R1636 – அடையாளங்களினுடைய முக்கியத்துவம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1636 (page 99)

அடையாளங்களினுடைய முக்கியத்துவம்

THE IMPORT OF THE EMBLEMS

அப்பத்தைக் குறித்து நமது கர்த்தர் கூறினதாவது: “இது என் மாம்சம்” ஆகும்; அதாவது புளிப்பில்லாத அப்பமானது, நமக்காகப் பிட்கப்பட்ட அல்லது பலி செலுத்தப்பட்ட அவரது மாம்சத்தை, அவரது மனுஷீகத்தை அடையாளப்படுத்துகிறதாய் இருக்கின்றது. அவர் தம்மையே நமக்காகப் பலிசெலுத்தாதது வரையிலும் நம்மால் நித்தியமான ஜீவனை ஒருபோதும் பெற்றுக்கொள்ளமுடியாது; அவர் சொன்னதுபோல: “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை” (யோவான் 6:53).

இயேசுவின் சரீரம் பிட்கப்பட்டதான காரியமானது, மனிதன் புசித்தால், ஒருபோதும் மரியாமல் இருக்கப்பண்ணுகின்றதான, ஜீவ அப்பத்தை அளிக்கிறதாக மாத்திரம் காணப்படாமல், இன்னுமாக அது ஜீவனுக்கு நேரான “இடுக்கமான வழியையும்” திறந்தது மற்றும் ஜீவனுக்கு நேராய் வழிநடத்துகின்றதான இடுக்கமான வழியில் நடப்பதற்கு உதவியான, ஆவிக்குரிய உணவாகிய சத்தியத்தை நாம் அடையத்தக்கதாக, முத்திரையை உடைத்தது. இப்படியாகப் பிட்கப்பட்ட அப்பமானது, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று தம்மைக் குறித்துக் கூறினவரின் பிட்கப்படுதலை அடையாளப்படுத்துவது பொருத்தமானதே என்று நாம் காண்கின்றோம் (யோவான் 14:6).

ஆகையால் பிட்கப்பட்ட அப்பத்தை நாம் புசிக்கையில் – அவர் மரித்திருக்கவில்லையெனில், அவர் நமக்காகப் பிட்கப்பட்டிருக்கவில்லையெனில், நாம் ஒருபோதும் பிதாவினிடத்திற்கு வந்திருக்க முடியாது என்றும், நாம் என்றென்றும் ஆதாமினுடைய பாவத்தினுடைய சாபத்தின் கீழிலும், மரணத்தினுடைய நுகத்தின் கீழிலும் காணப்பட்டிருந்திருப்போம் என்றும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மற்றுமொரு கருத்து: பயன்படுத்தப்பட்ட அப்பமானது, புளிப்பற்றதாகும். புளிப்பு என்பது கெடுக்கிற ஒன்றாக, சீரழிக்கும் ஒன்றாக இருப்பதினால், பாவத்திற்கான அடையாளமாய் இருக்கின்றது மற்றும் பாவம் மனுக்குலத்தில் கொண்டுவந்ததான சீரழிவையும், மரணத்தையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் இந்த அடையாளமானது, நமது கர்த்தர் இயேசு பாவம் இல்லாதவராக இருந்தார் என்பதை, கறைதிறையற்ற ஆட்டுக்குட்டி என்பதை, “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவருமாய்” இருந்தார் என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. அவர் ஆதாமின் சந்ததியில் வந்தவராய் இருந்திருப்பாரானால், வழக்கம்போல் ஏதோ ஒரு பூமிக்குரிய தந்தை வாயிலாக தமது ஜீவனைப் பெற்றவராக இருந்திருப்பாரானால், அவரும்கூட மற்ற மனிதர்களைப்போலவே ஆதாமின் பாவத்தினால், புளிப்பானவராய் இருந்திருப்பார்; ஆனால் அவருடைய ஜீவனானது கறைதிறை இல்லாமல், உயர்ந்த பரலோக நிலையிலிருந்து, பூமிக்குரிய நிலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலைமையில் வந்ததாய் இருந்தது; ஆகவே அவர் “வானத்திலிருந்து வந்த அப்பம்” என்று அழைக்கப்பட்டார் (யோவான் 6:41). ஆகவே தேவன் அருளியுள்ளதான தூய்மையான, புளிப்பற்ற, மாசற்ற அப்பத்தினைக் குறித்து உணர்ந்துகொள்வோமாக மற்றும் அவரைப் புசிப்போமாக; அதாவது சத்தியத்தைப் புசித்து, ஜீரணிப்பதன் வாயிலாக அவரை நாம் புசிப்போமாக; அதிலும் விசேஷமாக விசுவாசத்தின் வாயிலாக அவரது நீதியை – நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுதல் எனும் சத்தியத்தைப் புசிப்போமாக; மேலும் அவரை வழியாகவும், [R1637 : page 99] ஜீவனாகவும் அடையாளங்கண்டு கொள்வோமாக.

இந்த நினைவுகூருதல் அடையாளங்கள் தொடர்புடையதான இன்னும் ஆழமான ஓர் அர்த்தத்தை, அப்போஸ்தலன் தெய்வீக வெளிப்படுத்துதலின் வாயிலாக தெரிவித்துள்ளார். அப்பமானது நமது கர்த்தர் இயேசுவை மாத்திரம் அடையாளப்படுத்துகின்றதாயிராமல், நாம் அவரைப் புசித்தப் பிற்பாடு (அவரது நீதியை நமக்குரியதாக்கிக் கொள்வதன் வாயிலாக நாம் நீதிமானாக்கப்பட்ட பிற்பாடு) நாம் அர்ப்பணத்தின் வாயிலாக, உலகத்திற்கான உணவாகிய அந்தப் பிட்கப்பட்ட ஒரே அப்பத்தின் பாகமாக, நாம் அவரோடு இணைந்தவர்களானோம் என்றும் அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். (1 கொரிந்தியர் 10:16). இது நீதிமானாக்கப்பட்ட விசுவாசிகளாகிய நாம், எதிர்க்கால மகிமைகளில் அவரோடுகூட உடன் சுதந்தரர்களாகுவதற்கும், பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பதும், பூமியின் குடிகள் அனைத்திற்கும் ஜீவன் வழங்குவதுமான மாபெரும் வேலையில் பங்காளிகளாகுவதற்குமுரிய நிபந்தனையாய்க் காணப்படுகின்ற கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும் இப்பொழுது பங்கடைவதற்கான சிலாக்கியத்தினை உடையவர்களாய் இருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.
[R1637 : page 100]

இதே கருத்தானது, அப்போஸ்தலனால் மீண்டும் மீண்டுமாகவும், பல்வேறு அடையாளங்களினாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அவை அனைத்தைக் காட்டிலும், இவ்வடையாளமே ஆற்றல் மிக்கதாய்க் காணப்படுகின்றது; அதாவது தங்கள் தலையோடுகூட (கிறிஸ்துவின் சரீரமாகிய – கொலோசியர் 1:24 பார்க்கவும்) சபையே இப்பொழுது பிட்கப்படுகின்றதான “ஒரே அப்பமாக” இருக்கின்றனர். இது நமது தலையானவருடனான நமது ஐக்கியத்திற்கும், உறவிற்கும் குறிப்பிடத்தக்கதான விவரிப்பாய்க் காணப்படுகின்றது.

“நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்;’ “அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16,17-KJV; திருவிவிலியம்)

‘திராட்சப்பழரசமானது’ (fruit of the vine) நமது கர்த்தரினால் பலிச்செலுத்தப்பட்ட ஜீவனை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது (மரணத்தில் கையளிக்கப்பட்ட ஜீவனுக்கான அடையாளம்)” (மத்தேயு 26:27,28).

பாவத்தின் காரணமாக ஆதாமின் சந்ததி இழந்துபோனதான ஜீவனுக்கான மீட்கும்பொருளாகக் கர்த்தர் தமது ஜீவனைக் கொடுப்பதன் மூலமே, புதிய உடன்படிக்கையின்கீழ் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் வாயிலாக மனிதர்களுக்கு ஜீவனுக்கான உரிமை கடந்துவர முடியும். (ரோமர் 5:18,19). சிந்தப்பட்ட இரத்தமானது “அனைவருக்குமான மீட்கும்பொருளாக” (விலையாகக் காணப்பட்டது; இது அனைவருக்காகவும், நமது மீட்பரினாலே கொடுக்கப்பட்டதாய் இருந்தது; ஆனால் அவர் பாத்திரத்தைச் சீஷர்களிடத்தில் கொடுத்து, அதைப் பருகும்படிக்கு அவர்களிடம் கூறினதாவது, தம்முடைய பாடுகளில் அவர்கள் பங்காளிகளாகுவதற்கான அல்லது பவுல் குறிப்பிட்டுள்ளதுபோன்று “கிறிஸ்துவின் உபத்திரவங்களில் குறைவானதை நிறைவேற்றுவதற்கான” அழைப்பாய்க் காணப்பட்டது (கொலோசெயர் 1:24). விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்பட்ட பிற்பாடு, நாமாய் முன்வந்து கிறிஸ்துவின் காரணங்களை/நோக்கங்களை ஆதரிப்பதின் வாயிலாக, அவரது பாடுகளில் பங்குகொள்வோமானால், நாம் தேவனால் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாகவும் மற்றும் இயேசுவின் பாடுகளில் பங்கடைபவர்களாகவும் கருதப்படுவோம் என்பதே நம்முன் வைக்கப்பட்ட காரியமாகும். “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் (சிந்தப்பட்ட இரத்தம் – மரணம்) பங்குகொள்ளுதல் அல்லவா?” (1 கொரிந்தியர் 10:16 திருவிவிலியம்). “பாத்திரத்தினுடைய” மதிப்பினை நாம் அனைவரும் உணர்ந்தவர்களாக, கிறிஸ்துவோடுகூட, அவரது பாடுகள் மற்றும் அவமானத்தின் “பாத்திரத்தில்” பங்குகொள்வதற்கான வாய்ப்பிற்காக, தேவனை ஸ்தோத்திரிப்போமாக; இப்படியானவர்கள் அனைவரும், அவரோடுகூட மகிமைப்படுத்தப்படுவர் என்ற நிச்சயமும் கொண்டிருக்கலாம். (ரோமர் 8:17)

பாத்திரமானது அவரது அவமானத்தில் நமது பங்குகொள்ளுதலையும், அவரது பலியில் நமது பங்குகொள்ளுதலையும், அதாவது நமது மனுஷீகத்தின் மரணத்தையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், நமது கர்த்தரும், பாத்திரத்திற்கு இந்த அர்த்தத்தைச் சாற்றினவராய் இருந்தார். உதாரணத்திற்கு அவரது சிங்காசனத்திலுள்ள எதிர்க்கால மகிமைக் குறித்த வாக்குறுதியை அவரது சீஷர்களில் இருவர், அவரிடத்தில் கேட்டபோது, அவரோ: “நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கக்கூடுமோ? என்றார். அவர்களது இருதயப்பூர்வமான உறுதிமொழியின் நிமித்தமாக, “என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்றார். திராட்சப்பழரசமானது, இரத்தம்/இரசம் வெளியே வருமளவுக்குத் திராட்சையைப் பிழிவதை மாத்திரம் குறிக்காமல், பிற்பாடு கடந்துவரும் புத்துணர்வையும்கூடக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; ஆகையால் “கிறிஸ்துவின் பாடுகளில்” இப்பொழுது பங்குகொள்ளும் நாம், அவரது மகிமைகளிலும், கனங்களிலும் மற்றும் அழியாமையிலும் சீக்கிரத்தில் பங்குகொள்வோம் – அதாவது இராஜ்யத்தில் அவரோடுகூடப் புதிய திராட்சரசத்தைப் பருகும்போது ஆகும்.

ஆகையால் மிகவும் அன்புக்குரியவர்களே, 19-ஆம் தேதி அன்று மாலையில், நமது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருகையில் நாம் செய்கிற காரியத்தினுடைய அர்த்தத்தினை மனதிற்குக் கொண்டுவருவோமாக; அவருடைய ஜீவனால் ஊக்குவிக்கப்பட்டு, ஜீவ அப்பத்தினால் பலப்படுத்தப்பட்டுள்ள நாம், அவருடைய மரணத்திற்குள்ளாக அவரோடுகூடப் பானம்பண்ணுவோமாக மற்றும் மற்றவர்களைப் போஷிக்கத்தக்கதாக அவரோடுகூட நாம் பிட்கப்பட வேண்டும் என்று முன்பில்லாத அளவுக்கு மிகவும் உறுதியுடன் முன்னேறுவோமாக. “நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (2 தீமோத்தேயு 2:11,12).

யார் பங்குகொள்ளலாம்
WHO MAY PARTAKE

இந்த அப்பத்திலும், இந்தப் பாத்திரத்திலும் பங்குகொள்வதற்குத் தனக்கு உரிமை இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளும் காரியமானது, அவனவனிடத்தில் விடப்பட்டுள்ளது. ஒருவன் பாவங்களுக்கான மன்னிப்பிற்காக, புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை விசுவாசித்து, தன்னை சீஷன் என்று அறிக்கைப் பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய ஊழியத்திற்கென அர்ப்பணம் பண்ணினவனாகக் காணப்படுவானானால், அவனது சக சீஷர்கள் அவனது இருதயத்தை நியாயந்தீர்க்காதிருப்பார்களாக. தேவனால் மாத்திரமே இருதயத்தினைத் தெளிவாய் அறிந்துகொள்ள முடியும்.

இந்த அடையாள சின்னங்களானது, கிறிஸ்துவினுடைய மரணத்தை அடையாளப்படுத்துகின்றபடியால், இந்த அடையாளங்களில் அறியாமையிலும், அபாத்திரமான நிலைமையிலும், சரியற்ற விதத்திலும், அதாவது இந்த அடையாளங்களில் “கர்த்தருடைய சரீரம்” நமக்கான மீட்கும்பொருளாக இருப்பதை அடையாளம் கண்டுகொள்ளாத நிலையிலும் பங்குகொள்ளுதல் குறித்து நாம் அனைவரும் ஜாக்கிரதையாய் இருப்போமாக; ஏனெனில் இப்படியான நிலையில் பங்குகொள்பவன், கர்த்தரைக் கொன்றுபோட்டவர்களில் ஒருவனாக இருப்பான் மற்றும் அடையாளத்தில் அவன் “கர்த்தருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாய் இருப்பான்” (1 கொரிந்தியர் 11:27).

“எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிவானாக;” எந்த மனுஷனும் இந்த அடையாளங்களைப் புசிக்கையில், இவைகள் தனது ஜீவன் மற்றும் சிலாக்கியங்களுக்கான மீட்கும்பொருளென உணர்ந்துகொள்வானாக மற்றும் அதைப் புசிக்கையில் கிறிஸ்துவின் பாடுகளில் பங்கெடுப்பதற்கும், மற்றவர்களுக்காகப் பிட்கப்படுவதற்குமெனத் தன்னை அளிக்கப்பெறுகிறவனாகுகின்றான் என்பதையும் உணர்ந்துகொள்வானாக; இல்லையேல் அவன் இப்படிப் போஜனம்பண்ணுவது என்பது அவனது மனசாட்சிக்கு முன்னிலையில், அவனது அன்றாட [R1637 : page 101] ஜீவியத்திற்கு “அவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு” வரும்படிக்கு ஏதுவாய் இருக்கும். (1 கொரிந்தியர் 11:28,29).

நமது நீதிமானாக்கப்படுதலை மாத்திரமல்லாமல், கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும் பங்குகொள்வதற்கான நமது அர்ப்பணித்தலையும் அடையாளப்படுத்துகின்றதான இந்த நினைவுகூருதலுக்குரிய அடையாள சின்னங்களைச் சரியாய் உணர்ந்துகொள்ளாததின் காரணமாக, “அநேகர் பலவீனரும், வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்” என்று அப்போஸ்தலர் கூறுகின்றார். (1 கொரிந்தியர் 11:30). இது உண்மை என்பது உறுதியே ஆகும்; இந்த இராப்போஜனத்தில் அடையாளப்படுத்தப்படும் உண்மைகளை உணர்ந்து கொள்ளாததும், கவனிக்கத் தவறினதுமே, பெயரளவிலான திருச்சபையானது பெலவீனமாயும், வியாதிப்பட்டும், நித்திரை நிலைமையிலும் இருப்பதற்குமான காரணமாய்க் காணப்படுகின்றது. மீட்கும்பொருள் பலிக் குறித்தும், தங்கள் கர்த்தருடன் உலகத்திற்கான பலியிலும், அவருடைய பாடுகளிலும் தங்களுக்கான பங்கைக் குறித்ததுமான தெளிவான உணர்ந்துகொள்ளுதலே பரிசுத்தவான்களை முழுமையாய் விழிப்படையப் பண்ணுகிறதாகவும், பலப்படுத்துகிறதாகவும் இருக்கின்றதே ஒழிய வேறு எதுவுமில்லை. “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்” (1 கொரிந்தியர் 11:28).