R4384 (page 132)
சமீபத்தில் நாம் பஸ்காவை ஆசரித்ததான காரியமானது, முதலாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதியன்றுள்ள பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய பலியானது, ஏழாம் மாதத்தினுடைய 10-ஆம் தேதியன்றுள்ள பாவநிவாரண நாளின் பலியினுடைய அதே கருத்தைத்தான் அடையாளப்படுத்துகின்றதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இல்லை என்றே நாம் பதிலளிக்கின்றோம். இந்த இரண்டு நிழல்களும் வருஷத்தினுடைய எதிர்முனைகளில் காணப்படுகின்றது; ஒன்று மதச்சார்புடைய ஆண்டின் துவக்கத்திலும், மற்றொன்று மதச்சார்பற்ற ஆண்டின் துவக்கத்திலும் இடம்பெறுகின்றதாய் இருக்கின்றது. மதச்சார்ப்பற்ற ஆண்டானது இலையுதிர் காலத்திலும், மதச்சார்புடைய ஆண்டானது இளவேனிற் காலத்திலும் [R4384 : page 133] துவங்குகின்ற தாய்க் காணப்படுகின்றது. மதச்சார்புடைய ஆண்டின் துவக்கத்தின்போதான பஸ்கா பலியானது, சபை சார்பிலான நமது கர்த்தருடைய பலியை மாத்திரம் குறிப்பாய் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது மற்றும் மதச்சார்ப்பற்ற ஆண்டின் துவக்கத்தின்போதான பாவநிவாரண நாளினுடைய பலியானது, கிறிஸ்துவினுடைய பலியையும், “இராஜரிக ஆசாரியக்கூட்டத்தாராகிய” சபையின் பலியையும் மற்றும் “ஜனங்கள் அனைவருக்காகவும்” நிறைவேற்றப்பட்டதான பரந்த விரிந்த வேலையையும் சித்தரித்துக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.
பஸ்கா ஆட்டுக்குட்டியானது, தலையாகிய இயேசுவையும், அவரது சரீரமாகிய சபையையும் அடையாளப்படுத்துகிறதில்லை. அது குறிப்பாக “தேவ ஆட்டுக் குட்டியாகிய,” நமது கர்த்தர் இயேசுவை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்று நமது கர்த்தரைக் குறித்துத் தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. பஸ்கா ஆட்டுக்குட்டியின் விஷயத்திலும், இப்படியாகவே கட்டளையிடப்பட்டிருந்தது. அது முழுமையாகச் சுடப்பட வேண்டும் மற்றும் புசிக்கையில், அதன் எலும்புகள் முறிக்கப்படக்கூடாது. இன்னுமாக பஸ்கா ஆட்டுக்குட்டியும், அதன் இரத்தமும், முதற்பேறானவர்களாகிய சபைக்கு மாத்திரம் அடையாளமாய்க் காணப்படுகின்ற முதற்பேறானவர்களுக்கு மாத்திரம் “கடந்துபோகுதலை,” காப்பாற்றப்படுதலைச் சாத்தியமாக்கிற்று. மற்றவர்களுடைய விடுதலை, பஸ்காவினுடைய நிழலில் இடம்பெறுவதில்லை.
பாவநிவாரண நாள் பலியில், தெளிவான வித்தியாசம் உள்ளது. இரண்டு பலிகள் ஏறெடுக்கப்படுகின்றது – ஒன்று பிரதான ஆசாரியனுடைய சரீரத்திற்காகவும், மற்றும் அவரது குடும்பத்தாருக்காகவும் ஏறெடுக்கப்படுகின்றது, மற்றுமொரு பலியானது “ஜனங்கள் அனைவருக்காகவும் ஏறெடுக்கப்படுகின்றது. முதலாவது பலியானது (29 வருடங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டதான ஆசரிப்புக்கூடார நிழல்களில்) நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிற வண்ணம் சபைக்காகவும், “முழு விசுவாச வீட்டாருக்காகவுமான” நமது கர்த்தருடைய மரணத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. பாவநிவாரண நாளின் இரண்டாவது பலியானது, “ஜனங்கள் அனைவருடைய பாவங்களுக்காக,” கர்த்தருடைய ஆட்டினுடைய நிஜமாகிய சபையினுடைய மரணத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இரண்டையும் ஒரே பிரதான ஆசாரியன்தான் ஏறெடுத்தார் மற்றும் இவர் நமது கர்த்தர் இயேசுவுக்கும், இயேசு தம்மையே முதலாவது பலிச்செலுத்திடும் காரியத்திற்கும், பின்னர் அவரது அங்கத்தினர்கள் என்று ஏற்றுக்கொண்டிடும் நம்மை இரண்டாவதாகப் பலிச் செலுத்துகின்ற காரியத்திற்கும் நிழலாய்க் காணப்படுகின்றார்.
ஆசாரியர்களுக்கான பிரதிஷ்டையில், காளை மாத்திரமே பாவநிவாரணமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது (ஆடு இடம்பெறுவதில்லை, ஏனெனில் இது “ஜனங்களுக்காக” இல்லை). பின்னர் சர்வாங்க தகனபலி காண்பிக்கப்பட்டது மற்றும் இது கர்த்தரையும், சபையையும் அவர்களது ஒன்றுபட்ட மற்றும் அதேசமயம் பிரிக்கப்பட்ட நிலையையும், உறவையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஆட்டுக்கடா ஒன்று அடிக்கப்பட்டு, சந்துகளாக துண்டாக்கப்பட்டு, கழுவப்படுகின்றது; பின்னர் அதன் துண்டுகளானது, கர்த்தருடைய பலிபீடத்தில் தலையுடன் தொடர்புடையதாக, வரிசையாக வைக்கப்படுகின்றது; மற்றும் இது முழுவதும் தகனபலியாகச் செலுத்தப்படுகின்றது. இது சபையாகிய சரீரத்தினுடைய அங்கத்தினர்களுக்கு, சரீரத்தின் தலையாகிய கர்த்தரோடுள்ள உறவை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. (யாத்திராகமம் 29:10-18)
பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரித்தல் – SUB HEADING
பாவநிவாரண நாள் பலியினுடைய, பாவநிவாரணபலியின் விஷயத்தில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும்; இதுவும் பஸ்காவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட காரியமாகும்; அதாவது பாளயத்திற்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும் காரியமாகும். காளை முதலாவதாகச் [R4385 : page 133] சுட்டெரிக்கப்படுகின்றது, மற்றும் இரண்டாவதாக வெள்ளாட்டுக்கடா சுட்டெரிக்கப்படுகின்றது. (லேவியராகமம் 16:27; யாத்திராகமம் 29:14) சுட்டெரித்தலானது, படிப்படியான மாம்சத்தினுடைய அழிவை அடையாளப்படுத்துகின்றதாய் இருந்தது. பாளயத்திற்குப் புறம்பே என்பது மனிதனால் புறக்கணிக்கப்படுவதை, அவமதிப்பை, விலக்கிவைத்தலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. நமது கர்த்தர் இப்படியாகவே பாளயத்துக்குப் புறம்பே பாடுபட்டார் என்றும், நாமும் அவரோடுகூட, அவரது சரீரத்தின் அங்கத்தினர்களெனப் பாடுபட வேண்டுமென்ற முழு நோக்கத்துடன், அதே மனப்பான்மையுடன் காணப்படுவோமாக என்றும் அப்போஸ்தலன் கூறுகின்றார். இவ்வுண்மையைப் பரிசுத்த பவுல் வலியுறுத்தும் வண்ணமாக, “எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பலிக்காக) பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச்சுமந்து, (கர்த்தருடைய ஆடுகளெனப்) பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்” என்று கூறுகின்றார். (எபிரெயர் 13:11-13)
பாருங்கள் இங்கு அப்போஸ்தலன் நிழலான பலிகளைச் சுட்டிக்காட்டி, அவைகளைக் கிறிஸ்து மற்றும் சபையினுடைய விசேஷித்த பலிகளுடன் ஒப்பிடுகின்றார்; மற்றும் கிறிஸ்துவின் பலியில் பங்கெடுக்கவும் – நமது கர்த்தரினால் அனுபவிக்கப்பட்டது போன்று பாளயத்துக்குப் புறம்பான அனுபவங்கள் வாயிலாகக் கடந்துசெல்லும் கர்த்தருடைய வெள்ளாட்டுக்கடா வகுப்பாரில், நம்மை அங்கத்தினர்களாக்கிக்கொள்ளவும் அப்போஸ்தலன் நமக்குப் புத்திமதி கூறுகின்றார்; காளை கர்த்தருக்கும், வெள்ளாட்டுக்கடா நமக்கும் நிழலாய்க் காணப்படுகின்றது.
ஒருகாலத்தில் நம்மோடுகூடக் காணப்பட்டு, ஆனால் இப்பொழுது நம்மைவிட்டுப் பிரிந்துபோனவர்களில் சிலர், தங்கள் ஆதிக்கத்தினை எவர்கள்மேல் செலுத்த முடிகின்றதோ, அவர்களுடைய விசுவாசத்தை அசைத்துப்போடுவதற்குத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர். இவர்கள் வருடக்கணக்காக எங்களோடு காணப்பட்டு, (இந்த நிழலினுடைய நிறைவேறுதல் மற்றும், சபை அவளுடைய ஆண்டவரோடுகூடத் தற்காலத்தில், இந்தப் பாடுகளில் ஐக்கியம் கொண்டிருத்தல் தொடர்புடைய விஷயத்தில்) ஒருமித்தக் கருத்துக்கொண்டிருப்பதாகக் கூறினபோதிலும், இப்பொழுது இவர்கள் இவ்விஷயங்களில் எல்லாம் குருடாகிப்போனவர்களாகவும், முடிந்தமட்டும் அதிகமான நபர்களைக் குருடாக்கிப் போடுவதற்கும், குழப்பிடுவதற்கும் ஆவலாய்க் காணப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். நாம் இங்கு மேலே முன்வைத்துள்ளவைகளை, நம்மால் முடிந்தமட்டும் கடந்த 29 வருடங்களாக முன்வைத்து வருகின்றோம் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட சபையானது, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களெனப் பாடுபடுவதற்குச் சிலாக்கியம் அடைந்துள்ளது என்றும், எதிர்க்காலத்தில் அவர் தலையாகக்காணப்படும் ஒரே சரீரத்தின் அங்கத்தினர்களென, அவரோடுகூட மகிமையடையவும் சிலாக்கியமடைந்துள்ளது என்றுமுள்ள இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய இரகசியத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.
இந்த விஷயம் தொடர்பாகவும், மற்ற எந்த விஷயம் தொடர்பாகவும் நாம் எழுதியுள்ளவைகளானது, நமது கர்த்தர் இயேசு நமக்கான பலியாக, தம்முடைய சொந்த இரத்தத்தைக் கொடுத்துள்ளார் என்றும், நமக்கான பலியை, அவர் கல்வாரியில், சிலுவையின் மீதினில், தம்முடைய சொந்த சரீரத்தில் நிறைவேற்றினார் என்றுமுள்ள கருத்துக்களை மறுக்கிறதாய்க் காணப்படுவதில்லை. அப்போஸ்தலனுடைய வார்த்தையின்படி, அவர் ஆவிக்குரிய சரீரத்திற்கு, ஆவிக்குரிய தலையென உயர்த்தப்படுவதற்கான வேளைவந்தது. அவர் மாம்சத்திலிருந்தபோது, அந்த ஆவிக்குரிய தலையாகக் காணப்படவில்லை. அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின்னரே, அவர் சபையாகிய தம்முடைய சரீரத்திற்குத் தலையானார். சபையானது, தங்கள் அழிவுக்குரிய சரீரங்களைப் பலியில் அர்ப்பணித்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட புதுச் சிருஷ்டிகளாக மாத்திரமே, அவரது அங்கத்தினர்களானார்கள். நம்மைப் புதுச் சிருஷ்டிகளென ஏற்றுக்கொள்கையில், பிரதான ஆசாரியன் நமது அர்ப்பணிக்கப்பட்ட சித்தங்களை ஏற்றுக்கொள்கின்றார் மற்றும் இதை நாம் நிறைவேற்றிடுவது தொடர்புடையதாக நம்மைப் பரீட்சிக்கின்றார் மற்றும் நம்முடைய பலியின் இரத்தத்தினை அவருடையதெனக் கருதுகின்றார், ஏனெனில் அவருடைய இரத்தமே நம்முடையதை நீதிமானாக்கி, பலிச்செய்திடுவதற்கு ஏதுவாக்கிற்று.
தங்களைப் போஷிக்கத்தக்கதாக, தேவன் கொடுத்துள்ளதான இந்தச் சத்தியங்களை ஆராய்வதில் தங்கள் நேரத்தை ஞானமாய்ப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கான அநுகூலத்தினை நாம் உணர்ந்துகொள்கின்றோம். வேத ஆராய்ச்சியில் உண்மையாய்க் காணப்பட்டு, மற்றும் அதற்கேற்ப ஜீவிப்பவர்கள், இப்பொழுது பலவான்களாய்க் காணப்படுகின்றனர். மற்றவர்களோ இப்பொழுது பெலவீனர்களாகிப்போய், ஒவ்வொரு உபதேசக் காற்றினால் இழுத்துச் செல்லப்படுவதற்கு ஏதுவாய்க் காணப்படுகின்றனர். கூடுகைகள் மூலமாகவும், குறிப்பாக வாசிப்பதன் மூலமாகவும் அடையப்பெறும் ஆவிக்குரிய போஷாக்கின் அவசியத்தினை நாம் வலியுறுத்துகின்றோம். எவ்வளவுதான் கேட்டாலும், அது வாசிக்கிறதற்கு ஈடாகாது. இன்னுமாக ஆறு தொகுதிகளை/volumes வாசிப்பதற்கு நாம் அறிவுரைக் கூறுகின்றோம். கொஞ்சம் காலத்திற்கு முன்னதாக, ஒரு தாயாரும், அவரது மகளும், தாங்கள் ஒரு நாளுக்குப் பன்னிரண்டு பக்கங்கள் வைத்துப்படித்தால், ஆறு தொகுதிகளையுமே ஒரு வருடத்தில் வாசித்துவிடலாம் என்று கண்டுபிடித்ததாக வாட்ச் டவருக்குக் கடிதம் எழுதினதின் மூலமான யோசனையை இன்று அநேகர் பின்பற்றி வருகின்றார்கள் என்று நாங்கள் மீண்டுமாக நினைப்பூட்டுகின்றோம். இந்தத் தாயாரும், மகளும் இம்முறையை ஒரு வருடம் பின்பற்றி, அடுத்தும் இதையே பின்பற்றி இருந்திருக்கின்றனர். இந்த யோசனையானது, அநேகரால் கைக்கொள்ளப்பட்டு, நல்ல பலன்கள் கிடைத்துள்ளது மற்றும் அதையே நாமும் அனைவருக்கும் பரிந்துரைக்கின்றோம். நம்முடைய மனங்களானது ஓட்டையான பாத்திரங்களாகக் காணப்படுகின்றது மற்றும் பலமுறைகள் தொகுதிகளை வாசித்தவர்கள், தாங்கள் முன்பு வாசித்தப்போது வெளிப்படாதவைகள், பின்பு வாசிக்கையில் வெளிப்படுவதாகவும் கண்டிருக்கின்றனர்.