R1382 – நினைவுகூருதல் இராப்போஜனம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1382 (page 87)

நினைவுகூருதல் இராப்போஜனம்

THE MEMORIAL SUPPER

நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதலை, ஆசரிப்பதற்கான மிகப் பொருத்தமான தருணம், அதன் ஆண்டு நிறைவு நாளேயாகும் என்றே நாம் விசுவாசிக்கின்றோம் மற்றும் போதிக்கின்றோம். இதுவே ஆதித் திருச்சபையினுடைய வழக்கமாய் இருந்தது மற்றும் இது இன்னமும் புதிய பாணியில் சில சபைப்பிரிவினரால் புனித வெள்ளியன்று ஆசரிக்கப்பட்டு வருகின்றது; எனினும் வாரத்தினுடைய அதே நாளில் ஆசரிப்பைக் கொண்டிருக்கத்தக்கதாக, தேதியினுடைய துல்லியமானது பொருட்படுத்தப்படுவதில்லை. ஆதித் திருச்சபையினரைப்போன்று, நினைவுகூருதலை அதன் ஆண்டு நிறைவு நாளில்தானே, அதாவது ஆதித் திருச்சபையினரும், யூதர்களும், சந்திர காலத்தின்படி கணக்கிட்டதுபோல, யூதருடைய பஸ்கா ஆரம்பிப்பதற்கு முந்தின நாளில், ஆசரித்திடுவதற்கே நாமும் விரும்புகின்றோம்.

இன்னுமாக இந்த நினைவுகூருதலை ஆசரிப்பதற்கான ஒரே ஏற்ற விதம், இதை நமது கர்த்தர் அறிமுகப்படுத்தின விதமும், ஆதித் திருச்சபையினர் ஆசரித்த விதமுமாகும் என்றும், இன்று சிலரால் புனித வெள்ளி என்று ஆசரிக்கும் விதத்திலல்ல என்றும் நாம் விசுவாசிக்கின்றோம் மற்றும் போதிக்கின்றோம்.

அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட அதே இரவில் – மாலை 6 மணிக்குப் பிற்பாடு; அதாவது எபிரெய மாதமாகிய நீசானின் 13-ஆம் தேதி என்று நம்மால் அழைக்கப்படுகின்றதும், ஆனால் நீசான் மாதத்தினுடைய 14-ஆம் தேதியின் ஆரம்பம் என்று (யூதர்களின் 24 மணி நேரமானது [R1382 : page 88] மாலையில் ஆரம்பிப்பதன் காரணமாக) யூதர்களால் அழைக்கப்பட்ட தேதியில்; மற்றும் யூத காலக்கணக்கிடுதலின்படி அவர் சிலுவையில் அறையப்பட்ட அதே நாளில் (அவர்களது பஸ்கா வாரம் ஆரம்பமாகுவதற்கு முந்தின நாளில்) – நமது கர்த்தர், தம்முடைய சீஷர்களோடு பஸ்கா இராப்போஜனத்தை ஆசரித்தார். (பஸ்கா பண்டிகை வாரத்திற்கு முன்பு எப்போதும் இடம்பெறும் ஆட்டுக்குட்டியுடனான இராப்போஜனமானது, யூதர்களால் பஸ்கா பண்டிகை என்று அழைக்கப்படவுமில்லை மற்றும் இப்பொழுதும் இப்படியாக அழைக்கப்படுகிறதுமில்லை). (நமது கர்த்தர் சிலுவையில் மரிப்பதுவரையிலும் ஒவ்வொரு யூதன்மேலும் ஆதிக்கம் கொண்டிருந்ததான) நியாயப்பிரமாணத்தின்படி ஆசரித்தப் பிற்பாடு, இயேசு தம்முடைய சொந்த மரணத்திற்கான நினைவுகூருதலை நிறுவினார் மற்றும் தம்முடைய மாம்சம் மற்றும் இரத்தத்திற்கு, அப்பத்தையும், “திராட்சபழரசத்தையும்” (fruit of the vine) அடையாளங்களாய்ப் பயன்படுத்தினார்.

தம்முடைய பின்னடியார்கள் பாவங்களுக்கான தம்முடைய பலியினை நினைவுகூருவதற்கு அவர்களுக்குக் கற்பிக்கும் வண்ணமாகக் கூறினதாவது,

என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்

அப்பம் மற்றும் திராட்சப்பழச்சாறுபோன்று, ‘வேளையும்’, இந்த நிறுவுதலில் ஒரு பாகமாகக் காணப்படுவதாக எங்களுக்குத் தோன்றுகின்றது. அதேசமயத்தில் இந்த விஷயத்தில் நமது கர்த்தர் நுணுக்கமாய்க் காணப்பட்டார். அவர் “நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்று கூறியிருந்தபோதிலும், நியாயப்பிரமாணத்தின்படி இது எகிப்தில் இஸ்ரயேலின் முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதல் காரியத்துக்கு முன்பாக நிகழும் நிழலான ஆட்டுக்குட்டியினுடைய அடிக்கப்படுதலுக்குரிய ஆண்டு நிறைவு நாள் வருவதுவரையிலும் புசிக்கப்பட முடியாது; அந்த ஆண்டு நிறைவு நாளே “உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிறவரும், முதற்பேறானவர்களின் சபையை முதலாவது தப்புவிக்கிறவர் (அ) இரட்சிக்கிறவரான உண்மையான தேவ ஆட்டுக்குட்டியினுடைய அடிக்கப்படுதலுக்கான ஆண்டு நிறைவு நாளாய் இருக்கப்போகின்றது. ஆகையால் நமது கர்த்தர் காத்திருந்து, “வேளை வந்தபோது (நியாயப்பிரமாணத்தின்படி முடிந்தமட்டும் நேரமே) அவர் பந்தியிருந்தார்” (லூக்கா 22:14-20).

“ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:26) என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளானது, எந்த ஒரு வேளையிலும், எந்த ஒரு நாளிலும், எந்த ஒரு மாதத்திலும் இதை ஆசரிப்பதற்கான அனுமதியைக் கொடுப்பதாக, அநேகரால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 11:26-குறிப்பாய் ரீபிரிண்ட்ஸ் 1289-இல் விவரிக்கப்பட்டுள்ளது); ஆனால் இவ்வசனத்தை ஆராய்ந்துப் பார்ப்பவர்களினால், இப்படியாகப் புரிந்துகொள்ளப்படாது; ஏனெனில் “இதைப் புசித்து, பானம்பண்ணும்” என்ற வார்த்தைகளுக்கு விசேஷித்த முக்கியத்துவம் உள்ளது. வேறொரு வேளையில் செய்வது என்பது, அது “இதைச்” செய்வதாக இருக்காது; அதாவது ஐக்கிய நாடுகளின் சுதந்திர தினமானது, ஜூலை 4-ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என்று கட்டளைக் கொடுக்கப்பட்டிருக்க, வேறொரு நாள் கொண்டாடப்படுமாயின், அது இக்கட்டளையை நிறைவேற்றினதாகவோ (அ) சுதந்திரதின நிகழ்வைக் கொண்டாடினதாகவோ இராததுபோலாகும்.

தேவனுடைய ஜனங்கள் இந்த விஷயத்திலோ அல்லது வேறு ஏதாகிலும் விஷயத்திலோ, நியாயப்பிரமாணத்தின் கீழ்க் காணப்படுகின்றார்கள் என்று நாங்கள் போதிப்பதாக எவரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். நம்முடைய புதிதான உடன்படிக்கைக்கான ஒரே பிரமாணம், அன்பின் பிரமாணமாகும். நம்முடைய ஆண்டவரை நாம் அன்புகூருகின்றோம் மற்றும் நம்முடைய பாவங்களுக்கான அவரது மாபெரும் பலியினை ஆசரித்திடுவதற்கு நாம் விரும்புகின்றோம் மற்றும் அவர் நமக்குத் தெரிவித்திருக்கிறபடியே, எங்களால் முடிந்தமட்டும் அப்படியே ஆசரித்திடுவதற்கு நாங்கள் விரும்புகின்றோம்.

கர்த்தருடைய ஜனங்களில் சிலர் அவரது மரணத்தை வாரத்தின் முதல் நாள்தோறும் கொண்டாடுகின்றனர்; இப்படியாய்ச் செய்யும் விஷயத்திற்கு அப்போஸ்தலர் 2:46; 20:7-ஆம் வசனங்களில் பதிவுபண்ணப்பட்டுள்ளதான அப்போஸ்தலர்கள் மற்றும் ஆதித் திருச்சபையினருடைய வழக்கமானது ஆதரவளிப்பதாகவும் இவர்கள் எண்ணிக்கொள்கின்றனர். “அப்பம் பிட்குதல்” எனும் வார்த்தைகளை இவர்கள் தவறாய்ப் பொருத்திப்பார்க்கின்றனர் என்றும், அது நினைவுகூருதலின் இராப்போஜனம் அல்ல என்றும், அது இரண்டு காரணங்களுக்காக, ஆதித் திருச்சபையினர் கொண்டிருந்த சாதாரண உணவு வழக்கம்தான் என்றும் நாம் கூறுகின்றோம்; அந்த இரண்டு காரணங்கள் என்னவெனில்: (1) சொற்பமானவர்களாகவும், இங்குமங்குமாகக் காணப்படுபவர்களாகவும் ஆதித் திருச்சபையினர் காணப்பட்டபடியால், அவர்கள் கூடுகைக்காக ஒன்றுகூடுகிற தருணங்களில், மதிய உணவு கொண்டுவந்தவர்களாய் இருந்தனர் மற்றும் (2) இப்படிக் கூடுகைகளுக்காக, அவர்கள் வாரத்தின் முதல்நாளில் கூடினபோது, அவர்கள் ஒன்றுசேர்ந்து உணவு உட்கொண்டனர்; காரணம் வாரத்தின் முதல்நாளில்தான் நமது கர்த்தர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்; காரணம் அதே நாளில்தான், தம்மைப்பற்றின வேதவாக்கியங்கள் நிறைவேறியுள்ளதை அவர்களுக்கு அவர் வெளிப்படுத்தினார் மற்றும் இரவு உணவு உண்கையில், அப்பத்தைப் பிட்பதன் மூலம் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பிற்பாடு தங்களுக்கு மிக அதிகமான சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவந்ததான நாளையும், உணவையும் கொண்டாடிடுவதற்கு அவர்கள் விரும்பினார்கள் (லூக்கா 24:25-32).

வாரத்தினுடைய முதல்நாளில் உயிர்த்தெழுதலின் கொண்டாடுதலையும், இந்த மதிய உணவுகளையும், நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதலோடு குழப்பிக்கொள்பவர்கள் கடுமையான தவறைச் செய்யவில்லை என்றாலும், பெரிதான தவற்றையே செய்துள்ளனர். இந்த உணவுகளின்/அப்பம் பிட்கப்பட்ட நிகழ்வுகளில் திராட்சப்பழரசம் குறிப்பிடப்படவில்லை என்பதையும், அப்பம்போன்ற முக்கியத்துவம் உடையதான திராட்சப்பழரசமானது, நினைவுகூருதல் இராப்போஜனமானது குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் ஒருபோதும் குறிப்பிடப்படுவதிலிருந்து தவிர்க்கப்படுவதில்லை என்பதையும் இத்தகையவர்கள் கவனித்திட வேண்டும். ஒரே கிரேக்க வார்த்தையை உடையதான “அப்பம் பிட்குதலானது” அப்போஸ்தலர் 27:35-ஆம் வசனத்திலும் இடம்பெறுகின்றதாய் இருக்கின்றது; இங்கு நினைவுகூருதலுக்காகவோ (அ) அடையாளமாகவோ இல்லாமல், பசிக்கான சாதாரணமான உணவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

இந்தப் பாடத்தினைச் சுருக்கமாக இங்குக் கொடுத்திருக்கின்றோம். நினைவுகூருதலை யார் ஆசரிக்க வேண்டும், எப்படி ஆசரிக்க வேண்டும் மற்றும் இன்னும் பல சுவாரசியமான [R1382 : page 89] கருத்துகளுக்காக, நமது அன்றாட வாசகர்களுக்கு நாம் ரீபிரிண்ட்ஸ் 1289-யை பரிந்துரைக்கின்றோம்.

தங்களுக்கான ஈடுபலியெனக் கிறிஸ்துவின் மரணத்தினுடைய முக்கியத்துவத்தினை அடையாளம் கண்டுகொண்டுள்ள அனைவரும், கர்த்தரிலுள்ள நம்முடைய தற்போதைய சந்தோஷங்களுக்கு ஆதாரமாகவும், இந்த நினைவுகூருதலின் நிறைவேறுதலில் நாம் பிரவேசிக்க இருக்கின்றவைகளுக்கு ஆதாரமாகவும், அதாவது இராஜ்யத்தில், மகிமையில் நாம் பங்கெடுக்கப்போகும் நம்முடைய கர்த்தருடைய சந்தோஷங்களுக்கு ஆதாரமாகவும் காணப்படுகின்றதான மாபெரும் நிகழ்வினை நினைவுகூரும் வண்ணமாக, போதகர் கட்டளையிட்டதுபோன்று “இதைப் புசித்து, பானம் பண்ணிடுவதற்கு” நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம். ஆனால் பாவங்களுக்கான இந்தப் பலியிடமிருந்து இல்லாமல், வேறுபக்கத்திலிருந்து மன்னிப்பு வருமென்று நம்புகின்றவர்களும், தங்கள் சொந்தப் பாவங்களைத் தங்களால் சிலுவையில் அறையமுடியும் என்றும், மற்றும் இப்படியாய்த் தங்களைத் தேவனுக்கு ஏற்புடையவர்களாக்க முடியும் என்றும் நம்புகின்றவர்களும், இந்த நினைவுகூருதலை ஆசரிக்க வேண்டாம்; ஏனெனில் இவர்கள் பாவத்தை எடுத்துப்போடுகிறதும், விசுவாசியைத் தேவனுக்கு முன்பாக ஏற்புடையவனாக்குகிறதுமான ஒரே ஒரு பாவநிவாரண பலியென, கர்த்தருடைய பிட்கப்பட்ட சரீரத்திற்கும், சிந்தப்பட்ட இரத்தத்திற்கும் இருக்கும் மதிப்பினை உணராதவர்களாய் இருப்பதினால் இப்படியானவர்கள் போஜனபானம்பண்ணும்போது, தங்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகின்றவர்களாய் இருந்திடுவார்கள்.