R1988 – கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1988 (page 128)

கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்

CHRIST JESUS CRUCIFIED

லூக்கா 23:33-46

இந்நாட்களில் தங்களைத் தாங்களாகவே உயர்வாய் எண்ணிக்கொள்ளும் விமர்சகர்களுடைய கோட்பாடுகளும், பரிணாமத்தின் வாயிலாக இரட்சிப்பு என்ற கோட்பாடுகளை ஆதரிப்பவர்களும் பல்வேறு திசைகளில் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்க, “கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்” என்ற ஆதார வசனத்தின் அடிப்படையிலான நம்முடைய இந்தப் பாடம் போன்றதான பாடங்கள் மீது “உலகளாவிய பாடங்கள்” (International Lessons) அடிக்கடி வேதத்தின் மீது ஆர்வமுள்ள மாணவர்களின் கவனத்தைத் திருப்புகின்றதைப் பார்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

மேற்கொள்ளப்பட்டவைகளிலேயே மிகப் பெரியதான நடவடிக்கையானது, அதாவது பாவம் எனும் மாபெரும் விசாரணைக்காரனிடமிருந்து (50 பில்லியனுக்கும் மேலான) அடிமைகளை வாங்கிக்கொண்டதான நடவடிக்கையானது, இது நடந்த நாட்களிலும் உணர்ந்து கொள்ளப்படவில்லை மற்றும் இதுவரையிலும்கூட உணர்ந்து கொள்ளப்படவில்லை; வெகு சொற்பமானவர்களாகிய “சிறுமந்தையினராலேயே” உணர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட நாட்களில் காணப்பட்டதான ஜனங்கள் என்ன செய்தார்களோ, அதுபோலவே இன்று வரையிலும் மனுக்குலத்தின் ஜனங்கள் செய்துகொண்டு வருகின்றனர். சிலர் நோக்கிப்பார்த்தனர், கொஞ்சம் அனுதாபம் கொண்டனர், ஆனால் எதையும் உணர்ந்துகொள்ளவில்லை; வேறு சிலர் ஏளனம் செய்து, தூஷித்தனர்; சிலர் களிக்கண்டனர் மற்றும் சிலர் அவரது வஸ்திரத்தின் மீது கேலியாகச் சூதாடினார்கள். அவர்கள் அவர் யார் என்று அறியவில்லை; அவர்களுக்காக அவர் நிறைவேற்றியுள்ளதான வேலையினுடைய முக்கியத்துவத்தை அவர்கள் அறியவில்லை. அவரது ஜீவியம் குறித்து ஏதோ கொஞ்சம், அதுவும் மிகவும் அரைகுறையாகவே அறிந்திருந்தார்கள், ஆனால் அவரது மரணத்தினுடைய முக்கியத்துவம் குறித்தோ, அவர்களால் எதுவும் காண முடியவில்லை. இப்பிரபஞ்சத்தினுடைய தேவனானவன் அவர்களுடைய மனங்களைக் குருடாக்கியுள்ளபடியால் அவர்களால் காண முடியவில்லை என்று கூறி, அவர்களது நிலைமையைக் குறித்துத் தேவ ஏவுதலின் பேரில், அப்போஸ்தலன் அவர்களது கவனத்திற்குக் கொண்டுவந்தார். அன்று முதல் இன்று வரையிலுங்கூடத் தவறான கொள்கைகள், தவறான எதிர்பார்ப்புகள், தவறான மன விவாதங்கள் மற்றும் கர்த்தருக்கான உண்மையான அர்ப்பணம் இல்லாமை என்பவைகள் அநேகருடைய கண்களை, அதாவது உலகத்தாருடையது மாத்திரமில்லாமல், இன்னுமாக கிறிஸ்துவின் சீஷர்கள் என்று தங்களைக் குறித்து அறிக்கைப்பண்ணிக் கொள்கின்றவர்களுடைய கண்களையும் கூடக் குருடாக்கியுள்ளது.

ஆனால் கல்வாரியில் “நிறைவேற்றப்பட்டதான” ஈடுபலியினுடைய உண்மையான மதிப்பை/முக்கியத்துவத்தைக் காண்கின்றவர்கள் அனைவருக்கும் மற்றும் அந்த மாபெரும் நடவடிக்கையின் விளைவாக இறுதியில் கடந்து வரப்போகின்றதான அருமையான பலன்களைக் காணத்தக்கதாக, கண்கள் திறக்கப்பெற்ற அனைவருக்கும் இவர்கள் அனைவருக்கும் “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கத்தரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 13:16,17) என்பதான போதகருடைய வார்த்தைகளானது, அழுத்தத்துடன் பொருந்துகின்றதாய் இருக்கிறது. தெய்வீகத் திட்டம் முழுவதையும் புரியும்படி தெளிவாக்கின இந்த “மாபெரும் வெளிச்சத்தை” பார்க்கிறவர்களுக்கு, நன்றியுடன் இருப்பதற்கு மாபெரும் காரணங்கள் இருக்கின்றது; ஏனெனில் இப்படியானவர்கள் இருளினின்று, ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டுவரப்பட்டவர்களாய் இருக்கின்றனர். சிலுவையினுடைய வெளிச்சத்தில் பார்க்கையில், அவரது மாபெரும் பலியில் உண்மையாய் விசுவாசம் கொண்டிருக்கின்றதான அவரது சபையாகிய நமக்கு வந்துள்ளதான ஆசீர்வாதங்களுக்காக மாத்திரம் அல்லாமல், விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமான மீட்பு பற்றின இந்தக் கிருபையான செய்தியானது “ஏற்ற வேளையில்” அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும் என்றும், செவிடான காதுகள் அனைத்துமே திறக்கும் என்றுமுள்ள வாக்குத்தத்தத்திற்காகவும் நாம் தேவனுக்கு நன்றி ஏறெடுக்கின்றோம். அனைவருக்கு மாக ஒரே தரம் கொடுக்கப்பட்டதான மகா பாவநிவாரண பலியினுடைய உண்மையான முக்கியத்துவத்தையும், அதன் மதிப்பையும்/நன்மையையும் ஏற்ற வேளையில் அனைவரும் காண்பார்கள்; ஏனெனில் ஆசீர்வாதமான ஆயிர வருட நாளைக் குறித்துப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது; “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்” (ஏசாயா 35:5); “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஏசாயா 11:9)

அழுதுக்கொண்டிருந்த சீஷர்களைத் தவிர, மனம் வருந்தின கள்வன் மாத்திரமே, கர்த்தருடைய நீதியைக் குறித்து உணர்ந்துகொண்டவனாக இக்காட்சியில் காணப்படுகின்றான். அப்போதிருந்தது போலவே, அனைத்துக் காலப்பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது; பிரதான ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களில் அநேகர் உணர்ந்துகொள்ளுதலோ அல்லது அனுதாபமோ இல்லாமல், சத்தியத்தைச் சிலுவையில் அறைந்துபோட்டிருக்கின்றனர்; ஆதரவு கொடுப்பவர்களாகக் காணப்படும் (ஒரே) கூட்டத்தாரிலும், மிகவும் சீரழிந்து போனவர்களிலிருந்து வந்த சிலரே பெரும்பாலும் காணப்படுகின்றனர்.

ஒரு வேளை மனித இருதயங்களானது, இந்த மாபெரும் நடவடிக்கைக் குறித்து உணர்ந்துகொள்ளாமலும், அனுதாபம் கொள்ளாமலும் காணப்பட்டாலும்கூட, இயற்கையானது அப்படியாகக் காணப்படவில்லை; இந்த அருமையானதொரு காட்சிக்குச் சாட்சியாகக் காணப்பட்ட இயற்கையானவள், தனது முகத்தினை இருளினால் முக்காடிட்டுக் கொண்டாள் மற்றும் நடுங்கிப் போனாள். பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் நடுவில் காணப்பட்டதான திரைச்சீலை கிழிந்ததானது, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்வதற்கான வழி திறக்கப்பட்டுள்ளதை அடையாளமாய்க் கற்பிக்கின்றதாய் இருக்கின்றது. இதற்கு அப்போஸ்தலன் இவ்விதமாக எபிரெயர் 10:19-22 வரையிலான வசனங்களில் அர்த்தம் கொடுக்கின்றார்.

இறுதி வரையிலும் உண்மையாயும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் நமது கர்த்தர் இயேசு காணப்பட்டு, தம்முடைய ஆவியை, மரிக்கும் தருவாயில் பரம பிதாவிடம் ஒப்படைத்தார்; பிதாவின் வாக்குத்தத்தங்களானது, அவரது ஜீவியம் முழுவதிலும் அவரைத் தாங்கினது/ஆதரித்தது மற்றும் அவைகள் இப்பொழுது, அவரது மரணத் தருவாயில் அவருக்குப் பெலனாகவும் இருந்தது. எனினும் மற்றொரு பதிவில் பார்க்கும்போது, கடைசி தருணத்தில் பரம பிதா, நமது கர்த்தருக்கான இந்த ஆதரவை, அவரிடமிருந்து எடுத்துவிட்டு, அநேகமாக அவரை ஒரு கணம் தனிமையில் விட்டுவிட்டதாக நாம் பார்க்கின்றோம்; மேலும் இந்த அவருடைய கடைசி அனுபவமானது, அவருக்கு முற்றும் முழுமையான தனிமையாகவும், பிதாவிடமிருந்து முற்றிலுமான பிரிவாகவும் காணப்பட்டது. [R1989 : page 128] இது பிதாவினுடைய வெறுப்பின் காரணமாய் அல்ல என்பதை நாம் அறிவோம்; ஏனெனில் தாம் அனைத்துக் காரியங்களிலும் மற்றும் எப்போதும் பிதாவைப் பிரியப்படுத்தியுள்ளார் என்ற வாக்குறுதியை இயேசு பெற்றிருந்தார் மற்றும் இதை அப்போஸ்தலனாகிய பேதுரு அப்போஸ்தலர் 17:31-ஆம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளதுபோன்று, மரணத்திலிருந்து இயேசுவை உயிர்த்தெழுப்பினதின் மூலம் பிதா பின்னர் உறுதிப்படுத்தினார். இயேசு பாவியினுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டபடியால், அந்த அனுபவம் அவசியமாய் இருந்தது. பாவியாகிய ஆதாம் மற்றும் அவருக்குள் நாம் அனைவரும் ஜீவனுக்கான நமது உரிமையை மாத்திரமல்லாமல், இன்னுமாகப் பிதாவுடனான ஐக்கியத்தையும் இழந்து போயுள்ளோம்; மேலும் நமக்கான மீட்கும்பொருளாக வேண்டுமானால், நமது மீட்பர், நமக்காக மரிப்பது மாத்திரம் அல்லாமல் இன்னுமாக அவர் பாவியைப்போன்று மரிக்க வேண்டியது அவசியமாகின்றது. அதாவது மரணத்தீர்ப்பின் கீழாகக் காணப்படும் குற்றவாளி போன்று மரிக்க வேண்டியது அவசியமாய் உள்ளது; இன்னுமாக பாவி பிதாவினுடைய தயவு மற்றும் ஐக்கியத்திலிருந்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டுக் காணப்படும் அனுபவத்தையும் அவர் ருசிக்க வேண்டும். நமது அருமை மீட்பர் கடந்து சென்ற அனுபவங்களிலேயே, இந்தக் கடைசி அனுபவமே மிகவும் கடுமையான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். இத்தருணத்தில்தான், அவரது ஆன்மாவானது வியாகுலத்தோடே, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?” என்று கதறினது.