R5050 – புளித்தமா பற்றின உவமை

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5050 (page 198) [தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்)

புளித்தமா பற்றின உவமை

PARABLE OF THE LEAVEN

மத்தேயு 13:33

வேதவாக்கியங்கள் எங்கும் புளிப்பு என்ற வார்த்தையானது, பாவத்திற்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவேதான் தூய்மையுள்ள இயேசு “வானத்திலிருந்து இறங்கின அப்பம்” என்று அடையாளப்படுத்தப்படத்தக்கதாக, யூதர்கள் புளிப்பில்லாத அப்பத்தினைப் பயன்படுத்திடுவதற்குக் கட்டளையிடப்பட்டனர். மீண்டுமாக அவர்களது வருடாந்தர பஸ்கா காலத்தின்போதும், யூதர்கள் தங்கள் வீடுகளிலிருந்து புளிப்பை அப்புறப்படுத்தி, அதைச் சுட்டெரித்து, அழித்துப்போடும்படிக்குக் கட்டளையிடப்பட்டிருந்தனர். இங்கும் மீண்டுமாக புளிப்பு என்பது பாவத்திற்கு, சீர்க்கேட்டிற்கு அடையாளமாய் இருக்கின்றது. இதைக் குறித்துப் பரிசுத்த பவுல் அடிகளார் சபைக்கு எழுதுவதாவது: “எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் (பாவம், பகைமை, விரோதம், துர்க்குணம் முதலானவைகளை) தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள்” அதாவது கிறிஸ்துவோடுகூட ஒரே புளிப்பற்ற அப்பத்திலுள்ளவர்களாய் இருப்பீர்கள் என்பதாகும். இந்த அப்பத்தைக் குறித்தே அவர் “அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்” என்று குறிப்பிடுகின்றார். (1 கொரிந்தியர் 5:7 திருவிவிலியம்; 1 கொரிந்தியர் 10:17)

ஒரு குறிப்பிட்ட பலியில் அப்பமானது, புளித்த மாவுள்ளதாகச் சுடப்பட வேண்டும் என்பது உண்மைதான்; எனினும் இது சபையாகிய நம்மையும் மற்றும் நாம் சுபாவத்தின்படி பாவிகளாகவும், மற்றவர்களைப்போலவே கோபாக்கினையின் பிள்ளைகளாகக்காணப்பட்டோம் என்ற உண்மையையும், சுடும்போது, புளிப்பினுடைய கெடுக்கும் தன்மையானது நிறுத்தப்படுகின்றது என்பதையும் அடையாளப்படுத்து வதற்கேயாகும் என்று நாம் நம்புகின்றோம்; இந்தச் சுடுதலானது, நமக்குள் பாவமான மற்றும் சீர்க்கேடான தன்மைகள் முற்றிலுமாய் அழிக்கப்படத்தக்கதாக, சபையானது கடந்துபோக வேண்டிய அனுபவங்களை அடையாளமான விதத்தில் அடையாளப் படுத்துகின்றதாய் இருக்கின்றது.

இந்த உவமையில் ஒரு ஸ்திரீ குடும்பத்திற்கான உணவு/மாவில் புளித்த மாவைக் கலப்பதாகவும் மற்றும் இதன் காரணமாக மாவு முழுவதும் புளிப்பேறினதாகவும் கர்த்தர் குறிப்பிடுகின்றார். இதன் காரணமாகக் குடும்பத்தில் எவரேனும் சுத்த மற்றும் புளிப்பற்ற அப்பத்தை விரும்பினாலும், பெற்றுக்கொள்ள முடியாது; காரணம் புளிப்பு முழுவதும் பரவிவிட்டது. இது எதனை அடையாளப்படுத்துகின்றது? வேதவாக்கிய அடையாளங்களினுடைய விஷயத்தில் ஸ்திரீ மத அமைப்புக்கு அடையாளமாய் இருக்கின்றாள். உவமையில் இடம்பெறும் ஸ்திரீயானவள், ஆரம்பக்காலத்தில் அதிகாரமுடைய மற்றும் சுத்த அப்பத்தை அதாவது கர்த்தரினால் விசுவாச வீட்டாருக்கு அளிக்கப்பட்டதான தூய அப்பத்தைப் பெற்றிருந்த ஓர் அமைப்பை அடையாளப் படுத்துகின்றாள்.

ஸ்திரீ உணவனைத்துடன், புளிப்பை, தப்பறையை, போலி உபதேசத்தினைக் கலந்துவிட்டாள். புளிப்பேற்றப்படாமல் எதுவும் விடப்படவில்லை. விளைவு அஜீரணமாகும். தூய்மையானதான தேவவார்த்தையானது ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை. புளிப்பானது பரவியுள்ளபடியால், இன்றைக்கு [R5050 : page 199] இறையியல் உபதேசங்கள் அனைத்தும், அனைத்துச் சபைப் பிரிவுகளிலுமுள்ள கிறிஸ்தவ ஜனங்கள் அனைவருக்கும் வெறுப்பிற்குரியதாகவும், கேடானதாகவும் காணப்படுகின்றது.

நடந்திருப்பவைகளுக்குத் தீர்க்கத்தரிசனமாக இவ்வுவமை காணப்படுகின்றது. உண்மையான கிறிஸ்தவர்கள் அனைவரும் இருண்ட யுகத்தினுடைய விசுவாசப்பிரமாணங்களினின்று, இயேசு மற்றும் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கத்தரிசிகளினுடைய வார்த்தைகளுக்குச் செவிக்கொடுக்க திரும்பும் காலம் வந்துள்ளது. வேதாகமத்தின் போதனைகளே, கலப்படமற்ற தேவவார்த்தை என்றும், அதுமாத்திரமே “நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கும்” என்றும், அதுமாத்திரமே “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி” செய்யும் என்றும் மீண்டுமாகச் சுட்டிக்காட்டுபவர்களில் முதன்மையானவராக, புனித போப் அவர்கள் இடம் பெறுவதைக் கண்டு நாம் மகிழ்கின்றோம். (2 தீமோத்தேயு 3:15-17)