R4590 – நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R4590 (page 115)

நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்

THE MEMORIAL PASSOVER SUPPER

யூதர்களுடைய காலக்கணக்கீட்டின்படி நினைவுகூருதல் இராப்போஜனத்தின் ஆண்டுநிறைவு நாளானது, இந்த வருடம் ஏப்ரல் 22-ஆம் தேதி, வெள்ளி மாலை 6 மணிக்குமேல் இடம்பெறுகின்றதாய் இருக்கின்றது. நாம் யூதர்களின் காலக்கணக்கீட்டின்படி கைக்கொள்வதுபோன்றே, ஆதியில் கிறிஸ்தவ சபையும் இந்த நினைவுகூருதலின் இராப்போஜனத்தைக் கைக்கொண்டுவந்தார்கள்; ஆனால் இதற்கான தேதிகளை மிகவும் சீராக பெற்றுக்கொள்ளத்தக்கதாகவும் மற்றும் யூதருடைய மாதிரியின்படி பின்பற்றும் எண்ணத்திலிருந்து கிறிஸ்தவர்களுடைய மனங்களைத் திசைத்திருப்பத்தக்கதாகவும் தேதியினை கணக்கடும் முறைமை கொஞ்சம் மாற்றப்பட்டது. யூதருடைய காலக்கணக்கீட்டுமுறைமை பஸ்காவானது, வாரத்தினுடைய எந்தக் கிழமையிலும் வருவதற்கு அனுமதித்ததாய் இருந்தது. ஆனால் காலக்கணக்கீட்டுமுறைமையின் மாற்றமானது – நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டுநிறைவு நாளானது எப்போதும் வெள்ளிக்கிழமைகளில் வரப் பண்ணிற்று; இது “புனித வெள்ளி” என்று அழைக்கப்பட்டது மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கான ஆண்டுநிறைவு நாளானது எப்போதும் “மூன்று நாளைக்குப் பிற்பாடு, ஞாயிற்றுக்கிழமைகளில் வரப்பண்ணிற்று; இது பிற்பாடு ஈஸ்டர் ஞாயிறு என்று அழைக்கப்பட்டது. யூதர்களுடைய காலக்கணக்கீடுமுறைமையானது, சந்திரன் மற்றும் சூரியன் அடிப்படையிலாகும். ஆகவே அவர்களுடைய பெரும்பான்மையான வருடங்கள் பன்னிரண்டு மாதங்களை உடையதாக இருந்தது மற்றும் அவ்வப்போது சில வருடங்கள் பதிமூன்று மாதங்களை உடையதாக இருந்தது. யூதர்களுடைய காலக்கணக்கீடு முறைமையின்படி, வசந்த காலத்தின்/இளவேனிற் சம இரவு பகல் நாளைத் தொடர்ந்துவரும் முதல் அமாவாசையிலிருந்து 14 நாட்களுக்குப் பின்வரும் பௌர்ணமி இடம்பெறும் நாளானது, பஸ்கா தேதியாகக் காணப்படுகின்றது. பிற்பாடு – இளவேனிற் சம இரவு பகல் நாளைக்கு முன்னதாகவே சந்திரனானது அமாவாசை நிலையில் காணப்படுகின்றபோதிலும், சம இரவு பகல் நாளைத் தொடரும் முதல் பௌர்ணமிக்குச் சமீபமான வெள்ளிக்கிழமையினைக் கிறிஸ்தவ சபைகள் தெரிந்துகொண்டனர் – இதுவே இவ்வருடம் கத்தோலிக்கரின் கணக்குப்படி புனித வெள்ளியானது மார்ச் 25-ஆம் தேதியிலும், யூத கணக்கிடுதலின்படி, சரியான தேதி ஏப்ரல் 23-ஆம் தேதியாக இடம்பெறுவதற்கும் இடையிலான வித்தியாசத்திற்கான காரணமாகும். நாம் நினைவுகூருதலை முந்தின மாலையில் ஆசரிக்கின்றோம். நமது கர்த்தருடைய மரணத்திற்கான நாளோ (அ) வேளையோ அல்ல, அவரது மரணமே பிரதானமாய் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இந்த [R4591 : page 115] வருடம் இத்தகையதொரு நினைவுகூருதலானது ஏப்ரல் 22-ஆம் தேதி, வெள்ளி மாலை, 6 மணிக்குமேல் (நீசான் 14-ஆம் தேதியில்) ஆசரிக்கப்படும். அடுத்த நாள், ஏப்ரல் 23-ஆம் தேதி, சனி, பிற்பகல் 3 மணியானது, நமது கர்த்தருடைய மரணத்திற்கு இணையான வேளையாகும்; யூதருடைய பஸ்கா பண்டிகையானது மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் துவங்குகின்றதாய் இருக்கின்றது. அனைவருடைய மனங்களைத் திருப்திப் படுத்திடவே, இவ்வளவு விளக்கம் கொடுக்கப்படுகின்றது.

நாம் எதை நினைவுகூருகின்றோம்?

நாம், நான்கு மாபெரும் காரியங்களை நினைவுகூருகின்றோம். அவை பின்வருமாறு:

(1) பஸ்கா ஆட்டுக்குட்டியாக நமது கர்த்தர் மரித்த விஷயம்.

(2) அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற பின்னடியார்களும், அவருடைய பாத்திரத்தில் பங்காளிகளுமானவர்களுமாகிய நமக்குக் கிறிஸ்துவின் மரணத்திலும், கிறிஸ்துவின் பாடுகளிலும் அவரோடுகூட உள்ள நமக்கான உறவு அல்லது பங்கு பற்றின விஷயம்.

(3)தற்கால இரவில் நிகழும் இந்தக் கடந்துபோகுதலுக்குப்பின் விரைவாக வரப்போகின்ற மாபெரும் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக இப்பஸ்காவை நாம் அநுசரிக்கின்றோம். விடுதலையானது முதலாவதாகக் கடந்துபோகப்பட்டவர்களாகிய சபைக்கும் – “சிறு மந்தைக்கும்” மற்றும் திரள்கூட்டத்தினருக்கும், அதாவது நிஜமான இராஜரிக ஆசாரியக் கூட்டத்தாருக்கும் மற்றும் லேவி கோத்திரத்தாருக்கும் கடந்துவரும். இவர்களின் விடுதலையானது, காலையில், அதாவது, உயிர்த்தெழுதலின் காலையில், அதாவது ஆயிரவருடத்தின் காலைவேளையில் சம்பவிக்கும்.

(4)சபையைக் கடந்துபோகுதலுக்குப்பிற்பாடு தொடரும், “கொழுத்த பதார்த்தங்களின் மாபெரும் விருந்தையும்” நாம் நினைவுகூர்ந்து எதிர்பார்க்கின்றோம். அதாவது, கடந்துபோகப்பட்டவர்கள் தங்கள் கர்த்தரோடு சேர்ந்து அவருடைய பரலோக இராஜ்யத்தில் மாபெரும் நிஜமான தீர்க்கதரிசியாகவும், பூமி முழுவதற்கும் ஆசாரியராகவும், நீதிபதியாகவும், மத்தியஸ்தராகவும், இராஜாவாகவும் இருந்து, தற்காலத்தில் தாங்கள் பங்கடைவதற்கென அவர் அனுமதித்ததும் மற்றும் தங்களைப் பாத்திரவான்களாக்குவதற்கெனத் தங்களுக்குத் தரிப்பிக்கப்பட்டதுமான அவருடைய அதே இரத்தத்தின் புண்ணியத்தின் (தகுதியின்) மூலம் இவர்கள் மனுக்குலத்தைச் சீர்தூக்கி ஆசீர்வதிக்கப்போகும் காரியங்களையும் நாம் நினைவுகூர்ந்து எதிர்பார்க்கின்றோம்.

இந்த நினைவுகூருதலிலிருந்து நாம் மாபெரும் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், மேற்பார்த்த அவ்விஷயங்களைத் தனித்தனியேயும், தெளிவாயும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

“தேவனுடைய ஆட்டுக்குட்டியென” இயேசுவை நாம் பார்க்கும்போது, அவர் கறைதிறையற்றவர் “பரிசுத்தர், குற்றமற்றவர், மாசில்லாதவர், பாவிகளுக்கு விலகினவர், என்று அறிந்துகொள்கின்றோம். (எபிரெயர் 7:26) அவர் எப்படி, “ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்” என்றும், எப்படி “மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்” என்றும், நாம் அறிந்துகொள்கின்றோம் (அப்போஸ்தலர் 8:32). தம்மை அழிக்க நோக்கம் கொண்டிருப்பவர்களை இயேசு தமது பேச்சினாலேயே எதிர்த்திருக்க முடியும். எந்த மனுஷனும் அவரிடத்திலிருந்து அவருடைய ஜீவனை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அவர்தாமே விரும்பி முன்வந்து தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்றும் உள்ள காரியங்களை நமக்கு உறுதிபடுத்திக் காட்டியுள்ளார். இயேசு, பிதாவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதற்கெனத் தமது ஜீவனை ஒப்புக்கொடுக்கவில்லை. ஏனெனில் நீதியானது, பலிச்செலுத்த வேண்டுமென்று கேட்கவில்லை. மாறாக இயேசு, பிதாவின் சித்தத்திற்கு இசைவாக, “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச்செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று கூறி தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தவராகக் காணப்பட்டார் (சங்கீதம் 40:8). இந்த ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, தமது பலியின் புண்ணியம் முதலாவது, தமது பின்னடியார்களுக்கான நன்மைக்காகவும், பின்னர் ஜனங்களையும் சகல ஆசீர்வதிப்பதற்காகவும் உதவும் என்பது தெய்வீகத் திட்டமாக இருப்பதை முன்னறிந்திருந்த நிலையில், நமது மீட்பர் தம்மை தப்புவித்துக் கொள்ளாமல், தம்மை மனபூர்வமாய் ஒப்புக்கொடுத்ததினிமித்தம் கிறிஸ்தவ விசுவாசி அதிகமாய்க் களிகூரக்கடவன். ஆகவே, பிட்கப்பட்ட புளிப்பில்லாத அப்பத்தில் நாம் பங்குகொள்ளும்போது, தேவனுடைய ஏற்றவேளையில் மனுக்குலம் முழுவதற்குமான ஈடுபலியாக தம்மையே ஒப்புக்கொடுத்தவரின் தூய்மையையும், பாவமற்ற தன்மையையும் நாம் நினைவுகூருகின்றோம். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து நாம் பார்க்கையில் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டுக் காணப்படும் நமது இனத்தை, தெய்வீகப் பிரமாணத்தை மீறாமல் ஜீவனுக்குள் சீர்ப்பொருந்துவதற்கு இயேசுவின் மரணம் அவசியமாய் இருப்பதை அவருடைய சிந்தப்பட்ட இரத்தம் சுட்டிக்காட்டுகின்றது என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இங்குச் சற்று நேரம் – கர்த்தராகிய இயேசு கிறஸ்துவின் அன்பை மாத்திரமல்லாமல், இத்திட்டத்தைத் திட்டமிட்ட பிதாவின் அன்பையும் மற்றும் இப்படியாக மாதிரியாக்கப்பட்ட அவருடைய நீதியையும் மற்றும் இப்படியான ஏற்பாடு செய்வதிலுள்ள அவருடைய ஞானத்தையும் நம்முடைய இருதயங்களில் நாம் நிதானித்து உணர முற்படுகின்றோம்; இன்னுமாக, இந்த ஏற்பாடுகளின் சகல மகிமையான அம்சங்களும் மற்றும் நாம் நினைவுகூரும் அனைத்து [R4591 : page 116] வாக்குத்தத்தங்களும் முழுமையாய் நிறைவேறும்போது விளங்கப்போகும் தேவனுடைய வல்லமையையும் நமது விசுவாசமானது கிரகித்துக்கொள்ள வேண்டும்.

முதலாம் கருத்துபோன்று, இரண்டாம் கருத்தும் நமக்கு முக்கியமானதாய் உள்ளது. மீட்பருடைய பலி மூலம் கடந்துவரும் முதல் ஆசீர்வாதமானது, இந்தச் சுவிசேஷ யுகத்தில் கேட்கின்ற செவிகளையுடையவர்களுக்கும், ஏற்றுக் கொள்ளத்தக்கதான இருதயமுடையவர்களுக்கும் அருளப்பட்டுள்ளது. இந்த ஆசீர்வாதமானது, மிகவும் பிரமிக்கத்தக்கதாகும். மேலும் இந்த ஆசீர்வாதமானது, பாவத்திலிருந்து திரும்பி விசுவாசம் மூலம் கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையை ஏற்றுக்கொண்டு, முழு அர்ப்பணிப்புடன் தங்களுடைய சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம் என்று வாக்களிக்கும் மனுக்குலத்தின் மத்தியிலுள்ள சிலருக்கு இன்னும் அதிகமான ஆசீர்வாதத்திற்குள் வழி நடத்துகின்றது. இவர்கள் அனைவருக்கும் இந்தச் – சுவிசேஷயுகத்தில் தெரிந்துகொள்ளப்படுபவர்களின் எண்ணிக்கை நிறைவடைவது வரையிலும் இவர்கள் மாம்சத்தில் அவரோடுகூடப்பாடுபட்டு, இப்பொழுது அவரோடுகூட ஆவியின் ஜெநிப்பிக்கப்படுதலிலும், பின்னர் உயிர்த்தெழுதலின் மூலம் ஆவிக்குரிய தளத்தில் ஏற்படும் பிறப்பிலும் பங்கடையத்தக்கதாக, இவர்களுடைய பலிகள் தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்கப்படத்தக்கதாக மீட்பர் தம்முடைய பலியின் புண்ணியத்தை இவர்கள்மேல் தரித்திடுவார். இவ்விதமாக தேவனுக்கும், மனுஷருக்கும் இடையே மத்தியஸ்தராக அவர் தம் ஆயிரவருட இராஜ்யத்தில் காணப்படுகையில், இவர்கள் அவருடைய மகிமையடைந்த “அங்கங்களாக” அவரோடுகூடக் காணப்படுவார்கள். இங்கு மனுஷர் என்று குறிப்பிடப்படும் வார்த்தையானது, ஆவிக்குரிய தளத்தில் பரிசுத்த ஆவியினால், புதிய சிருஷ்டிகளாக ஜெநிப்பிக்கப்படாத அனைவரையும் உள்ளடக்குகின்றது.

நாம் அப்பத்தில் பங்கெடுக்கும் காரியமானது, மனுஷனாகிய இயேசுவின் மாம்சீக பூரணத்திலுள்ள நம்முடைய பங்கெடுத்தலை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. விசுவாசத்தின் வாயிலாகவே நாம் அவருடைய பூரணத்தில் பங்கடைகிறோமே ஒழிய நிஜமாய் அல்ல. அவர் நமக்கு மனித பூரணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை; மாறாக நாம் ஜீவபலியாக ஒப்புக்கொடுப்போம் என்று தேவனுக்கு உடன்படிக்கைப் பண்ணியுள்ள நம்முடைய மாம்சீக சரீரங்களின் பூரணமற்றத் தன்மைகளும், குறைகளும் தெய்வீகப் பார்வைக்கு முன் மூடப்பட்டுக் காணப்படத்தக்கதாக இயேசுவின் நீதியும், அவருடைய பூரணமும் நமக்குத் தரிக்கப்பட்டதாக மாத்திரமே உள்ளது.

மாபெரும் பரிந்து பேசுபவராக, நமக்குக் காணப்படும் நம் மீட்பரானவர், நம்முடைய பலியின் மீது, தமது பலியினுடைய புண்ணியத்தை (தகுதியை) தரிப்பிக்கும்போது, பிதாவானவர் அதை ஏற்றுக்கொண்டு, பலிச்செலுத்தும் அந்த நபரைக் கிறிஸ்துவின் சரீர அங்கத்திற்குரிய புதிய சுபாவத்திற்குள் ஜெநிப்பிக்கின்றார். நாம் உடனடியாக புதிய சுபாவத்தில் பூரணமடையாததாலும், அழியக்கூடிய மாம்சத்திலேயே இன்னமும் காணப்படுவதினாலும், பிதாவானவர் நம்மை தத்தெடுத்ததாக நீதிமானாக்கப்பட்ட நம்முடைய மாம்ச நிலையை, அதன் சகல அம்சங்களுடனும் தத்தெடுத்ததாக ஒரு கோணத்தில் சொல்லலாம்.

யார் இப்படியாக கிறிஸ்துவின் புண்ணியத்தில் பங்கெடுத்துள்ளார்களோ மற்றும் யாருடைய பலி தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோ, அப்படியானவர்கள் மாத்திரமே, அவர்கள் பண்ணியுள்ள பலியின் உடன்படிக்கைக்குப் பொருத்தமாக அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணவும், தினந்தோறும் அவருடைய மரணத்திற்குள்ளாக மூழ்கவும் வேண்டுமெனக் கட்டளைப் பெற்றுள்ளனர்.

புதிய உடன்படிக்கைக்கான என்னுடைய பாத்திரம்

பாத்திரம் நம்முடையதாயிராமல், கர்த்தருடையதாய் இருக்கின்றது. இரத்தத்தினால் அடையாளப்படுத்தப்படும் பலி அல்லது ஜீவன் நம்முடையதாயிராமல், மீட்பருடையதாயிருக்கின்றது. அதைப் பருகுவதும், அதில் பங்கெடுப்பதற்கும் மாத்திரமே நமக்கான சிலாக்கியமாய் இருக்கின்றது. தேவனுக்கும், இஸ்ரயேலுக்கும் இடையிலான மற்றும் இஸ்ரயேலர்கள் வழியாக சகல மனுக்குலத்திற்குமான புதிய உடன்படிக்கையானது, நமக்கு வாய்ப்பு அளிக்கப்படாமலேயே, இயேசுவின் இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டிருக்க முடியும். கிறிஸ்துவின் பாடுகளும், மரணமுமாகிய பாத்திரத்தில் பங்குகொள்வதற்கென நமக்கருளப்பட்டுள்ள சிலாக்கியமானது, கிறிஸ்துவின் மரணமும், பாடுகளும் போதுமானதாய் இல்லையென்றோ அல்லது நம்மால் எதையாகிலும் கூட்டிச்சேர்க்கக்கூடும் என்றோ சுட்டிக்காட்டுவதில்லை. மாறாக அது தேவனுடைய தயவை விவரிக்கின்றது. அதாவது, ஒருவேளை நமக்கும் அவருடைய ஆவி காணப்படுமாயின் நம்மையும் ஏற்றுக்கொண்டு, நமது கர்த்தரும், இரட்சகருமானவருடன் நம்மை உடன்சுதந்தரர்களாக ஆக்க தேவன் சித்தமுள்ளவராக இருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. கிறிஸ்துவைப் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு – சிறிய அம்சங்களைக்கூட விட்டுவிடாமல் நிறைவேற்றுவதற்கு மற்றும் மரணம்வரையிலும் நிறைவேற்றுவதற்கு அவரை இயக்கின வண்ணமாக அவருக்குள் காணப்பட்ட ஆவி, பயபக்தியின் ஆவியாகும். இதே ஆவிதான், இன்று கிறிஸ்துவின் மணவாட்டியினுடைய அங்கங்களாக, அவருடைய சரீரமாக, பரலோக மகிமைக்குரிய அவருடைய சபையாக பிதா ஏற்றுக்கொள்ளும் அனைவரிடமும் காணப்பட வேண்டும். ஆகவேதான் மீட்பர் தம்மோடுகூட, தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அனைவரும் சுயத்தை வெறுத்தல் மற்றும் சுயத்தைப் பலிச்செலுத்துதல் என்னும் தம்முடைய பாத்திரத்தில் பானம்பண்ண வேண்டும் என்றும், தம்முடைய மரணத்திற்குள்ளான ஸ்நானம் பண்ணவேண்டும் என்றும் இவ்விஷயங்களைக்குறித்து திட்டவட்டமாய்த் தெரிவித்துள்ளார்.

இக்காரியங்களைக்குறித்துதான் பரிசுத்தவானாகிய பவுலும் சுட்டிக் காட்டுகின்றார். அதாவது, நமது கர்த்தர்தான் வானத்திலிருந்திறங்கி வந்த மெய்யான அப்பமாக இருக்கின்றார் என்றும், இந்த ஒரே அப்பத்தில் நாம் பாகங்களாக இருப்பதற்கே நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்றும், இந்த ஒரே அப்பம்தான் இறுதியில் ஆயிரவருட யுகத்தின்போது, உலகத்திற்கான ஜீவ அப்பமாகக் காணப்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். நாம் கிறிஸ்துவில் பங்கெடுப்பது மாத்திரமல்லாமல், பிதாவின் திட்டத்தின்படி அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நாம், பெரிய அப்பத்தில், அதாவது திரளான கிறிஸ்துக்களில் நமது கர்த்தரோடுகூட அங்கங்களாகவும் ஆகின்றோம். ஆகவேதான் நாம் ஒன்றுக்கூடி நினைவுகூருதலை அநுசரிக்கும் வண்ணமாக இந்த அப்பத்தைப் பிட்டுக்கொள்வதின் மூலம், நாம் நம்முடைய கர்த்தருடைய பிட்கப்பட்ட சரீரத்தை மாத்திரம் அடையாளம் காட்டாமல், சபையின் பிட்கப்படுதலையும் மற்றும் அந்தச் சபையின் அங்கத்தினர்களென நம்முடைய சொந்த பிட்கப்படுதலையும் அல்லது மரித்துக்கொண்டே இருப்பதையும்கூட அடையாளம் காட்டுகின்றோம். “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 10:16-17).

திராட்சப்பழரசமுடைய பாத்திரமானது, நமது கர்த்தருடைய பலியாக்கப்பட்ட ஜீவனைக் குறிக்கின்றதாயிருக்கின்றது. பாத்திரம் இந்த அர்த்தத்தை மாத்திரம் உடையதாய் இராமல், நாம் அவருடைய சீஷர்களானபோது, அவருடைய பாத்திரத்தில் பங்கடைவதற்கான அவருடைய அழைப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதையும் நமக்கு நினைப்பூட்டுகின்றதாய் இருக்கின்றது. நமக்குப் பாத்திரம் என்பது, நாம் கர்த்தருடைய பிரதிநிதிகளாக மரணம்வரையிலும் சுயத்தைப் பலிச் செலுத்தும் விஷயத்தில் உண்மையாய் இருப்போமென்பதைக் குறிக்கின்றதாயிருக்கின்றது. “(நமக்கு அருளப்பட்டதான கற்பனைப்பண்ணிப் பார்க்கமுடியாத மாதயவுக்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்லி) கடவுளைப்போற்றி திருவிருந்து கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலின் பங்குகொள்ளுதல் அல்லவா!” (1 கொரிந்தியர் 10:16 திருவிவிலியம்). பாத்திரம் நமது கர்த்தருடைய பலியையும், உலகத்தோற்றத்திற்கு முன்னதாகவே இயேசுவோடு நம்மையும் முன்னறிந்திருந்த பிதாவினால், ஏற்பாடு பண்ணிவைக்கப்பட்டிருந்த திட்டத்திற்கு இசைவாகவும், மற்றும் கர்த்தருடைய அழைப்பினிமித்தமாகவும், அவருடைய பலியில் அவரோடுகூட நமக்கு இருக்கும் பங்கையும் அடையாளப்படுத்துகின்றது அல்லவா?

ஓ! இக்கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்பொழுது, இராப்போஜனத்தின் பாத்திரம் எத்துணை ஆழமான அர்த்தமுடையதாயிருக்கின்றது! ஓ! இப்பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் எவ்வளவாய் இருதயம் ஆராயப்பட வேண்டும்! இந்த இராப்போஜனப் பாத்திரம் பாவத்திலிருந்து திரும்புவதை மாத்திரம் அடையாளப்படுத்தாமல், இயேசுவின்மேல் நம்பிக்கை வைப்பதை மாத்திரம் அடையாளப்படுத்தாமல், தப்பான காரியங்களுக்குப்பதிலாக சரியான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை மாத்திரம் அடையாளப்படுத்தாமல், பிரதானமாக விசுவாசிகளின் சரீரங்கள் தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கப்படுவதையே குறிக்கின்றதாய் இருக்கின்றது; இந்தப் பலிகள் இயேசுவினுடைய புண்ணியம் தரிபிக்கப்படுவதினால், பரிசுத்தமுள்ளவைகள் என்று கருதப்படுகின்றன; மேலும் தேவன் இவ்விதமாய் பலிச்செலுத்துபவர்களைப் புதிய சிருஷ்டிகளாக, புதிய சுபாவத்திற்குள் ஜெநிப்பித்து, இவர்களுடைய இந்தப் பலிகளை ஏற்றுக்கொள்கின்றார்! (ரோமர் 12:1)

யாரொருவர் இவைகளின் அர்த்தம் அனைத்தையும் அறிந்திருந்தபோதிலும், பயபக்தி இல்லாமலும், சர்வ சாதாரணமாகவும், இந்த அடையாளமான மாம்சத்திலும், அடையாளமான இரத்தத்திலும் பங்குகொள்கின்றாரோ அவர் தன் மீதே ஆக்கினையை வருவித்துக் கொள்கின்றார் என்று அப்போஸ்தலர் சுட்டிக்காட்டியிருக்கும் விஷயத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த இரத்தம் பார்க்கப்படும் கண்ணோட்டம் குறித்துதான் அப்போஸ்தலர், எபிரெயர் 10:29- ஆம் வசனத்தில் பேசியுள்ளார். தங்களைப் பரிசுத்தம்பண்ணின இரத்தத்தை சாதாரணமாய் எண்ணும் சிலரைக்குறித்து – இந்தச் சுவிசேஷ யுகத்தில் நமக்கு இந்தப் பரம அழைப்பைக் கொடுத்திட்டதான கிருபையின் ஆவியை அசட்டைப்பண்ணும் சிலரைக்குறித்து அப்போஸ்தலன் பேசுகின்றார். இப்படிப்பட்டவர்களுக்குத் தேவன் இரண்டாம் மரணத்தை ஏற்பாடு பண்ணியுள்ளார் என்று அப்போஸ்தலர் தெரிவிக்கின்றார். தேவனிடம் உண்மையான அர்ப்பணிப்புப் பண்ணாமலும், தங்களுக்கு அருளப்பட்டுள்ள உண்மையான தேவனுடைய கிருபையையும், உண்மையான சிலாக்கியத்தையும், ஒருபோதும் புரிந்துகொள்ளாமலும், சபையில் அங்கங்களாகக் காணப்படுபவர்கள், இரண்டாம் மரணத்திற்குப் பாத்திரமாயிருப்பார்கள் என அப்போஸ்தலர் இவ்வசனத்தில் குறிப்பிடுவதாக நாம் எண்ணிவிடக் கூடாது. மாறாக, இவ்வசனத்தில் அப்போஸ்தலர் சுட்டிக்காட்டுபவர்கள், ஒருகாலத்தில் இயேசுவின் மாம்சம் மற்றும் இரத்தம்குறித்த விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்களாக இருந்தார்கள்; இவர்கள் ஒருமுறை பிரகாசிக்கப்பட்டவர்கள்; இவர்கள் தேவனிடத்திற்குக் கிட்டிச்சேருவதற்கென்று விலையேறப்பெற்ற இரத்தத்தின் மீதான விசுவாசம் காரணமாக நீதிமான்களாக்கப் பட்டதோடல்லாமல், இந்த விசுவாசம் மூலமான நீதிமானாக்கப்படுதலின் காரணமாக இவர்கள் பரிசுத்தமுமாக்கப்படுதல் நிலைக்குக் கடந்துபோய், தங்கள் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தவர்களுமாய் இருந்தார்கள். தங்களை அர்ப்பணம் [R4592 : page 116] பண்ணுகையில், “கிறிஸ்துவின் பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்கு” ஒப்புக்கொண்டபோது, தங்களைப் பரிசுத்த ஆவியின் மூலம் ஜெநிப்பித்து, தங்களைப் பரிசுத்தம்பண்ணின (நாம் நினைவுகூரும் பாத்திரத்தை) உடன்படிக்கையின் இரத்தத்தைப் பிற்காலங்களில் சாதாரணமாய் எண்ணினவர்களைக் குறித்தே இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே…

சுவிசேஷத்தின் தற்கால அழைப்பினுடைய நோக்கத்திற்கு இசைவாகவும், தேவனுடைய சித்தமாகவும், விருப்பமாகவும் காணப்படும் நம்முடைய பரிசுத்தமாக்கப்படும் காரியமானது, நாம் அழைக்கப்பட்டபோது, நடைப்பெறுவதில்லை. நாம் பாவத்திலிருந்து திரும்பும்போதும், [R4592 : page 117] நடைபெறுவதில்லை. தேவனுடைய சத்தத்திற்கு நாம் செவிசாய்க்க ஆரம்பிக்கும்போதும், நடைபெறுவதில்லை. மாறாக, இவ்விதமான ஆசீர்வாதங்கள் மற்றும் தேவனுடைய இரக்கத்தின், தாக்கத்தின் காரணமாக நாம் முழுமையான அர்ப்பணிப்பின் நிலைக்கு வரும்பொழுது, அதாவது முழுமையான சீஷத்துவத்தின் நிலைக்கும், முழுமையான சரணடையும் நிலைக்கும் வரும்போதும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், தெய்வீகச் சுபாவம் மற்றும் நம்முடைய கர்த்தரோடுகூட அவருடைய இராஜ்யத்தில் உடன்சுதந்தரர்கள் நிலையை அடைவதற்குமென நம்முடைய சகல பூமிக்குரிய உரிமைகள் மற்றும் சிலாக்கியங்களை முழுமையாய் பலிச்செலுத்தும் நிலைக்கும் வரும்போதே நடைபெறுகின்றது. “இப்படிப்பட்டதான கிருபைகளை யாராவது அசட்டைப்பண்ணுவார்களா? என்று கேள்விகள் எழலாம். கர்த்தரோடுகூட உடன் பலி செலுத்துபவர்களாகிய சிலாக்கியத்தை யாராவது உதறித்தள்ளுவார்களோ? என்று கேள்விகள் கேட்கப்படலாம். பாத்திரம் மற்றும் மரணத்திற்குள்ளான ஞானஸ்நானம் தொடர்பான விஷயத்தில், இதனால் உண்டாகும் பலனில் பங்கடைவதற்கான சிலாக்கியத்தை அறிந்தும், யாராவது, “பாத்திரத்தையும்” “மரணத்திற்குள்ளான ஞானஸ்நானத்தைப்” புறக்கணிப்பார்களா? என்றும் கேள்விகள் கேட்கப்படலாம். ஜெநிப்பிக்கப்பட்ட ஆவியை இன்னமும் தக்கவைத்துக் கொள்கிறவர்களும், மகிமை, கனம் மற்றும் அழியாமையாகிய பார்க்க முடியாதவைகளை இன்னும் விசுவாசத்தினால் உணர்ந்துகொண்டிருப்பவர்களுமாய்க் காணப்படும் எவரும் புறக்கணிக்கவோ, சாதாரணமாக எண்ணவோ, ஏற்க மறுக்கவோ மாட்டார்கள் என்பதே நம்முடைய பதிலாகும். ஒருவேளை ஒருவர் பரம ஈவை ருசிப்பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் மற்றும் வரவிருக்கிற யுகத்திற்குரிய சிலாக்கியங்களிலும், வல்லமைகளிலும் பங்கடைந்தும் மறுதலித்து பின்வாங்கி போவாரானால், அப்படிப்பட்டவர்களை மீண்டும் புதுப்பிப்பது கூடாத காரியமாகும்.

நம்மால் இருதயங்களை வாசிக்கமுடியாது. யாரெல்லாம் முதலாம் திரைக்கு அப்பால் பார்த்துள்ளார்கள் மற்றும் யாரெல்லாம் பார்க்கவில்லை என்பது திட்டவட்டமாய் நமக்குத் தெரியாது. யாரெல்லாம், “மரணத்துக்கு ஏதுவான பாவம்” செய்துள்ளார்கள் மற்றும் யாரெல்லாம் செய்யவில்லை என்பது நமக்குத் திட்டவட்டமாய் தெரியாது. நாம் ஒருவரையொருவர் நியாயந்தீர்க்கக்கூடாது. ஒருவருக்கொருவர் ஜீவியத்தின் போக்கில் வெளிப்படுத்துபவைகளை நாம் ஏற்றுக்கொண்டிட வேண்டும். ஒருவேளை, ஒருவர் தன்னைப் பரிசுத்தம் பண்ணின உடன்படிக்கையின் இரத்தத்தை மறுப்பாரானால், ஒருவேளை இந்த நினைவுகூருதலின் பாத்திரத்தில் கிறிஸ்துவோடு பங்குகொள்ளும் காரியத்தை ஒருவர், தான் அவருடைய மாபெரும் பலியில் பங்குகொள்வதாக எண்ணாமல், ஏதோ சாதாரணமாய்க் காணப்படும் ஒன்றில்தான் பங்குகொண்டதாக எண்ணுவாரானால், அந்நபர் கிறிஸ்துவின் பாத்திரத்தில் பங்காளியாக இருப்பதின் மதிப்பைப் புரிந்துகொள்ளும் அவரது ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலையும், அவரது ஆவிக்குரிய பார்வையையும் இழந்துபோய்விட்டார் என்று வெளியாகுகின்றது. புதிய உடன்படிக்கையானது, இன்னும் கொஞ்சம் காலத்தில் இஸ்ரயேலர்களுக்காகவும், இஸ்ரயேலர்கள் வாயிலாக தெய்வீக நிபந்தனைகளுக்கு இசைவாய் வரவிருக்கும் பூமியின் சகல குடிகளுக்கும் முத்திரையிடப்படும்.

தங்களால் ஆவிக்குரிய காரியங்களைப் பார்க்கமுடிகின்றது என்று அறிக்கைப்பண்ணுகிற சிலர், மரணம்வரையிலான முழுமையான அர்ப்பணிப்புப் பண்ணியுள்ளோம் என்று அறிக்கைப்பண்ணுகிற சிலர், ஒரே அப்பத்தில் பிட்டுப் பங்குகொள்வதிலும், கிறிஸ்துவுக்குள்ளான மரணத்தில் ஐக்கியமாகிய ஒரே பாத்திரத்தில் பானம்பண்ணுவதிலும் உள்ள அர்த்தத்தை தங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது என்று அறிக்கைப்பண்ணுகிற சிலர், இவைகள் அனைத்தையும் ஒருபோதும் உண்மையாய்ப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாக்குறுதிகளினால் நம்மை வஞ்சித்ததோடல்லாமல், தங்களையும் வஞ்சித்துப் போட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத்தேயு 7:16); “அவர்களின் செயல்களைக்கொண்டே அவர்கள் யார் என்று அறிந்துகொள்வீர்கள்” திருவிவிலியம்) என்ற கர்த்தரின் வார்த்தைகளை நாம் நினைவில்கொள்ள வேண்டும். தங்களைப் பரிசுத்தம்பண்ணப்பட்டவர்கள் என்றும், பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கத்தினர்களாகிய அர்ப்பணம்பண்ணப்பட்ட பலிச் செலுத்துபவர்கள் என்றும் கூறி, பாடுகள் மற்றும் சுயத்தை வெறுத்தல் எனும் அவருடைய பாத்திரத்தில் பங்கெடுத்துக்கொண்டு, பரிசுத்தத்தின் ஆவியை/ சிந்தையை வெளிப்படுத்தி, ஆவியின் கனிகள் மற்றும் வரங்களின் வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள், ஆவியில் ஜெநிப்பிக்கப் பட்டவர்கள் என்று நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால், ஒருவேளை இவர்கள் பிற்பாடு உடன்படிக்கையின் இரத்தத்தை மறுப்பவர்களாகவும், கிறிஸ்துவின் பாத்திரத்தில் பங்குகொள்ளும் சிலாக்கியத்தை ஏதோ சாதாரணமான ஒரு காரியம் என்றும், இச்சிலாக்கியம் கிறிஸ்துவின் அங்கங்களுக்கு மாத்திரமே உரியதல்ல என்றும் எண்ணுபவர்களாகவும், ஆவியின் கனிகளைப் பின்னர் வெளிப்படுத்தாதவர்களாகவும், எதிராளியானவனுடைய ஆவியின் கனிகளை வெளிப்படுத்துகிறவர்களாகவும் இருப்பார்களேயானால், இவர்கள் வெளிச்சத்தையும், ஆவியையும் இழந்துவிட்டார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்டவர்கள் வெளியரங்கமாக வன்முறை, களவு, கொலை முதலியவைகளைச் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. இவர்களிடம் கோபம், பகைமை, துர்க்குணம், பொறாமை, சண்டைச் சச்சரவின் ஆவி வெளிப்பட்டால், இதுவே இவர்கள் கிறிஸ்துவின் ஆவியை இழந்துவிட்டார்கள் என்பதற்கான சான்றுகள் ஆகும். கோபம், பகைமை, துர்க்குணம், பொறாமை, சண்டைச் சச்சரவின் ஆவி ஆகியவைகளைப் பரிசுத்த.பவுல் அடிகளார் மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகள் என்று குறிப்பிடுகின்றார்.

கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள பரிசுத்தமாக்கப்பட்ட அங்கமாகிய ஒருவர், சில சந்தர்ப்பங்களில் பெலவீனத்தால் மேற்கொள்ளப்பட்டு, கோபமடைவது உண்மைதான். ஆனால், அவர் அதற்கென்று துர்க்குணமும், பகைமையையும் தனக்குள் வைத்திருக்கவே மாட்டார். இன்னுமாக, ஒருவேளை அவர் பெலவீனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் உடனடியாக தனது பெலவீனத்தை உணர்ந்து, மன்னிப்பிற்காக பரலோக கிருபையின் சிங்காசனத்திற்குப் போவதோடல்லாமல், தன்னுடைய செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட, காயப்பட்ட நபரிடத்திலும் சென்று குற்றத்தை மனவருத்தத்தோடு ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்கவும் செய்வார். ஆனால், தன்னுடைய ஆவியானது துர்க்குணத்தின் ஆவியாக மாற பெற்றிருப்பவன், தான் தேவனுடைய ஆவியை ஏற்கெனவே இழந்துவிட்டான் என்றும், தான் இரண்டுதரம் மரித்துவிட்டான் என்றும், வேரோடே பிடுங்கப்பட்டு விட்டான் என்றும் காட்டுகின்றான். இப்படிப்பட்டவர்கள் திராட்சச்செடியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிராமல், முள்களின் குடும்பத்தையே சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரம்

நாம் நினைவுகூருதலை அநுசரிக்கும்போது, நம்முடைய இருதயங்கள் இயேசுவினுடைய பாடுகளை மாத்திரம் தியானித்தால் போதாது, இன்னுமாக, பலியின் மரணத்திற்கு நேராக அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கும் அவருடைய சரீரத்தின் அங்கங்களுடைய பாடுகளை மாத்திரம் தியானித்தாலும் போதாது. மாறாக, இந்தப் பாத்திரத்தில் நாம் பங்குகொள்வதின் மூலம், நாம் சரியான மகிழ்ச்சியின் ஆவியையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இயேசு, ஆவியில் களிகூர்ந்தார் என்று நாம் வாசிக்கின்றோம். இன்னுமாக, பாத்திரத்தில் பானம்பண்ணும் நம் அனைவரையும், அப்போஸ்தலர், “கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்; மீண்டும் சொல்லுகின்றேன், சந்தோஷமாயிருங்கள்” என்று வலியுறுத்துகின்றார். கிறிஸ்தவனுடைய ஜீவியம் என்பது, துக்கமானதுமல்ல, மகிழ்ச்சியற்றதுமல்ல, மாறாக மிகுந்த சந்தோஷகரமானதாகும். “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும, உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து” – “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” என்று அறிந்து – கிறிஸ்தவனால், உபத்திரவங்களிலும் சந்தோஷமாயிருக்க முடியும். (ரோமர் 5:3-4; 2 கொரிந்தியர் 4:17) இப்படியாக, நாம் பாடுகள் மற்றும் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாகிய (மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவதற்கான அடையாளமாகிய) பாடுகள் மற்றும் மகிழ்ச்சியின் பாத்திரத்தில் நாம் பானம் பண்ணுகின்றோம்; இந்தச் சந்தோஷத்தை நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையின்பொழுது, அவருடைய அங்கங்களாக அவருடைய மணவாட்டி வகுப்பாராக நாம் அவரிடத்தில் கூட்டிச் சேர்க்கப்படும்பொழுது பெற்றுக்கொள்வோம். கர்த்தருக்கு ஊழியஞ்செய்யும் விஷயத்தில் நாம் வைராக்கியத்துடனும், தைரியத்துடனும் இருப்பதற்கு ஆவியில் இந்த மகிழ்ச்சி என்பது அவசியமாய் உள்ளது. பரிசுத்தவானாகிய பவுல், சீலாவுடன்கூடச் சிறைச்சாலையில் கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்ட நிலையிலும், முதுகுக் காயங்களினால் காணப்பட்ட நிலையிலும், இந்த மகிழ்ச்சியின் ஆவி அவர்களுக்குள் கிரியைசெய்து, அவர்களைத் தேவனைத் துதித்துப்பாடச் செய்ததைக் கவனியுங்கள். இது இடுக்கமான வழியில் பிரயாணம்பண்ணும் கிறிஸ்துவின் உண்மையான அனைத்துப் பின்னடியார்களுக்கும் பொருந்தக்கூடியதாய் உள்ளது. ஒவ்வொரு முள்ளினாலும் உண்டாகும் காயங்கள் மத்தியிலும், கிறிஸ்துவினிமித்தம் கொடிதான வார்த்தைகளெனும் கூர்மையான ஒவ்வொரு அம்புகள் நம்மைத் தாக்கி உண்டுபண்ணும் வலியின் மத்தியிலும், சொல்லிமுடியாத சந்தோஷம் நமக்குக் காணப்படும்.

புதிய உடன்படிக்கையின் சந்தோஷம்

நாம் பங்கடைவதற்கென நமது கர்த்தர் வாய்ப்பு அருளின புதிய உடன்படிக்கைக்கான இரத்தத்தினுடைய அர்த்தத்தை, முக்கியத்துவத்தை நாம் படிப்படியாக, அதிகமதிகமாக, முழுமையாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கையில், இன்னும் அதிகமான சந்தோஷம் நமக்குரியதாய் இருக்கின்றது. அவர் தமது புண்ணியத்தை நமக்குத் தரிப்பித்து, நம்மையும் அவரோடுகூட மரிக்கும்படிக்குச் செய்கின்றார். இவ்விதமாக, புதிய உடன்படிக்கைக்கான இரத்தத்தை அவருடைய அங்கங்களாகிய நம் மூலமாக சென்றடையச் செய்கின்றார். ஆனால், இது கிறிஸ்துவுடன் தங்களை மரிக்க ஒப்புக்கொடுக்கின்றோம் என்று வாக்களிக்கிறவர்களுக்கு மாத்திரமே அருளப்படுகின்றது; என்றாலும்கூட, அது நமக்கு (உரியதாய்) அளிக்கப்படவில்லை, மாறாக நம்முடைய பலிகளை நமக்குப் பரிந்துபேசுபவராகக் காணப்படும் நம்முடைய மாபெரும் பிரதான ஆசாரியன், பிதாவின் நாமத்தினால் ஏற்றுக்கொண்டு, பிதாவின் நாமத்திற்கு ஒப்புக்கொடுத்து, புத்திரசுவிகாரத்தின் ஆவியை நமக்கு அருளத்தக்கதாக, நம்முடைய பலிகளைப் பாத்திரமானவைகள் ஆக்கத்தக்கதாக அவருடைய புண்ணியம் நமக்குத் தரிப்பிக்க மாத்திரமே பட்டுள்ளது அல்லது கடனாய் மாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

நமது கர்த்தர் இயேசுவுக்கு மாத்திரமே உரியதான இந்தப் பூமிக்குரிய உரிமைகள், அவருடைய விருப்பத்தின்படியே, புதிய உடன்படிக்கையின் வாயிலாக, மாம்சீக இஸ்ரயேலர்களிடம் சென்றுசேரும். (எரேமியா 31:31). “அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்” (ரோமர் 11:31). மாம்சீக இஸ்ரயேலர்கள்மீது வரப்போகும் ஆசீர்வாதத்தினிமித்தமும் மற்றும் அந்த ஆசீர்வாதங்களில் முழு மனுக்குலமும் கூடப் பங்கடைவதற்கான வாய்ப்பினை அடையப்போவதினிமித்தமும் நாம் மகிழ்ச்சிக் கொள்கின்றோம். சுவிசேஷ யுகத்தினுடைய ஆரம்பத்தில் மாம்சீக இஸ்ரயேலர்களுடைய தள்ளிவிடுதல், நாம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான ஆயத்தமாய் இருக்குமானால், நாம் ஏற்றுக்கொள்ளப்படும் காரியமானது, அவர்களுக்கு நித்திய இழப்பாய் இராமல், அவர்கள் புதிய உடன்படிக்கைக்கு முழுமையாய்த் தகுதி யாக்கப்பட்ட ஊழியர்களின் மற்றும் மாபெரும் மத்தியஸ்தரின் மற்றும் மாபெரும் பிரதான ஆசாரியரின் அங்கங்களாகிய ஆவிக்குரிய இஸ்ரயேலர்களின் ஆசீர்வாதத்தின் வாயிலாக, நன்மை பெற்றுக்கொள்வார்கள் என்பதில் நாம் எத்துணை மகிழ்ச்சியடைகின்றோம் (2 கொரிந்தியர் 3:6). இவ்விதமாக, மாம்சீக இஸ்ரயேலர்களுக்கே எனத் தேவனால் வைக்கப்பட்டிருந்த பூமிக்குரிய ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும் இறுதியில் மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு அளிக்கப்படும். இவைகள் அனைத்தும் நியாயப்பிரமாண [R4592 : page 118] உடன்படிக்கையினாலும், அதன் நிழலான மத்தியஸ்தராகிய மோசேயினாலும் நிழலாய்க் காட்டப்பட்டது. இந்த மோசே தேவனுடைய கிறிஸ்துவுக்கும், மாபெரும் மத்தியஸ்தருக்கும் நிழலாய் இருக்கின்றார். இந்த மாபெரும் மத்தியஸ்தரின் தலையாக இயேசுவும், அங்கங்களாக அவருடைய உண்மையுள்ள பின்னடியார்களாகிய ஜெயங்கொண்ட பரிசுத்தவான்களும் இருக்கின்றார்கள்.

ஆகவே, வருடங்கள் செல்ல செல்ல, மனித புத்திக்கு எட்டாத அளவுக்கு நீளமும், ஆழமும், அகலமும், உயரமும் கொண்டுள்ள எல்லா அன்புக்கும்மேலான தெய்வீக அன்பில் வெளிப்படும் இந்த மகிமையான நினைவுகூருதலை உணர்ந்துகொள்வோமாக.

பண்டிகையை ஆசரிப்போமாக

இவ்விஷயங்களையெல்லாம் உணர்ந்துகொண்டிருக்கும் கர்த்தருடைய ஜனங்கள், “யூதர்களைப்போன்று நிழலை நினைவுகூராமல், பரிசுத்த பவுல் ‘நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்’ என்று கூறியுள்ளதைப் போன்று, “என்னை நினைவுகூரும்படிக்கு இதைச் செய்யுங்கள்” என்ற போதகரின் அழைப்புக்குச் செவிசாய்த்து, அவருடைய நாமத்தில், அவருடைய அங்கங்களாக ஒன்றுகூடிடுவதற்கு நாம் வலியுறுத்துகின்றோம். இதுவரையிலும் மகிமையில்லாததாய்க் காணப்படும் தமது சரீரத்தைக் கர்த்தர் தமது வருகையின்போது, தமது மகிமையான சரீரமாய் உண்மையில் மாற்றும்வரையிலும் இதை அநுசரிக்க வேண்டும்.

அருமையான சகோதர சகோதரிகள் சிறு கூட்டங்களாகக் கூடமுடியும் பட்சத்தில் கூடவேண்டும் என்றும், இப்படிக் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்னும் பட்சத்தில் கர்த்தரோடுகூட தனிமையில் இதை அநுசரிக்க வேண்டும் என்றும் நாம் ஆலோசனை வழங்குகின்றோம். இப்படியாக, அநுசரிக்கும்போது, பெருந்திரளாய்க் கூடி அநுசரிப்பதற்கு நாம் பரிந்துரைக்காமல், ஒவ்வொரு சிறுசிறு கூட்டத்தாரும் கிறிஸ்துவின் சரீரமெனத் தனி கூடுகையாகக்கூடி அநுசரிக்க நாம் பரிந்துரைக்கின்றோம். “ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்” (மத்தேயு 18:20).

புரூக்கிலின் டேபர்நாக்கிளினுடைய (Brooklyn Tabernacle) சபையார் புரூக்கிளினுள்ள பின்வரும் முகவரியில் கூடிக்கொள்வார்கள்: எண்: 13-17, Hicks Street, Brooklyn. இதற்கு முந்தின ஞாயிற்றுக்கிழமையன்று ஞானஸ்நான ஆராதனை நடைப்பெறும். இதில் பங்கெடுக்க விரும்புகின்றவர்கள் அனைவரும், கூடுமானமட்டும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும். இந்த ஞானஸ்நான ஆராதனையில், அருகாமையிலுள்ள நண்பர்கள் (சகோதர சகோதரிகள்) கலந்துகொள்ளலாம். ஆனால் நினைவுகூருதல் ஆராதனையில் பங்குகொள்வதற்கான அழைப்பு எதுவும் தொலைவில் இருக்கும் நண்பர்களுக்குக் (சகோதர சகோதரிகளுக்குக்) கொடுக்கப்படுவதில்லை. ஆனால் தங்கள் குடும்பங்களில் சாதகமான வாய்ப்புகளைப் பெற்றிராத தனி நபர்கள்/சகோதர சகோதரிகள், எவ்விடத்திலுமுள்ள சபையாராலும் வரவேற்கப் படுகின்றனர்.