், பெருகிக்கொண்டுவருவதையும் நாம் எதிர்ப்பார்த்திடலாம். இவ்வாறே பரிசுத்த பவுல் பிரிவினைகளை உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படிக்கும் (ரோமர் 16:17), மற்றும் மீண்டுமாக உங்கள் மத்தியில் பிரிவினைகள் இல்லாமல் இருப்பதாக (1 கொரிந்தியர் 1:10) என்று நமக்குப் புத்திமதி கூறுகின்றபோதிலும், அவர் “முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். உங்களில் உத்தமர்கள் இன்னார் என்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்க வேண்டியதே” என்று கூறுகின்றார். (1 கொரிந்தியர் 11:18,19) மீண்டுமாகப் பரிசுத்த யோவானும்கூட, “அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்” என்று கூறுகின்றார். (1 யோவான் 2:19,20)
இப்போதனையினுடைய பொருள் என்னவெனில்: கிறிஸ்துவின் சரீரமானது ஒன்றாக இருக்கின்றது என்பது உண்மையாக இருப்பினும், சபை அன்பின் கட்டுகளினாலும், சத்தியம் எனும் நரம்புகளினாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கட்டப்பட்டு இருப்பது உண்மையாக இருப்பினும், நம்முடைய அன்பினாலும், சத்தியத்தினாலும், சக அங்கத்தினன் ஒருவனை நம்மால் முடிந்தமட்டும் ஐக்கியத்திற்குள் நிலைக்கப்பண்ணிடுவதற்கு அனைத்தையும் செய்த பிற்பாடும், அவன் விலகிப்போவானானால், கர்த்தர் இருதயத்தை அறிவார் என்றும், நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்த பிற்பாடு, மீதியைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்றும், அவர் அந்த அங்கத்தினனை ஒழுங்கிப்படுத்தி, தம்முடையவர்களாய்க் காணப்படுபவர்களாகிய சபையினுடைய ஐக்கியத்திற்குள் திரும்பக்கொண்டுவருவார் என்றும் நினைவில் கொண்டவர்களாக, நாம் இக்காரியத்தினை அமைதியுடன் எடுத்துக்கொண்டிட வேண்டும். “கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்;” ஆனால் நாம் அறியோம். இதை நன்கு நினைவில்கொண்டவர்களாக, கீழ்ப்படியாத ஒவ்வொரு அங்கத்தினனைக் கையாளும் விஷயத்தில், கர்த்தரிலும், அவருடைய ஞானத்திலும், அன்பிலும், வல்லமையிலும் முழு நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டிருத்தல்/செயல்படுத்திட வேண்டும். நமக்கும், மற்றவர்களுக்கும் “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்” என்றுள்ள கர்த்தருடைய வார்த்தைகளை நினைப்பூட்டிக்கொண்டு, நாம் அனைவரிடத்திலும் இரக்கமாயும், சாந்தமாயும் காணப்படுவதே நம் காரியமாய் உள்ளது.