R4707 (page 348)
மத்தேயு 26:36-46
“இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகின்றார்.” மத்தேயு 26:45
யூதர்களெனப் போதகரும், அவரது சீஷர்களும் பஸ்கா இராப்போஜனத்தை ஆசரித்தப் பிற்பாடு, அடுத்து தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதலை அப்பம் மற்றும் திராட்சரசம் கொண்டு நிறுவின பிற்பாடு, தம்மைக் காட்டிக்கொடுப்பதற்கென யூதாஸ் வெளியேறின பிற்பாடு, இயேசுவும், மீதம் இருந்த பதினொரு பேரும் எருசலேமிலுள்ள மேல் வீட்டறையினின்று வெளியேறி, பட்டணத்தை வாயில் வழியாய்த் தாண்டி, கெதரோன் ஆற்றைத் தாண்டி, ஒலிவ மலையினுடைய சாய்வான பகுதிகளில் ஏறி கெத்செமனே தோட்டத்திற்குப் போனார்கள். கெத்செமனே என்ற வார்த்தையின் அர்த்தமானது எண்ணெய் செக்காகும். இந்தத் தோட்டமானது, அப்போஸ்தலனாகிய யாக்கோபு மற்றும் யோவானுடைய உறவினர்களுக்குச் சொந்தமானது என்று பாரம்பரியமானது தெரிவிக்கின்றது. சுவிசேஷகர்களில் ஒருவரும், அப்போஸ்தலர் அல்லாதவருமான பரிசுத்த மாற்கு அவர்கள், அதே குடும்பத்தினுடைய அங்கத்தினன் என்றும் சொல்லப்படுகின்றது. போதகர் கைது செய்யப்பட்டதைப் பதிவு செய்யும் பதிவுகள் ஒன்றில், போதகரைப் பின்தொடர்ந்து போனவர்கள் மத்தியில், துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்திக்கொண்டு, வாலிபன் ஒருவனும் போனான் என்றும், சேவகர்கள் வாலிபனைப் பிடிக்க முயன்றபோது, அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் ஓடிப்போய்விட்டான் என்றும் நமக்குக் கூறப்பட்டுள்ளது. இந்த வாலிபன், பல வருடங்களுக்குப் பிற்பாடு பரிசுத்த மாற்கு என்று அறியப்பட்டிருந்தார் என்று பாரம்பரியமானது தெரிவிக்கின்றது.
இது போதகருடைய அனுபவங்களிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க இரவாகும். அவர் பஸ்காவினுடைய ஒவ்வொரு அம்சத்தின் அர்த்தத்தையும் நன்கு அறிந்திருந்தார். தாம்தான் நிஜமான தேவ ஆட்டுக்குட்டி என்றும், தம்முடைய மரணமானது அடுத்த நாளில் சிலுவையில் அறையப்படுவதின் மூலம் நிறைவேறும் என்றும் அவர் அறிந்திருந்தார். எனினும் அவரது எண்ணங்களானது, அவரது அருமை சீஷர்கள் பற்றியதாகவே இருந்தது. அவர் அவர்களுக்கு இறுதியான அறிவுரைகள் மற்றும் உற்சாகத்தின் வார்த்தைகளைக் கொடுக்க வேண்டும். அவர் இதைச் செய்தார். மேல் வீட்டறையை விட்டுச் சென்றதற்கும், எண்ணெய் செக்காகிய கெத்செமனேயை வந்தடைவதற்கும் இடையில் நடைப்பெற்றவைகளானது பரிசுத்த யோவான் எழுதிய சுவிசேஷத்தின், மூன்று அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்” (யோவான் 18:2). பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷத்தினுடைய 14-ஆம் அதிகாரத்தில், போதகர் சீஷர்களிடத்தில், தாம் போய் அவர்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போகின்றார் என்றும், அவர்களுக்குத் தேற்றரவாளனாய் இருக்கும்படிக்குச் சத்திய ஆவியை அனுப்புவார் என்றும், சத்திய ஆவியானது, வரும் காரியங்களை அவர்களுக்கு அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார். 15-ஆம் அதிகாரத்தில் அவர் அவர்களுக்குத் திராட்சச் செடி மற்றும் கொடிகள் குறித்த உவமையைக் கூறினார் மற்றும் அவர்கள் இனி ஊழியக்காரர்களாய் இராமல், நண்பர்களாய் இருக்கின்றனர் என்றும் அவர்களுக்கு உறுதியளித்தார்; “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவான் 15:15). 16-ஆம் அதிகாரத்தில், அவர்கள் தம்முடைய பாடுகளில் பங்கடைந்து, அவரது மகிமையில் பங்கடைவதற்கு ஆயத்தமாக வேண்டுமெனில், அவர்கள் உபத்திரவங்களை எதிர்ப்பார்த்திட வேண்டுமென்று அவர்களுக்கு விவரித்தார்.
“கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக் காலத்திலே என்னைக் காண்பீர்கள்” என்றார். தெய்வீகக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில் அவர் [R4707 : page 349] இல்லாமல் இருக்கும் காலப்பகுதியானது, நித்தியக்காலத்துடன் ஒப்பிடுகையில், கொஞ்சக் காலமாகவே உள்ளது. பின்னர் உயிர்த்தெழுதலினுடைய “மறுரூபத்தின்” காரணமாக, அவர்கள் அவரைக் காணமுடியும், ஏனெனில் அவர்களும் அவரைப்போன்று காணப்படுவார்கள். “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவான் 16:33). 17-ஆம் அதிகாரத்தில் தம்முடைய அப்போஸ்தலர்களுக்காக மாத்திரமல்லாமல், இவர்களுடைய வார்த்தைகளின் வாயிலாக தம்மேல் விசுவாசம் வைக்கின்ற யாவருக்காகவும் தம் பின்னடியார்கள் சார்பில் பிதாவிடம் ஏறெடுக்கப்பட்டதான அவரது அருமையான ஜெபம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படியாக அவர்கள் சம்பாஷித்துக்கொண்டு, தோட்டத்திற்கு (அ) ஒலிவ தோட்டத்திற்கு வந்து சேர்ந்தார்கள்; இங்கு ஒலிவ பழங்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படும் ஆலை காணப்பட்டது. வாயிற் பகுதியில் சீஷர்களில் எட்டுப்பேர் காவல்காக்கும்படிக்கு விடப்பட்டனர்; இயேசுவும், அவரால் விசேஷமாய் அன்புகூரப்பட்டதான பேதுருவும், யாக்கோபும், யோவானும் சற்று உள்ளே, தொலைவாகப்போனார்கள். பின்னர் தம்முடைய அன்பார்ந்த நண்பர்களால் கூடத் தம்முடைய துக்கமானச் சூழ்நிலையை உணர்ந்துகொள்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தவராக, இன்னும் தொலைவாக, பிதாவோடு பேசும்படிக்குத் தனிமையில்போனார். அவரது வாயினின்று பேசப்பட்டவைகளைக் குறித்துக் குழப்பமடைந்து, அதிர்ச்சியடைந்துக் காணப்பட்ட சீஷர்கள், உண்மை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவரது வார்த்தைகள் மறைப்பொருட்களாகவே இருக்குமென்று அவர்கள் எண்ணினார்கள் என்பதில் உறுதியே. அவரோடுகூட விழித்திருக்க அவர்களுக்கு விருப்பம்தான், ஆனாலும் அவர்கள் களைப்படைந் திருந்தபடியால், உறங்கிப்போனார்கள். அவர்களது ஆவி உற்சாகமுள்ளதாய்தான் இருந்தது, ஆனால் மாம்சமோ பெலவீனமாய் இருந்தது.
ஏன் இப்படி ஜெபத்தில், தனிமையில் காணப்படுவதற்குப் போதகர் அடிக்கடி விரும்பிட்டார் என்று சிலர் கேட்கலாம் மற்றும் இதற்கான பதில் என்னவெனில், “நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை” என்பதேயாகும் (ஏசாயா 63:3). அவரது சீஷர்களும், பின்னடியார்களும் அவரை மிகவும் அன்புகூர்ந்தார்கள். ஆனாலும் அவர் தனியாகத்தான் காணப்பட்டார்; ஏனெனில் அவர் மாத்திரமே பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவராய் இருந்தார். அவரது பலி நிறைவேறுவது வரையிலும், அவர்களுக்கு தம்முடைய புண்ணியத்தினைத் தரிப்பிக்கத்தக்கதாகவும், அவர்கள் பின்வரும் மகிமைகளில் பங்கடையத்தக்கதாக, தற்காலத்தின் பாடுகளில், அவரோடுகூடப் பலிச்செலுத்தும்படிக்குப் பங்கடைவதற்கு அவர்களை அனுமதிக்கத்தக்கதாகவும், அவர் தேவன் முன்னிலையில் தோன்றுவது வரையிலும், அவர்களது பின்னடியார்களால் தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக உணரமுடியாது, ஆவியினால் ஜெநிப்பிக்கவும் படமுடியாது.
இந்த நமது கர்த்தருடைய அனுபவத்தைக் குறித்துப் பரிசுத்த பவுல் அவர்கள், “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்” (எபிரெயர் 5:7) என்று தெரிவிக்கின்றார். அவர் ஏன் பயப்பட்டார்? மனுஷர்கள் அனைவரும் மரணத்தைச் சந்திக்கவில்லையா? மனுஷர்களில் சிலர் மிகுந்த தைரியத்துடனும், சிலர் மனத்துணிவுடனும் சந்தித்திருக்கின்றார்கள் அல்லவா? ஆ! மரணம் குறித்த விஷயத்தில், நம்முடைய கண்ணோட்டத்திற்கும், போதகருடைய கண்ணோட்டத்திற்கும் வெகு வித்தியாசம் உள்ளது. நாம் மரிப்பதற்காகவே பிறக்கின்றோம். நமக்குப் பரிபூரண ஜீவன் என்றாலே என்னவென்று தெரியாது. மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு வழியே இல்லை என்று நாம் எப்போதுமே அறிந்தவர்களாய் இருக்கின்றோம். ஆனால் அவர் விஷயத்தில் மிகவும் வித்தியாசமாகும். உலகத்திற்கு வருவதற்கு முன்னதாக, ஆவிக்குரிய தளத்திலான அவரது அனுபவங்கள் அனைத்தும் ஜீவன், பூரண ஜீவன் தொடர்புடையதாகவே காணப்பட்டது. “அவருக்குள் இருந்த ஜீவனானது” மாசற்றது, ஏனெனில் அவர் பரிசுத்தராகவும், மாசில்லாதவராகவும், குற்றமற்றவராகவும், பாவிகளுக்கு விலகினவராகவும் காணப்பட்டார்; அவரது ஜீவன் ஆதாமிடமிருந்து வந்ததல்ல.
தெய்வீக எதிர்ப்பார்ப்புகளுக்கு இசைவாக தாம் பூரணமாய் ஜீவித்தால், தம்முடைய பரிபூரணத்தில் ஜீவனுக்கான உரிமையை, தாம் பெற்றிருப்பார் என்பதை அவர் அறிவார். இன்னுமாக “பலியினாலான உடன்படிக்கை” என்று தேவனிடத்தில் பண்ணிக்கொண்டதான விசேஷித்த உடன்படிக்கையின் காரணமாக, தம்முடைய பூமிக்குரிய உரிமைகளைக் கையளித்து விடுவதற்குத் தாம் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதையும், தம்முடைய ஜீவன் தம்மிடமிருந்து எடுக்கப்படுவதற்கு அனுமதிக்கத்தக்கதாக தாம் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதையும் அவர் அறிந்திருந்தார். பிதாவும் அவருக்கு மரணத்திலிருந்துள்ள உயிர்த்தெழுதலின் வாயிலாக மகிமை, கனம் மற்றும் அழியாமை எனும் மகா பலனை வாக்களித்துள்ளார்; ஆனால் இது அனைத்து விஷயங்களிலுமுள்ள, அதாவது வார்த்தையிலும், சிந்தையிலும், கிரியையிலுமுள்ள அவரது முற்றும் முழுமையான கீழ்ப்படிதலைச் சார்ந்துள்ளது. அவர் அனைத்து விஷயங்களிலும் தேவனுக்கு உண்மையாய் இருந்துள்ளாரா? என்பதுதான் கேள்வி. இல்லையெனில் மரணமானது, அவருக்கு நித்திய மரணத்தைக் குறிக்கின்றதாகிவிடும்; அவருக்குப் பலனாக வாக்களிக்கப்பட்டுள்ளதான பரலோக மகிமையை இழந்துபோவது மாத்திரமல்லாமல், அனைத்தையுமே இழந்துபோவதாக இருந்துவிடும். அவர் இதைப் புரிந்துகொள்ளவில்லை என்று நாம் எண்ண முடியுமா? அந்த வேளை மிகவும் இருளானதாய்க் காணப்பட்டது மற்றும் அவர் “என்னுடைய ஆத்துமா மரணத்திற் கேதுவான துக்கம் கொண்டிருக்கின்றது” என்று கூறினார். அவர் தாம் மரிக்கப் போகின்றார் என்பதை அறிந்திருந்தார். மரணம் அவசியமானது என்றும் அவர் அறிந்திருந்தார். ஆனால் அடுத்த நாளில் தேவதூஷணம் புரிந்திட்டவரென, குற்றவாளியென, தெய்வீகப் பிரமாணத்தை மீறினவரென அவமானமாய் மரணத்தண்டனை நிறைவேற்றப்படப்போகின்றதான காரியமானது அவரை பயமுறுத்திக்கொண்டிருந்தது. ஏதேனும் விஷயத்தில், கொஞ்சமேனும் தாம், பிதாவுக்குரிய கனத்தைத் தமக்கென்று எடுத்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா? ஏதேனும் அளவில், மனதிலாகிலும், பிதாவின் சித்தத்திற்கு முழுமையாய்க் கீழ்ப்படியாமல் இருந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா? இப்படிச் சிலுவையில் அறையப்படுதல் என்பது, தாம் தெய்வீகத் தயவை இழந்துவிட்டதைக் குறிப்பதாக ஒருவேளை உண்மையில் இருந்துவிடுமோ? தாம் இவ்விதமாய் மரிப்பது அவசியமா? இந்த அவமானத்தின் பாத்திரம் நீங்குவதற்கு வாய்ப்புள்ளதா? என்ற கேள்விகள் அவரை பயமுறுத்திக்கொண்டிருந்தது. ஆகையால் அவர் மிகுந்த வியாகுலத்துடனே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையில் விழுந்தது என்ற வார்த்தைகள் பழைமைமிக்க கிரேக்க மூலப்பிரதிகளில் இடம்பெறவில்லை என்றாலும், மன வியாகுலத்தின்போது, அழுத்தத்தின்போது, இப்படியாக வருவதற்கு வாய்ப்புள்ளது என்றே மருத்துவ துறையானது [R4708 : page 349] தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. அவரது ஜெபத்தினுடைய இறுதி வார்த்தைகளாகிய, “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்பதிலுள்ள அருமையான எளிமையினை நாம் கவனிக்கின்றோம்.
கடுமையானச் சூழ்நிலை மத்தியிலும்கூட விசுவாசமும், நம்பிக்கையும் எத்துணை அருமையாயும், குழந்தைகள் வைப்பதுபோன்றும் காணப்படுகின்றது! அவருக்கு உண்டான பயத்தின் நிமித்தம் கேட்கப்பட்டார் என்று பரிசுத்த பவுல் கூறுகின்றார். எப்படி? தேவனுடைய வார்த்தையானது, தேவதூதனுடைய கரங்களின் வாயிலாக வந்தது. ஒரு தூதன் தோன்றி, அவருக்கு ஊழியம் புரிந்திட்டார் – அதாவது அவரது தேவைக்காக ஊழியம் புரிந்திட்டார். “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” (எபிரெயர் 1:14). போதகர் துயரத்திலும், தாழ்மையிலும் காணப்படுகையில் எந்த வார்த்தைகளினால் இந்தப் பரம ஊழியமானது செய்யப்பட்டது என்பது குறித்து நமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அது பரம பிதாவினுடைய தயவு, அனுதாபம் மற்றும் அன்பு குறித்த முழு வாக்குறுதி நிரம்பின வார்த்தைகளாகவே இருந்திருக்கும் என்பதை நாம் அறிவோம். அவருக்கு உண்டான பயத்தின் நிமித்தம் கேட்கப்பட்டார். அவர் பிதாவுக்கு நன்கு பிரியமாய் இருக்கின்றார் என்றும், அவர் தமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவராக இருந்திருக்கின்றார் என்றும், வாக்களிக்கப்பட்டதான உயிர்த்தெழுதலை அவர் பெற்றுக்கொள்வார் என்றுமுள்ள நிச்சயத்தினை அவர் பெற்றுக்கொண்டார்.
அத்தருணம் முதல் போதகர், அந்த இரவு மற்றும் அடுத்த நாள் வந்த மாபெரும் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிலுமே அமைதலுள்ளவராய்க் காணப்பட்டார். அதிகாரிகள், வேலைக்காரர்கள், ஆலோசனை சங்கத்தினர், ஆசாரியர்கள், ஏரோது, இவரது சேவகர்கள், பிலாத்து மற்றும் இவரது சேவகர்கள், மக்கள் கூட்டம் – அனைவரும் மன அமைதல் இல்லாமலும், கிலேசத்துடனும் காணப்பட்டார்கள். இயேசு மாத்திரமே அமைதியுடன் காணப்பட்டார். இதற்குக் காரணம், அனைத்துமே அவருக்கும், பிதாவுக்கும் இடையில் நன்றாய் உள்ளது என்ற பிதாவின் வாக்குறுதியேயாகும். இந்தப் பாக்கியமான வாக்குறுதியானது, போதகருக்குத் தைரியத்தைக் கொடுத்ததுபோன்று, இன்றுவரையிலுமாக அவரது பின்னடியார்கள் கூட, “தேவன் நம் பட்சத்தில் இருந்தால், நமக்கு எதிராய் நிற்பவன் யார்? என்றும், எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானமானது, எங்களுடைய இருதயங்களை ஆளுகின்றது என்றால், நமக்கு எதிராய் நிற்பவன் யார்?” என்றும் உணர்ந்துகொள்ள முடிகின்றது.
ஏமாற்றுகின்ற கதாப்பாத்திரங்கள் அநேகர் உலகத்தில் காணப்படுகின்றனர். அநேக விஷயங்களில் நாம் அனைவருமே தவறுகின்றோம். சுயநலம், பெருமை, பிடிவாதம் (கீழ்த்தரம்)/குறுகிய மனம் முதலானவைகள் மிகவும் துயரமளிக்கும் விதத்தில் மனித குடும்பத்தில் காணப்படுகின்றது. ஆனால் இவைகள் அனைத்திலுமேயே, ஒருவன் நன்றிகெட்டவனாய், தனது அருமை நண்பனைக் காட்டிக்கொடுக்கும் அளவுக்குச் செய்கிறதைப் பார்க்கிலும் மிகவும் கண்டனத்திற் குரியதாய் ஏதேனும் காணப்படுகின்றதா?
யூதாஸ் போன்ற பாத்திரங்கள் குறித்ததான அபிப்பிராயத்தில், உலகம் எதிராகவே காணப்படுகின்றது. யூதாஸ் பெயர் பெற்ற உதாரணம் என்றாலும், இவர் ஒருவரே உதாரணம் என்றில்லை; அநேகர் இப்படியாகக் காணப்பட்டிருந்திருக்கின்றனர். இப்படியானவர்களில் சிலர் இன்றும் ஜீவித்துக்கொண்டிருக்கின்றனர். யார் ஒருவர் இத்தகைய ஒரு பண்பின் குறுகிய தன்மையை/கீழ்த்தரத்தை நன்கு உணர்ந்துகொள்கின்றாரோ, ஒருவேளை இவரின் மற்ற பண்புகள் எவ்வளவுத்தான் கீழ்த்தரமாய் இருப்பினும், இக்குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்துவதிலிருந்து இவர் தப்பித்துக்கொள்வார். தனது எஜமானை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்கமுடிந்த மனுஷன், யாவராலும் வெறுக்கவேபடுவான். நன்றிகெட்டுப் போவதற்கு, முப்பது வெள்ளிக்காசுகள் மாத்திரமே தூண்டிடவில்லை; பெருமையும் காரணமாகும். யூதாஸ் போதகரோடுகூடப் பூமிக்குரிய சிங்காசனத்தில் காணப்பட வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தான்; இந்த எதிர்ப்பார்ப்பில் அவன் நம்பிக்கையாய்க் காணப்பட்டான். இப்பொழுதோ அதே போதகர் சிங்காசனம் இப்பொழுது வருவதில்லை என்றும், இந்த யுகத்தினைத் தொடர்ந்துவரும் யுகத்திலேயே வரும் என்றும், மரணம் வரையிலும் உண்மையுடனும், நேர்மையுடனும் காணப்படுபவர்களுக்கே அது அருளப்படும் என்றும் தெளிவாய், முழுமையாய் விளக்கினார். இக்காரியமானது ஞானமான மற்றும் சிறந்த வழியல்ல என்று யூதாசின் மனம் எண்ணினது. மாபெரும் போதகரை வெறுத்தவனாக, வஞ்சிக்கப்பட்டவனாகிய யூதாஸ், தற்காலிகமாக போதகர் கையளிக்கப்பட வேண்டுமென்றும் இது போதகர் இப்படியாய்ப் பேசக்கூடாது மற்றும் இப்படிக் – காலத்தைத் தாழ்த்திக் கொண்டிருக்கக்கூடாது என்று அவருக்குப் போதிக்கும் வண்ணமாக காணப்படும் என்றும் – இது போதகருக்குத் தூண்டுதலாக காணப்பட்டு, அவரது ஜீவனை நாடினவர்களை எதிர்க்கும் வண்ணமாய், அவர் தம் வல்லமையைச் செயல்படுத்தத்தக்கதாக அவரை வலுக்கட்டாயத்திற்குள்ளாக்கி மற்றும் இப்படியாய் அவரை உயர்த்திக்கொள்வதன் மூலமாக, அவர் சீஷர்களுக்கு வாக்களித்த வண்ணமாக அவர்களை இராஜ்யத்தில் பங்கடையச் செய்வதன் மூலம், அவர்களுக்கு நன்மைச் செய்ய வைப்பதற்கு ஏதுவாய்க் காணப்படும் என்றும் [அ] இல்லையேல் இவைகளைப் போதகர் செய்யத்தவறினால், முழுத் திட்டத்தையும் சிதைத்துப் போடுவதற்கு ஏதுவாய்க் காணப்படும் என்றும் எண்ணினான். அந்தோ பரிதாபம்! பேராசையினால் வெறியூட்டப்படுகின்ற சிலர், பணத்தின் மீதான ஆசையினாலும், அதிகாரத்தின் மீதான ஆசையினாலும் பெருமிதம் அடைந்து, மன தடுமாற்றம் அடைந்துவிடுகின்றனர். “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (மத்தேயு 23:12) மற்றும் “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேதுரு 5:6) என்கிற செய்தியினைக் கர்த்தருடைய பின்னடியார்கள் நினைவுகூர்வது எத்துணை அவசியமாயுள்ளது.