R5420 (page 83)
நம்முடைய பாவங்களுக்கான மீட்பருடைய மரணத்தையும் – அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுவது போன்று மீட்பரோடுகூட மனுஷீக நிலைகளுக்கு மரித்துப் – போவதிலும், அவருடைய பாடுகளிலும், அவரோடுகூட உள்ள நம்முடைய பங்கெடுத்தலையும் நினைவுகூர்ந்திடுவதற்கான சிலாக்கியத்தினையும் எங்குமுள்ள – கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களானவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நாம் நம்புகின்றோம். நமது கர்த்தரும், அப்போஸ்தலர்களும், தம்முடைய மரணம் நிகழ்வதற்கு முன்னதாகக்கூடி, தம்முடைய மரணத்தை அடையாளப்படுத்தினது போலவே, நாமும் அவரது பலியை நினைவுகூர்ந்து ஆசரிப்பதற்கென ஆண்டு நிறைவு நாளில் கூடுவதும் ஏற்றதாயிருக்கும்.
யூதருடைய பஸ்காவிற்குப்பதிலாகக் கர்த்தர் இந்த நினைவுகூருதலை நிறுவின அவரது நோக்கத்திற்கு இசைவாக, இதை நாம் வருடந்தோறும் ஆசரிப்பது என்பது இத்தருணத்தை, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாக்குகின்றது; அதாவது ஆண்டு நிறைவு நாளில், ஆசரிக்கும் அம்சத்தைப் புறக்கணித்து, அவ்வப்போது மாதந்தோறும், வாரந்தோறும், காலாண்டுதோறும் என ஆசரிக்கப்படும் ஆசரிப்பானது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக்காட்டிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாக்குகின்றது. வித்தியாசமாய் ஆசரிக்கின்றவர்களிடத்தில் நாம் தவறு கண்டுபிடிக்காமல் இருப்போமாக; மாறாக வாய்ப்புகள் கிடைக்கும்போது, இந்த மாபெரும் நிகழ்வினை, அதன் ஆண்டு நிறைவு நாளில் நாம் ஆசரிப்பதற்கான நம்முடைய காரணங்களை, நாம் அவர்களுக்குத் தெரிவித்திடலாம்.
நாம் இதை (வருடந்தோறும்) புசித்து, பானம்பண்ணும்போதெல்லாம், கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கின்றவர்களாய் இருப்போம். நமது கர்த்தர் பல வருடங்களாகப் பிரசன்னமாகி அறுவடையின் காலப்பகுதியில் – காணப்படுகின்றார் என்று நாம் நம்புகிறவர்களாய் இருப்பினும் இது அவரது – மரணத்திற்கான ஆசீர்வாதமான நினைவுகூருதலை, நாம் தொடர்வதிலிருந்து, நம்மைத் தடைச் செய்திடுவதில்லை. நாம் அவரது மரணத்தை, அவரது இரண்டாம் வருகைவரை, அதாவது இந்த யுகத்தினுடைய முழு அறுவடை வேலையும் முடிவடைந்து, கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபை முழுவதும் மகிமைக்குள் ஏற்றுக்கொள்ளப்படுவது வரை, ஆசரிப்பதைத் தொடர வேண்டுமென்ற அர்த்தத்தில் நமது கர்த்தர் குறிப்பிட்டுள்ளார் என்பது நமது கருத்தாய் இருக்கின்றது. அவர் கூறின பிரகாரம், நாம் அவரோடுகூடப் புதிய பாத்திரத்தில் பானம் பண்ணிடுவோம்.
இப்பொழுது நாம் அவரது அவமானத்தின், நிந்தனையின், பாடுகளின், உலகத்தினுடைய எதிர்ப்பு மற்றும் ஏளனத்தின் பாத்திரத்தில் பானம்பண்ணுபவர்களாய் இருக்க, அவரது புதிய பாத்திரமானது சந்தோஷத்தின், ஆசீர்வாதத்தின், மகிமையின், கனத்தின், அழியாமையின் – திவ்விய சுபாவத்தின் பாத்திரமாய்க் காணப்படும். நமது கர்த்தருக்குப் பாடுகளின் பாத்திரத்தினை ஊற்றின பிதா, ஏற்கெனவே அவருக்கு ஆசீர்வாதத்தின் மற்றும் மகிமையின் பாத்திரத்தை ஊற்றிவிட்டார். நாம் அவரோடுகூட இந்தப் பாடுகளின் பாத்திரத்தில் பங்கடைவதற்கான சிலாக்கியம் பெற்றிருப்பது போன்று, நாம் உயிர்த்தெழும்போது, மறுரூபமடையும்போது அவரோடுகூட, மகிமையின், ஆசீர்வாதத்தின் பாத்திரத்திலும் பங்கடைவதற்கான சிலாக்கியத்தினை நாம் பெற்றிருப்போம். ஆம், நம்முடைய பாத்திரமானது இப்பொழுது கலந்து காணப்படுகின்றது; கசப்பும் இனிப்பும் கலந்து காணப்படுகின்றது; ஏனெனில் – விசுவாசத்தினால் நாம், தேவனை அன்புகூருகிறவர்களுக்கென்று அவர் வைத்துவைத்துள்ளதானவைகள் அநேகவற்றை ஏற்கெனவே அனுபவித்து வருகின்றோம்.
கர்த்தருடைய ஏற்பாட்டில் சந்திரனானது, யூதருடைய வாய்ப்புகளை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது மற்றும் சூரியனானது சுவிசேஷ யுகத்தினுடைய வாய்ப்புகளை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. நியாயப்பிரமாணத்தின் யுகமானது, வரும் காரியங்களுக்கான நிழலாய் (அ) பிரதிபலிப்பாய்க் காணப்படுகின்றது; அதாவது சந்திரனுடைய ஒளியானது, சூரிய கதிரினுடைய பிரதிபலிப்பாய்க் காணப்படுவதுபோன்று காணப்படுகின்றது. தேவனைப்பற்றின அறிவினால் உலகத்தைப் பிரகாசிப்பிக்கின்ற ஒளியினைத் தன் செட்டைகளின் கீழ்ப் பெற்றிருந்து, நீதியின் சூரியன் உதிக்கின்ற காலப்பகுதிக்கு அருகாமையில் நாம் காணப்படுகின்றோம். இதை நாம் காண்கையில், போதகர் கட்டளையிட்டதற்கேற்ப நாம் நமது தலைகளை உயர்த்தி, களிகூருகின்றோம். (மத்தேயு 13:43) கர்த்தருடைய உவமையின்படி சபையினுடைய ஜெயங்கொள்ளும் அங்கத்தினர்கள் அந்த நீதியின் சூரியனுக்குள் அடங்குவதினால், ஆயிரவருட அரசாட்சியினுடைய மகிமையின் வெளிச்சமானது, உலகத்தார்மீது முழுமையாய்ப் பிரகாசித்திடுவதற்கு முன்னதாக, தெரிந்தெடுக்கப்பட்டதான சபையானது கூட்டிச்சேர்க்கப்பட்டு, அவளது மகிமையடைதல் நிறைவடைந்திட வேண்டும்.
நினைவுகூருதலில் நாம் பங்கெடுக்கையில், முதலாம் நினைவுகூருதல் நிகழ்ந்தபோது காணப்பட்ட சூழ்நிலைகளுக்கு நேர்மாறாக இப்பொழுது நீதியின் சூரியன் உதிப்பதை விசுவாசத்தின் கண்களினால் பார்க்கின்றவர்களாக இருக்கின்றோம். அப்போது சந்திரனானது (நியாயப்பிரமாண உடன்படிக்கையானது) அதன் முழு நிலையில் காணப்பட்டது; இயேசு மறுதலிக்கப்பட்டு, அவர் சிலுவையில் அறையப்பட்டவுடனே, யூதருடைய ஆட்சியானது நலிவுற ஆரம்பித்தது. இயேசு சிலுவையில் மரித்த நாளில் சந்திரன், பௌர்ணமி நிலையில் காணப்பட்டது என்றும், பின்னர் உடனடியாக தேய்வுற ஆரம்பித்தது என்றும் கவனிக்கப்படலாம். இந்த வருடத்தில் ஏப்ரல் 11-ஆம் தேதியில் சந்திரன் பௌர்ணமி நிலையில் காணப்பட்டு, பின்னர் அதன் தேய்வு ஆரம்பமாகும். ஆகையால் 11-ஆம் தேதியானது, நமது கர்த்தர் சிலுவையில் மரித்திட்டதற்கான நாளாகவும், 10-ஆம் தேதி மாலையானது முதலாம் நினைவுகூருதல் இராப்போஜனம் ஆசரிக்கப்பட்ட இரவிற்குரிய நாளாகவும் காணப்படும்.
நினைவுகூருதல் இராப்போஜனம் அடையாளப்படுத்தும் காரியங்களை உணர்ந்துகொள்வதினால் மாபெரும் ஆசீர்வாதமும், அதில் பங்கெடுப்பவரின் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலுக்கு ஏற்ப சந்தோஷமும் கடந்துவருவதுபோல, நினைவுகூருதலில் அபாத்திரமான நிலையிலும், சரியற்ற நிலையிலும் பங்கெடுத்தல்கூட ஆக்கினைத் தீர்ப்பைக் கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது. கர்த்தருக்கும், அவரது ஊழியத்திற்கென்றும் தங்களுடைய இருதயங்களை – தங்களுடைய அனைத்தையும் – அர்ப்பணிப்பதன் மூலமாகக் கர்த்தருடன் உறவிற்குள் வந்தவர்களே இதில் பங்கெடுக்க வேண்டுமே ஒழிய, மற்றவர்கள் அல்ல.
யார் தங்களைப் பாவிகள் என்றும், இரட்சகரைப் பாவங்களிலிருந்து தங்களை மீட்பவர் என்றும், இவர் மூலமாய்ப் பிதாவினிடத்திற்கு வருபவர்களுடைய குறைவுகளை ஈடுசெய்திடுவதற்கு இவருடைய புண்ணியங்கள் போதுமானவைகள் என்றும் அடையாளங்கண்டுகொள்கின்றனரோ, இவர்களே இந்த அர்ப்பணிக்கப்பட்ட நிலைமைக்கு வரமுடியுமே ஒழிய, மற்றவர்கள் அல்ல. இப்படியானவர்களே மிகுந்த சந்தோஷத்துடன் இதில் பங்கெடுப்பவர்களாய் இருப்பார்கள். போதகருடைய பாடுகளை இவர்கள் நினைவுகூர்ந்து, அந்தப் பாடுகளிலும் மற்றும் அவை தங்கள் இருதயங்களிலும், ஜீவியங்களிலும் கொண்டு வந்திட்டதான ஆசீர்வாதங்களிலும் களிகூர்ந்திட வேண்டும். கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியங்களைத் தங்களுடையதாக்கிக் கொண்டவர்களும், தங்களுக்கான ஆசீர்வாதங்கள் அனைத்துமே அவர் மூலமாகவே வந்தது என்று முழுமையாய் உணர்ந்து கொண்டுள்ளவாகளுந்தான், அந்த ஒரு தருணத்தில் திராட்சப்பழரசத்தைப் – பானம்பண்ணிட வேண்டுமே ஒழிய, வேறு எவருமல்ல. தங்களுடையதனைத்தையும் கர்த்தருக்குக் கொடுத்துவிட்டவர்களே பாத்திரத்தில் பானம்பண்ணிட வேண்டுமே ஒழிய, வேறு எவருமல்ல; ஏனெனில் இதுவே பாத்திரத்தினுடைய அர்த்தமாய் இருக்கின்றது அது பாடுகளின் பாத்திரமாகும், மரணத்தின் பாத்திரமாகும் – தேவனுடைய சித்தத்திற்கான முழுமையான ஒப்புக்கொடுத்தலாகும். [R5420 : page 84] “என்னுடைய சித்தமல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது” என்பதே போதகருடைய ஜெபமாக இருந்தது மற்றும் இதுவே நினைவுகூருதல் இராப்போஜனத்தில் பங்கெடுப்பவர்களின் மன உணர்வாகவும், வேண்டுகோளாகவும் காணப்பட வேண்டும்.
இப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்கள் இந்த நினைவுகூருதல் இராப் போஜனத்தில் பங்கெடுத்தல் என்பது, பயனற்றதாக/நாடகமாக இருக்கும்; மற்றும் இது தவறாய் இருக்கும் மற்றும் தேவனிடமிருந்தும், மற்றும் தங்கள் செய்கையினுடைய தவறை உணர்ந்துகொள்வதற்கேற்ப தங்கள் சொந்த மனசாட்சியினிடமிருந்தும் குற்றவாளி என்று தீர்க்கப்படுதலையும், மறுப்பையும் கொண்டுவருதலாய் இருக்கும்.
ஆனால் மாம்சத்தினுடைய அபூரணங்கள் காரணமாக, எவரும் நினைவுகூருதல் ஆசரிப்பிலிருந்து விலகிக்கொள்ள நினைத்திட வேண்டாம். மாம்சத்தின் அபூரணம் என்பது அநேகருக்கு மிகுந்த இடறலின் கல்லாய்க் காணப்படுகின்றது. நாம் மாம்சத்தில் காணப்படுவதுவரையிலும், வார்த்தையிலும், கிரியையிலும், சிந்தையிலும் அபூரணங்கள் காணப்படவே செய்யும் – ஆம் இவை தவிர்க்கப்பட முடியாதவைகள். நாம் விரும்புகிறவைகளைச் செய்யமுடியாது என்று பரிசுத்த பவுல் குறிப்பிடுகின்றார். இதன் காரணமாக நம்முடைய அன்றாட, வேண்டுமென்றில்லாத, மனப்பூர்வமாய்ச் செய்யப்படாத மீறுதல்கள் மன்னிக்கப்படுவதற்கு நமக்குத் தெய்வீகக் கிருபை அவசியமாய் உள்ளது; ஆகையால் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களும், கிறிஸ்துவினுடைய ஐக்கியத்திற்குள்ளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுமானவர்கள் அனைவரும் ஜெபத்தில், பரலோகக் கிருபையின் சிங்காசனத்தினிடத்திற்கு வருவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். (எபிரெயர் 4:16) தேவைகளின் காரணமாகவே, தேவன் வழியைத் திறந்து, நமக்காக இந்த ஏற்பாட்டினை ஏற்பாடு பண்ணினார்.
நாம் எதற்காக – பாவங்களுக்காக மனந்திரும்பி, இயேசுவின் நாமத்தினால் மன்னிப்பைக் கேட்டுக்கொண்டோமோ, அந்தப் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான தேவனுடைய ஏற்பாட்டின் மூலமாக, நாம் இனி ஒருபோதும் பாவிகளென ஆக்கினையின் கீழ் இல்லாமல், மாறாக கிறிஸ்துவினுடைய நீதியின் வஸ்திரத்தினால் மூடப்பட்டிருக்கின்றோம் என்று உணர்ந்துகொள்வோமாக. இதுவே, ஒவ்வொரு நாளும் பொருந்தக்கூடிய பரிசுத்த பவுலினுடைய பின்வரும் வார்த்தைகளுக்குப் பின்னாகக் காணப்படுகின்ற கருத்தாகும்; அதாவது “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” (ரோமர் 12:1)
கிறிஸ்தவர்கள் அனைவரும் கர்த்தரிடம் தங்கள் கணக்குகளைத் தீர்த்த நிலையில் வைத்திருக்க வேண்டும். கணக்குளைத் தீர்த்துக்கொள்ளவில்லையெனில், காலம் கடத்தாமல் கணக்குகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது இரட்சகருடைய பலியின் புண்ணியத்தின்மூலம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கர்த்தரோடு உள்ள இப்படியான கணக்குகள் அவைகள் நிகழ்ந்தபோதே, உடனடியாகச் சரிச்செய்யப்பட வேண்டும் அல்லது அவை நிகழ்ந்த நாளிலேயே சரிச்செய்யப்பட வேண்டும். அவைகள் குவிவதற்கு நாம் அனுமதித்திடக்கூடாது; ஏனெனில் அவை ஆத்துமாவிற்கும், பரம பிதாவிற்கும் இடையில் மதிற்சுவரை எழுப்பிவிடும். ஆனால் கடந்தகாலங்களில் சூழ்நிலைகள் என்னவாகக் காணப்பட்டாலும்கூட, நினைவுகூருதல் காலங்கள் என்பது, மற்றக் காலங்கள் அனைத்தையும் காட்டிலும், கர்த்தருக்கும் நமக்கும் இடையில் எந்த மேகமும் காணப்படாமலும், நம்மை அவருடைய கண்களிலிருந்து மறைத்துப்போடாமலும் இருக்கத்தக்கதாக, நாம் பார்த்துக்கொள்வதற்குரிய காலமாய் இருக்கின்றது.
இப்படியாக மன்னிக்கப்பட்டு, கிறிஸ்துவினுடைய நீதியாகிய நம்முடைய வஸ்திரத்திலுள்ள அசுசியான கறைகள் சுத்திகரிக்கப்பட்டு, நாம் பண்டிகையை – நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதலை ஆசரிப்போமாக. இந்த நினைவுகூருதலில் நாம் அவரது பலி மற்றும் மரணத்தினுடைய புண்ணியத்தின் முக்கியத்துவத்தினை மீண்டுமாக ஒப்புக்கொண்டு, இதை நம் மனங்களில் பதியவைத்திடுவோமாக மற்றும் அவரது பலியும், மரணமும் எப்படி நமக்கான தேவனுடைய கிருபையைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்றும், எதிர்க்காலத்தில் ஆயிரவருட இராஜ்யத்தின் மூலமாக முழு உலகத்திற்கும் பாராட்டப்படும், அதே கிருபையாய் இருக்கும் என்றும் ஒப்புக்கொண்டு, நம் மனங்களில் பதியவைத்திடுவோமாக. நம்முடைய அர்ப்பணிப்புக் குறித்தும், நம்முடைய கர்த்தரோடு மரிப்பதற்கும், ஒரே அப்பத்தின் பாகங்களாக, அவரது சரீரத்தின் அங்கத்தினர்களெனப் பிட்கப்படுவதற்கும், அவரது பாடுகள், அவமானம் மற்றும் மரணத்தின் பாத்திரத்தில் பானம்பண்ணுவதில் பங்கெடுப்பதற்குமான நம்முடைய அர்ப்பணிப்புக் குறித்தும் நினைவுகூருவோமாக. “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்.” (2 தீமோத்தேயு 2:12)
இந்த வருஷத்தில் நினைவுகூருதல் ஆசரிப்பானது, எங்குமுள்ள அர்ப்பணிக்கப்பட்ட கர்த்தருடைய ஜனங்களுக்கு மிகுந்த ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாகவும், ஐசுவரியமான ஆசீர்வாதமுள்ள தருணமாகவும் காணப்படும் என்று நாம் விசுவாசிக்கின்றோம். “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கின்றாரே; ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” (1 கொரிந்தியர் 5:7,8)
அன்று மாலையில் மழைத்தூறல் காணப்பட்டது; எனினும் 19 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக நமது போதகரும், அப்போஸ்தலர்களும் அந்த மறக்கமுடியாத இரவின்போது காணப்பட்டதான கெத்செமனே தோட்டத்திற்கு போதகர் வியாகுலமடைந்த மற்றும் இரத்த வியர்வை சிந்தின தோட்டத்திற்குப் போயாகவேண்டும் என்று நாங்கள் தீர்மானமாய்க் காணப்பட்டோம். ஏகமனதுடன்கூடிய வாக்களிப்புடன், நாங்கள் அந்தப் புனிதமான இடத்தில் நினைவுகூருதலின் அடையாளங்களில் பங்கெடுப்பதற்கு விரும்பிட்டோம்; இவ்விடமானது இதுபோன்றதான நோக்கங்களுக்காக ஒருபோதும் அநேகமாகப் பயன்படுத்தப்படவில்லை. மழைத் தூறலின் மத்தியில் இயேசுவின் பிட்கப்பட்ட சரீரத்தை அடையாளப்படுத்துகின்றதான அப்பத்தினுடைய அர்த்தத்தினையும் மற்றும் இரண்டாவதாக அப்போஸ்தலனாகிய பவுலினால் விவரிக்கப்பட்டதுபோன்று கிறிஸ்துவின் சரீரமாகிய முழுச்சபையும், நாம் பிட்கின்ற அந்த ஒரே அப்பமாய் இருக்கின்றதையும் நாங்கள் பார்த்தோம். நம் சார்பாகவும், உலகத்திற்காகவும் நமது கர்த்தரினால் ஊற்றப்பட்ட ஜீவனை முதலாவது அடையாளப்படுத்துகிறதும் மற்றும் இரண்டாவதாக கிறிஸ்துவின் உபத்திரவங்களில் பங்காளிகள் ஆகுவதன் மூலமாக, அவரது பாத்திரத்தில் பானம்பண்ணுவதன் மூலமாக, கிறிஸ்துவின் பாடுகளில் பங்கெடுப்பதற்குரிய அருமையான சிலாக்கியத்தினை நமக்குக் குறிக்கின்றதுமான பாத்திரத்தைக் குறித்தும் நாங்கள் பார்த்தோம். பிதாவின் இராஜ்யத்தில், அந்த ஆசீர்வாதமான சூழ்நிலைகளின்கீழ், நவமானதாய்ப் பானம்பண்ணுவதில் பின்தொடரும் மகிமையைக் குறித்து நாங்கள் பார்த்தோம். இப்பொழுது பிட்கப்பட்டு வருகின்றதான அப்பமானது, எப்படித் தெய்வீக ஏற்பாட்டின்படி, மனுக்குலத்தின் ஒட்டுமொத்த உலகத்திற்கு அப்பமாகக் காணப்படும் என்றும் நாங்கள் எண்ணிப்பார்த்தோம்.
மழைக் காணப்பட்டப்போதிலும் / அசௌகரியமான வானிலை காணப்பட்டப் போதிலும், எங்கள் இருதயங்களானது மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டது. அந்த ஆசீர்வாதமான தருணத்திற்காகவும், நினைவுகூரப்பட்டதான ஆசீர்வாதமான காரியங்களுக்காகவும் நாங்கள் ஜெபத்தையும், நன்றியையும் ஏறெடுத்தோம் மற்றும் எங்குமுள்ள கர்த்தருடைய அருமையானவர்களும்கூட இதைப் போன்று நினைவுகூருதலை ஆசரித்துக்கொண்டிருப்பார்கள் (அ) நமக்காக அடிக்கப்பட்ட தான நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்துவினுடைய பாடுகளை நினைவுகூர்ந்து ஆசரிப்பார்கள் என்றும் நாங்கள் நினைவுகூர்ந்தோம். அமைதியான தொனியில் கவியொன்றினைப் பாடிவிட்டு, நன்றி உள்ள, சந்தோஷமுள்ள இருதயங்களுடன் கலைந்து சென்றோம். அந்த மாலையின்போதான அனுபவங்களானது, எங்கள் நினைவுகளிலிருந்து ஒருபோதும் மறைந்திடாது; இது உலகத்தின் பாவங்களுக்காக மரித்திட்ட தேவாட்டுக்குட்டியைக் குறித்தும், அவரோடுகூட அவரது பலியில் பங்கடைவதற்கும் மற்றும் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களென, அவரது மரணம் மூலமாக உண்டான மாபெரும் வேலையை நிறைவேற்றத்தக்கதாக, அவரோடுகூட மகிமையடைவதற்குமான சிலாக்கியம் குறித்தும் ஆற்றலுடன் நம்மிடம் எப்போதும் பேசுகின்றதாய் இருக்கின்றது.
எருசலேமில் நமது கடைசிநாள், ஏப்ரல் 24-ஆம் தேதியாகிய ஞாயிற்றுக்கிழமையாய் இருந்தது. இது திரைக்கு இப்பக்கத்திலும் மற்றும் ஐயமின்றி மறுபக்கத்திலும் எப்போதும் நம்முடைய நினைவுகளில் மங்கிப்போகாமலேயே காணப்படும். நாங்கள் ஒலிவமலையைப் போய்ப்பார்த்தோம் மற்றும் அடுத்து இயேசுவும், அவரது அப்போஸ்தலர்களும் அடிக்கடி கடந்து சென்றதான பெத்தானியாவின் சாலைக்குச் சென்றோம். பட்டணத்து வாயிலுக்கு வெளியே உள்ள கெதரோன் ஆற்றைப்பார்த்துவிட்டு, அதைக் கடந்துபோனோம். இயேசு தம்முடைய சீஷர்கள் சூழ்ந்திருக்க, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று ஜனக்கூட்டத்தார் ஆர்ப்பரிக்க கழுதையின்மீது ஏறிவந்த பெத்தானியா சாலையின் அந்தக் குறிப்பிட்ட பாகம்மீதும், நமது போதகர் பட்டணத்தின் பார்வை தென்பட்டவுடன், ஊர்வலத்தை நிறுத்தி, அங்கு அதற்காகக் கண்ணீர் வடித்து, “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலேயே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இஸ்ரயேல் வீட்டார் குறித்துக் குறிப்பிட்ட இடத்தின்மீதும் நாங்கள் விசேஷித்த கவனம் கொண்டிருந்தோம். (மத்தேயு 23:28,29) இந்த இடத்தை நாங்கள் இரண்டுமுறை வந்து பார்த்திட்டோம்; மேலும் இஸ்ரயேல் மற்றும் பூமியின் குடும்பங்கள் அனைவரின் கண்கள் திறக்கப்படுவதற்கான காலம் சமீபமாயுள்ளது என்ற உண்மையின் நிமித்தமாக ஆவியில் களிகூர்ந்தோம். “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்” என்ற வாக்குறுதிக்காய்த் தேவனுக்கு நன்றி! (ஏசாயா 35:5)
– ரீபிரிண்ட்ஸ், பக்கம். 4622
(தெரிந்தெடுக்கப்பட்டப் பத்திகள்)