R1504 (page 83)
நமது கர்த்தருடைய மரணத்தின் ஆண்டுநிறைவு நாளில் நினைவுகூரப்படும் நினைவுகள் எவ்வளவு புனிதமானதாய்க் காணப்படுகின்றது! அது இரட்சிப்பினுடைய முழுத்திட்டத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதான பிதாவின் அன்பினை மனதிற்குக் கொண்டுவருகின்றது; இந்த இரட்சிப்பின் திட்டத்தினுடைய மையமாக, அவர் தம்முடைய குமாரனை நம்முடைய மீட்பராகக் கொடுத்த காரியம் காணப்படுகின்றது. அது தம்மையே அனைவருக்குமான மீட்கும்பொருளாக (அ) சரிநிகர்சமான பலியாக ஒப்புக்கொடுத்தவரைப்பற்றி விசேஷமாய் நம்முடைய நினைவுகளுக்குக் கொண்டு வருகின்றது. “அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக நீதியுள்ளவராய்ப் பாடுபட்டவருடன்” விசுவாசமானது மிகவும் நெருங்குகின்றது மற்றும் நன்றி நிறைந்த, பொங்குகிற இருதயங்களுடனும், கண்களில் கண்ணீருடனும் நாம், “என் இரட்சகர்! என் மீட்பர்! என் கர்த்தர் மற்றும் ஆண்டவர்! அவர் என்னை அன்புகூர்ந்து, தம்மையே எனக்காகத் தந்தார்” என்று மெல்லிய குரலில் கூறுகின்றவர்களாகுகின்றோம். ஆ! ஆம்!
“சிலுவையின் அடிவாரத்தில் செலவிடும் தருணங்களானது
இனிமையான தருணங்களாகவும்,
ஆசீர்வாதத்தில் ஐசுவரியமுள்ளதாகவும் இருக்கின்றன:
ஜீவனும், சந்தோஷமும், சமாதானமும்
என் சிறந்த மற்றும் உண்மை நண்பனிடமிருந்து வருகின்றதே.”
“தேவதூதர் அனைவரிலும் பெரியவராகவும்,” எல்லா நாமத்துக்கும் மேலானவராகவும், பிதாவுக்கு அடுத்திருப்பவராகவும் அவர் இருக்க மற்றும் நாம் அவருடன் நட்புறவுகொண்டிருக்க மிகவும் முக்கியமற்றவர்களாகவும், மிகவும் அபூரணராகவும், மிகவும் அபாத்திரராகவும் இருக்க, நாம் அவரை நினைக்க வேண்டும் என்பதிலும், நாம் அவரை நம்முடையவர் என்று அழைப்பதிலும் அக்கறையுடன் காணப்படுகின்றார் என்ற கருத்தானது எத்துணை பாக்கியமானதாகும். இன்னுமாக “நம்மைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படவில்லை என்பதையும், நாம் அவரது மரணத்தினை நினைவுகூருவதில் அவர் பிரியப்படுகின்றார் என்பதையும், தம்முடைய பிட்கப்பட்ட மாம்சத்தை அடையாளப்படுத்துவதற்கென்று அப்பத்தையும், தமது சிந்தப்பட்ட இரத்தத்தை அடையாளப்படுத்துவதற்கென்று திராட்சரசத்தையும் கொடுத்துள்ளார் என்பதையும், அதாவது அனைவருக்குமாக விலைக்கொடுத்து வாங்கப்பட்டதும், அனைவராலும் பங்கெடுக்கப்படப்போகின்றதுமான மனித உரிமைகளையும், சிலாக்கியங்களையும் ஒன்று அடையாளப்படுத்தும் வண்ணமாகவும், மற்றொன்று ஏற்றுக்கொள்ளுகின்ற அனைவருக்கும் நித்திய ஜீவனை உறுதிப்படுத்தும் வண்ணமாக அவர் கொடுத்த ஜீவனை அடையாளப்படுத்தும் வண்ணமாகவும் அவர் கொடுத்துள்ளார் என்பதையும் நினைத்துப்பார்க்கும்போது பாக்கியமானதாய் இருக்கின்றது!
மனமகிழ்ச்சியுடன் அவரும், யூதர்களும் அந்த நாளையும், நாழிகையையும் எண்ணினதுபோன்று நாமும் எண்ணுகின்றோம்; இறுதியில் “வேளை வந்தபோது” நிழலான பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய மரணத்தைக் கொண்டாடுவதற்கும், எகிப்தின்மீது வந்த மாபெரும் சங்காரத்தினின்று, இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் விடுவிக்கப்பட்டதை நினைத்துப்பார்ப்பதற்கும், பிற்பாடு இந்த முதற்பேறானவர்களின் வாயிலாக உண்டான தேவனுடைய நிழலான இஸ்ரயேல் அனைத்திற்குமான விடுதலையை நினைத்துப்பார்ப்பதற்கும் என்றும் இயேசு, தம்முடைய சீஷர்களோடு பந்தியிருந்தார்.
நிழலினை ஆசரித்து முடித்தப் பிற்பாடு, ஆண்டவர் புதிய அடையாளச் சின்னங்களைக் கையில் எடுத்து, “(இதுமுதல்) என்னை நினைவுகூரும்படி இதைச் (பஸ்காவை ஆசரிப்பதை செய்யுங்கள்” என்று கூறுவதைக் கேட்பதும் எத்துணை விலையேறப்பெற்றதாய் இருக்கின்றது! ஆ, ஆம்! சிலுவையில் அறையப்பட்டவரில் நம்மால் இப்பொழுது, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை” காணமுடிகின்றது; “நம்முடைய (ஆட்டுக்குட்டி) பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே; ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்;” “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்;” (1 கொரிந்தியர் 11:26) அவரது இராஜ்யம் வரும்போது, நாம் அவரோடுகூட இராஜ்யத்தில் புதிய திராட்சரசத்தை (புதிய ஜீவனையும், சந்தோஷத்தையும்) பானம் பண்ணிடுவதற்கு அனுமதிக்கப்படுவோம். (மத்தேயு 26:29; 1 கொரிந்தியர் 5:7,8; 11:26)
(விசுவாசத்தின் வாயிலாக மீட்கப்பட்டவர்களெனக் கர்த்தரின் பலியின் புண்ணியத்திலும் மற்றும் இதன் விளைவான நன்மைகளிலும், அதாவது நீதிமானாக்கப்படுதலிலும், திரும்பக்கொடுத்தலின் உரிமைகளிலும், சிலாக்கியங்களிலும் பங்கெடுப்பதன் மூலமாக) நமது கர்த்தருடைய பலியினாலான தயவுகளை அனுபவிப்பதற்குரிய சிலாக்கியம் மாத்திரம் நம்முடையதாய் இராமல், இதனை காட்டிலும் மேலானதாகவே உள்ளது; நாம் நமது ஆண்டவரோடுகூடப் பலியிலும், அதன் மகிமையான பலன்களிலும் பங்கடைவதற்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம். அவர் நம்மிடம் கூறுவதாவது: “எவன் ஒருவன் என்னுடைய வேலையின்மீதும், அதன் விளைவுகள்மீதும் உடன்பாடுள்ளவனாய் இருக்கின்றானோ, எவன் ஒருவன் என்னுடைய இராஜ்யத்தில் பங்கடைந்து, உலகத்தை ஆசீர்வதிக்கும் அதன் வேலையில் இணைந்துகொள்ள விரும்புகின்றானோ, அவனும் என்னோடுகூடப் பிட்கப்படட்டும் மற்றும் மரணம் வரையிலுமான சுயத்தை வெறுத்தல் எனும் பாத்திரத்தில் என்னோடுகூடப் பானம்பண்ணட்டும்” என்பதாகும். இப்படியானவர்கள் அனைவரிடமும் அவர் கூறுவதாவது: “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்பதாகும். இதே கருத்தை அப்போஸ்தலனும் உறுதிப்படுத்தும் வண்ணமாக, “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகின்றோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் (மரணத்தில்) பங்குகொள்ளுதல் அல்லவா? (ஐக்கியமாயிருக்கிறதல்லவா?) அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா? (ஐக்கியமாயிருக்கிறதல்லவா?) அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் (கிறிஸ்துவினுடைய சரீரத்தில் அங்கத்தினர்களாயினும்) ஒரே உடலாய் இருக்கின்றோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்” என்று கூறுகின்றார். (1 கொரிந்தியர் 10:16,17)
அருமை கர்த்தரே எங்களுக்காக, அதாவது நாங்கள் [R1504 : page 84] நீதிமானாக்கப்படத்தக்கதாகப் பலிசெலுத்தப்பட்ட உம்முடைய தூய்மையான மனுஷீக சுபாவத்தின் புண்ணியத்தினை, நாங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கின்றோம் (எங்களுடைய தேவைக்கென்று சொந்தமாக்கிக்கொள்கின்றோம்). ஏற்றக்காலத்தில் உம்மோடுகூட ஆளுகை செய்யத்தக்கதாக, உம்மோடுகூடப் பாடுபடுவது என்பதும், நித்தியமான எதிர்க்காலத்தில் நாங்கள் உம்மோடுகூட ஜீவிக்கத்தக்கதாகவும், உம்மைப்போன்று காணப்படத்தக்கதாகவும், உமது மணவாட்டியென உமது அன்பிலும், உமது மகிமையிலும் பங்கடையத்தக்கதாகவும், உம்மோடுகூட மரிப்பது என்பதும் பாக்கியமான சிலாக்கியம் என்று நாங்கள் உணர்ந்து, பாடுகளின் பாத்திரத்தில் உம்மோடுகூட நாங்கள் மகிழ்ச்சியுடன் பங்கெடுக்கின்றோம். ஓ! அடையாளத்தை ஆசரிப்பதில் மாத்திரமல்லாமல், உண்மை ஜீவியத்திலும் நாம் உண்மையாய் இருக்க வேண்டும். ஸ்தோத்திரத்திற்குரிய கர்த்தாவே நீர், “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்” என்று கூறும் உம்முடைய வார்த்தைகளை நாங்கள் கேட்கின்றோம். கர்த்தாவே நாங்கள் நாங்களாகவே இப்படிப் பலிசெலுத்திட முடியாது; ஆனால் உம்முடைய கிருபை எங்களுக்குப் போதும்; ஏனெனில் நாங்கள் இப்பொழுதும், எப்பொழுதும் முற்றும் முழுமையாய் உம்முடையவர்களாய் இருக்கின்றோம்.
அவரது பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்கும், நமது கர்த்தரோடுகூட, அவரது சரீரமெனப் பிட்கப்படுவதற்குமான தற்கால சிலாக்கியத்தில் நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்தோமானால், நாம் சீக்கிரத்தில் அவரோடுகூடப் “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபையாகுவோம்;” மற்றும் இவர்களே இராஜரிக ஆசாரியக்கூட்டத்தாராய் இருந்து, நமது மாபெரும் பிரதான ஆசாரியன் கீழிருந்து, ஓய்வுநாளுக்கு ஆண்டவராய் இருப்பவருடைய செவிகளுக்கு எட்டின ஜெபங்களையும், பெருமூச்சுகளையும் ஏறெடுத்த பாவத்தின் அடிமைகள் யாவரையும் எகிப்திய சிறைவாசத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் வெளிநடத்துவார்கள்; ஓ! இது எத்துணை அருமையானதொரு சிந்தனையாய் இருக்கின்றது.
இதுபோன்ற சில கருத்துகளே, உலகமெங்கும் காணப்படும் கர்த்தருடைய ஜனங்களை, சிறுசிறு கூட்டத்தாராய் (சிலசமயம் இயேசுவோடு தனிமையிலும்) மார்ச் 26-ஆம் தேதியன்று மாலை, 6 மணிக்குப் பிற்பாடு, தேவனுடைய அண்டசராசரத்தினுடைய வரலாற்றிலேயே மிகக் குறிப்பிடத்தக்க நிகழ்வினை, அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிக்கும் வண்ணமாகக் கூடிடுவதற்கு நெருக்கி [R1505 : page 84] ஏவுகின்றது. (இந்த நினைவுகூருதலின் ஆண்டுநிறைவு நாளுக்கான துல்லியமான, சரியான தேதியினை முடிந்தமட்டும் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் விரும்புகின்றோம்; நாம் துல்லியமான தேதியைப் பெற்றுக்கொள்ளவில்லையெனில், அது கவலைக்கிடமான காரியமாய் இருக்கும் என்பதாக நாம் புரிந்துகொள்ளவில்லை; நாளை ஆசரியாமல், நிகழ்வையே நாம் நினைவுகூர்ந்து ஆசரிக்கின்றோம். எனினும் வேறுபாடற்ற/ ஒன்றுபோல் தேதியைப் பெற்றுக்கொள்வதற்கே விரும்புகின்றோம்).
“பிரியமானவர்களே, புசியுங்கள், குடியுங்கள்” என்று மணவாளன், தனது மணவாட்டியினிடத்தில் கூறுகின்றார். (உன்னதப்பாட்டு 5:1) நமது மீட்பருடைய அன்பையும், பலியையும் நாம் ஒவ்வொருவரும் எண்ணி, அவரோடுகூட மரிப்பதற்கென நாம் மீண்டுமாக உறுதியளிக்கையில், நாம் பயபக்தியோடும், பக்தியோடும், கருத்தோடும், ஜெபத்தோடும் புசித்து, பானம்பண்ணுவோமாக. அவரைத் தங்கள் மீட்கும் பொருள் என்று, அடையாளங்கண்டுகொண்டுள்ளவர்களும், அவரை நினைவுகூரும்படியாக ‘இதைச்’ செய்ய விரும்புகின்றவர்களுமானவர்கள் யாரொருவரோடும் கூடிக்கொள்ளுங்கள் (அ) தனிமையில் இதை ஆசரியுங்கள்.
நல்லொழுக்கமாயும், கிரமமாயும் செய்யப்படுவதற்கே தவிர மற்றப்படி ஆச்சாரங்களையும், சம்பிரதாயங்களையும் பொதுவாய் மறந்து, உங்கள் இருதயங்கள் நிஜமான நிலையில் காணப்படுவதாக. முன்கூட்டியே ஏதாகிலும் ஒருவகை திராட்சப்பழரசத்தை (fruit of the vine) ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் வேகவைக்கப்பட்டு எடுக்கப்படும் உலர்த் திராட்சரசத்தை (அ) புளிப்பேற்றப்படாத திராட்சப்பழச்சாற்றைப் பரிந்துரைக்கின்றோம்; அப்பத்திற்கு ஒன்றில் யூதருடைய புளிப்பில்லாத அப்பத்தை (அ) water crackers எனும் சாதாரணமான ரொட்டியைப் (இதிலும் மாவு, தண்ணீர் மற்றும் உப்பு எனும் ஒரே கலவை இடம்பெறுகின்றது மற்றும் புளிப்பில்லாததாய் இருக்கின்றது) பரிந்துரைக்கின்றோம். புளிப்பு, பாவத்திற்கு (அ) சீர்க்கேட்டிற்கு அடையாளமாய் இருப்பதினால், புளிப்பு/காடிச்சத்து (yeast) சேர்த்துப்பண்ணும் அப்பமானது, “மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமான’ நமது கர்த்தருக்குப் பொருத்தமான அடையாளமாகக் காணப்படுவதில்லை.