R4756 (page 40)
மீண்டுமாக நமது அருமை மீட்பர் சிலுவையில் அறையப்பட்டதற்கான ஆண்டு நிறைவு நாளினை நாம் நெருங்கிக்கொண்டிருக்கின்றோம்; மீண்டுமாகக் கடந்துவந்த வருடங்களானது நமக்குக் கற்பித்துத் தந்துள்ளதான படிப்பினையை நம்முடைய வாசகர்களுக்கு நாம் நினைப்பூட்டுகின்றோம்; அதென்னவெனில் சில விவரிக்கப்படாத காரணங்களின் நிமித்தமாக, இந்த ஒரு குறிப்பிட்டக் காலப்பகுதியில் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் விசேஷித்த சோதனைகளையும், பரீட்சைகளையும் சந்திக்கின்றவர்களாய்க் காணப்படுகின்றனர் – நமது கர்த்தருடைய துயரமான மற்றும் பாரமான வேளைக்கும், ஆரம்பக்கால சீஷர்கள் மத்தியிலான விசேஷித்த சோதனைகள் காணப்பட்ட வேளைக்கும் ஒத்தவைகளைச் சந்திக்கின்றவர்களாய்க் காணப்படுகின்றனர். தாம் சிலுவையில் அறையப்படப்போவதை முன்னறிந்தவராக, எருசலேமுக்குப் போவதற்குக் கொஞ்சம் முன்னதாக, அவர் இது குறித்து அப்போஸ்தலர்களுக்கு விளக்கினார். அப்போதுதான் தம்முடைய மாம்சத்தைப் புசித்து, தம்முடைய இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவர்கள் மாத்திரமே தங்களுக்குள் ஜீவனைப் பெற்றிருப்பார்கள் என்று அவர் கூறினார். அவருக்கு நெருக்கமான பின்னடியார்களாய்க் காணப்பட்டவர்களில் அநேகர், “இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்” என்றும், “அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்” என்றும் பார்க்கின்றோம். (யோவான் 6:60,66)
தாம் சீக்கிரத்தில் சிலுவையில் அறையப்படப்போவதைக் குறித்துப் பன்னிரண்டு பேரிடமும் சொன்ன பிற்பாடு, “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” என்று பரிசுத்த பேதுரு கூறி, கடிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொண்டார். இயேசுவோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்றார் (மத்தேயு 16:22,23). “உன்னுடைய ஆலோசனைகளும், கருத்துக்களும் தெய்வீகத் திட்டத்திற்குப் புறம்பானவைகளாகக் காணப்படுகின்றன; மனுஷகுமாரன் தமது மகிமைக்குள் பிரவேசித்து, சபை மற்றும் உலகத்திற்கு இரட்சகரெனத் தமக்கு நியமிக்கப்பட்டுள்ள வேலையினை நிறைவேற்றத்தக்கதாகப் பலியாகும் விதத்தில் பாடுபட வேண்டியது அவசியமாய் உள்ளது” என்ற விதத்தில் இயேசு கூறினார்.
பின்னர் இறுதிக்கட்டத்தில் யூதாஸ் மீது வந்திட்டதான விசேஷித்த சோதனையையும், பணத்தின் மீதான இவரது மோகமானது, எப்படிப் போதகரின் அடக்கத்திற்கு ஏதுவான அபிஷேகித்தலை எதிர்ப்பதற்கு வழிநடத்தினது என்றும், பின்னர் 30 வெள்ளிக்காசுகளுக்கென்று போதகரை விற்றுப்போடுவதற்கு வழிநடத்தினது என்றும், பின்னர் முத்தத்தினால் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வழிநடத்தினது என்றும், நாம் நினைவுகூருகின்றோம். பின்னர் தங்கள் போதகர் கைதுசெய்யப்பட்டதினாலும், அவர் தாம் கைது செய்யப்படுவதற்கு விரும்பினார் என்பதினாலும் எப்படிச் சீஷர்கள் அனைவரும் குழப்பத்திற்குள்ளானார்கள் என்றும், “எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்” என்றும் நாம் நினைவுகூருகின்றோம். (மாற்கு 14:50) பின்னர் எப்படிப் பெருந்தன்மையுள்ள பரிசுத்த பேதுரு கடுமையான தவறினால் மேற்கொள்ளப்பட்டவராகி, தனது ஆண்டவரும் போதகருமானவரைச் சபித்து மறுதலித்தார் என்றும் நாம் நினைவுகூருகின்றோம்.
அநேகமாக இச்சோதனைக்கான இணையானது, கர்த்தருடைய ஜனங்கள்மீது வருஷத்தினுடைய இந்தக் காலப்பகுதியில் வருமென நாம் கொஞ்சம் கற்பனைப்பண்ணுகின்றோம். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் இந்தக்குறிப்பிட்டக் காலப்பகுதியில் விசுவாசத்திற்கான, கீழ்ப்படிதலுக்கான, நேர்மைக்கான/உண்மைக்கான விசேஷித்த சோதனைகளை, விசேஷித்த பிரச்சனைகளை, பரீட்சைகளைப் பெற்றிருப்பது ஏற்றதாகவும் மற்றும் உண்மையாகவும் காணப்படுகின்றது.
லெந்து (அ) உபவாச காலங்கள் – SUB HEADING
மேற்கூறப்பட்டக் கருத்துப்பற்றின எண்ணங்களானது நீண்டகாலத்திற்கு முன்னதாகவே மற்றவர்களுக்குத் தோன்றி, கர்த்தருடைய குடும்பத்திலுள்ள அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மத்தியில் விசேஷித்த உபவாசம் மற்றும் ஜெபத்திற்குமான காலங்களாகிய லெந்து நாட்களை நியமிப்பதற்கு வழிநடத்தியுள்ளது. இந்த உபவாசமானது பல நூற்றாண்டுகள் காலமாய் ரோமன் சபையிலும், ஆங்கில சபையிலும், கிரேக்க சபையிலும் மற்றும் சில சபைகளிலும் ஆசரிக்கப்பட்டு வந்துள்ளது என்பது உறுதியே.
பெரும்பான்மையானவர்களின் விஷயத்தில் உபவாசமானது, வெறும் சம்பிரதாயமாகவும், வெளித்தோற்றமான ஆசரிப்பாகவும், இருதய உணர்வு இல்லாமலும் காணப்படுகின்றது மற்றும் இது கர்த்தருக்குப் பிரியமாயும் காணப்படாது என்றாலும், முற்காலங்களிலும், இப்பொழுதும் சிலர் சிறந்த நோக்கங்களுடனும் உபவாசம் இருந்துள்ளனர் மற்றும் இருக்கின்றனர் என்று நாம் நம்புகின்றோம். எவரையும் நியாயந்தீர்ப்பதோ, தனிப்பட்ட விதத்தில் குற்றப்படுத்துவதோ நமக்கடுத்தக் காரியமல்ல; எனினும் நாம் கூறியிருப்பதை அநேகர் ஒப்புக்கொள்வார்கள் என்பதில் நமக்கு நிச்சயமே. இருதயத்தை ஆளுவதற்கு ஏதுவான எந்தச் சட்டங்களையோ (அ) விதிகளையோ ஏற்படுத்திடுவது கூடாத காரியமாகும் – எந்தச் சட்டத்தினாலும்/விதியினாலும் மாம்சத்தைத் தற்செயலாகக்கூட ஆண்டிட முடியாது.
இம்மாதிரியான விஷயங்களில், இவைகளுக்கு விதிகளையும், சட்டங்களையும் ஏற்படுத்துவதை நாம் அங்கீகரிப்பதில்லை. உணவு தொடர்புடைய விஷயத்தில் மிதமாய் இருக்க வேண்டுமென இருதயப்பூர்வமாய் விரும்புகின்ற அனைவருக்கும், யோசனைகள் கொடுக்கப்படுவது போதுமானதாய் இருக்கும். போதகர் கடந்துபோன பிற்பாடு, தம்முடைய பின்னடியார்கள் உபவாசமிருக்க வேண்டுமென்ற போதகருடைய ஆலோசனையை நாம் பெற்றிருக்கின்றோம். இப்படியான உபவாசமிருக்கப்பட்டதான பல தருணங்களானது வேதவாக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் இவைகள் கர்த்தருடைய பின்னடியார்களுக்கான சிறந்த/ஏற்ற மாதிரிகளாகக் கருதப்படலாம்; இந்தக் கர்த்தருடைய பின்னடியார்கள் உணவுகள் (அ) பானங்கள் (அ) மற்றப் பூமிக்குரிய சடங்குகள் விஷயத்தில் நியாயப்பிரமாணத்தின் கீழோ, கட்டளையின் கீழோ காணப்படுகிறவர்கள் அல்ல.
உபவாசத்தில் கொஞ்சம் சுயகட்டுப்பாட்டுடன் காணப்படுவது என்பது, நமக்கு சரீர விஷயத்திலும், ஆவிக்குரிய விஷயத்திலும், அதிலும் குறிப்பாக வருஷத்தினுடைய வசந்த/இளவேனிற் காலத்தில் பயன்கொடுக்கின்றதாய் இருக்கும். குளிர்க்காலத்தினுடைய குளிரான பருவநிலைக்கு அவசியமாய்க் காணப்படும் பலமான ஆகாரங்களானது, கடுமையற்ற பருவநிலையின்போது அவசியமாய் இராது. அதிகப்படியாய் உணவு உட்கொள்ளப்படுவதே, பெரும்பான்மையான இளவேனிற் கால சுகவீனங்களுக்கான காரணமாய் ஐயத்திற்கிடமின்றி காணப்படுகின்றது மற்றும் இந்தச் சுகவீனங்களானது, கொஞ்சம் உபவாசம் இருக்கும்போது – சுவையான மற்றும் பலமான உணவுகளை உட்கொள்ளுதல் கொஞ்சம் கட்டுப்படுத்தப்படும்போது சுகமாகிவிடுகின்றது. அதிகப்படியான போஷாக்கின் நிமித்தமாகச் செரிமானம் தடைப்பண்ணப்படும்போது, மூளையானது மிகவும் மந்தமாகிப்போய், உயர் மனதின் ஆற்றல்களை வலுவிழக்கச்செய்துவிடுகின்றது மற்றும் குறிப்பாக பரம மற்றும் ஆவிக்குரிய காரியங்கள் தொடர்புடையதான உயர் மனதின் ஆற்றல்களை வலுவிழக்கச் செய்துவிடுகின்றது.
இந்த யோசனைகளை, நாம் எவர்மேலும் நுகத்தினை (அ) நியாயப்பிரமாணத் தினைச் சுமத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இல்லாமல், மாறாக ஒவ்வொருவனும் தனது சொந்த மனசாட்சிக்கேற்ப உபவாசம் இருந்து, ஜெபம் பண்ணிடுவதற்கும் மற்றும் இந்த விஷயத்திலும், ஒவ்வொரு விஷயத்திலும் கர்த்தருடனான தனது உறவினுடைய அளவிற்கேற்ப ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்குமான நமது விருப்பத்தில்தான் முன்வைத்திடுகின்றோம்.
நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி – SUB HEADING
அநேக அருமையான கிறிஸ்தவ ஜனங்கள் நினைவுகூருதல் இராப்போஜனமானது வாரந்தோறும், மாதந்தோறும், மாதத்திற்கு இரண்டுமுறை என்றும், காலாண்டுதோறும் என்றும் ஆசரிக்கப்பட வேண்டும் என்று கற்பனை செய்துகொள்வது போன்று, நமது கர்த்தர் எதுவும் குறிப்பிடவில்லை என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கின்றோம். நினைவுகூருதல் இராப்போஜனமானது, யூத ஏற்பாடு அனைத்தின்படி வருடந்தோறுமான ஆசரிப்பாக நிழலான பஸ்காவினிடத்தில் – இடம்பெறும் ஆசரிப்பாக நிறுவப்பட்டது என்பதில் மிகுந்த நிச்சயமே. நிழலின் விஷயத்தில், தியதியின் காரியத்தில் திட்டவட்டம் காணப்பட்டது மற்றும் இது நிஜத்தினுடைய ஆசரிப்புத் தொடர்புடைய விஷயத்தில் அவசியமாய் இருக்க வேண்டியதில்லை. நிழலானது, நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட வேண்டிய துல்லியமான/திட்டவட்டமான தியதியினை விசேஷமாய்ச் சுட்டிக்காட்டுவதற்குரிய நோக்கத்தினைப் பெற்றிருந்தது. ஆகையால் யூதர்கள் விஷயத்தில் மிகுந்த நுணுக்கம்/துல்லியம் என்பது ஏற்றதாய் இருந்தது. இப்பொழுதோ இயேசுவின் மரணம் பற்றின உண்மையானது, நடந்து முடிந்த காரியமாய் இருக்கின்றபடியால், தியதி மற்றும் வேளையின் துல்லியம் குறித்த விஷயத்தில் நுணுக்கமாய்க் காணப்படுவது என்பது மிகுந்த அவசியமானதாய்க் காணப்படுகிறதில்லை.
ஆகையால் எப்பிஸ்கோப்பிலியர்களும், கத்தோலிக்கர்களும் மற்றும் லுத்தரன்களும் நமது கர்த்தருடைய மரணத்திற்கும், உயிர்த்தெழுதலுக்குமான ஆண்டு நிறைவு நாளுக்கு அருகாமையிலுள்ள வெள்ளியையும், ஞாயிறையும் புனித வெள்ளி என்றும், ஈஸ்டர் ஞாயிறு என்றும் ஆசரிக்கும் வழக்கத்திற்கு மறுப்புத் தெரிவிப்பதற்கு எதுவுமில்லை. உண்மையில் இவர்களது வழக்கத்திற்கு ஆதரவாக சில விஷயங்கள் சொல்லப்படலாம்; ஏனெனில் இவ்வழக்கமானது ஆண்டு நிறைவு நாளினை, அவ்வாரத்தினுடைய நாட்களுடன் ஒன்றுப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. எனினும் 30-வருடங்களுக்கும் மேலாக, இந்த நினைவுகூருதலை, அதன் துல்லியமான ஆண்டு நிறைவு நாள் என்று நாங்கள் அறிந்திருக்கிற தியதியில் – யூதருடைய காலக்கணக்கீட்டு முறைக்கேற்ப யூதருடைய நீசான் மாதத்தின் 14-ஆம் தேதியினுடைய முந்தின – மாலையில் ஆசரிக்கும் வழக்கத்தினை நாங்கள் பெற்றிருக்கின்றோம். இந்த நீண்ட கால வழக்கத்தின் கண்ணோட்டத்தின்படியும் மற்றும் மாற்றத்தினுடைய அநுகூலத்தைச் சிலர் தெளிவாய்ப் பார்க்க முடியாதவர்களாய் இருப்பார்கள் என்ற உண்மையின் கண்ணோட்டத்தின்படியும், சிலர் குழப்பமடைந்து, தாங்கள் தப்பறையைப் பின்பற்றுவதாக எண்ணுவார்கள் என்றுள்ள உண்மையின் கண்ணோட்டத்தின்படியும், நம்முடைய தெரிந்துகொள்ளுதலானது இப்படியாய்க் காணப்படுகின்றது. ஆகையால் யூதருடைய நாள்காட்டியின்படியான துல்லியமான தியதியே பின்பற்றப்படுவதாக என்று நாம் அறிவுரைக் கூறுகின்றோம்.
இவ்வருஷத்தில் இளவேனிற் சமஇரவுபகல் நாளைத் தொடரும் அமாவாசையானது, மார்ச் 30-ஆம் தேதி நிகழ்கின்றதாய் இருக்கின்றது மற்றும் இதுவே யூதக்காலக்கணக்கீட்டின்படியான முதல் மாதத்தினுடைய முதலாம் நாளாய்க் காணப்படுகின்றது. நமது கர்த்தர் முதலாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதியன்று சிலுவையில் அறையப்பட்டிருக்க, இந்த வருஷம் அந்நாளானது, ஏப்ரல் 12-ஆம் தேதியாகக் காணப்படும். ஆனால் அவரது மரணத்திற்கான நினைவுகூருதலான இராப்போஜனமானது, முந்தின நாள் மாலையன்று ஆசரிக்கப்படுகின்றதாய் இருக்கின்றது மற்றும் நம்முடைய முந்தைய வழக்கத்தின்படி அனைவரும் ஒரே இருதயத்துடனும், ஒரே மனதுடனும் ஒன்றாய் மாபெரும் மீட்பருடைய மரணத்தினை ஏப்ரல் 11-ஆம் தேதியாகிய, செவ்வாய்க் கிழமையன்று, இரவில் 6-மணிக்குமேல் ஆசரித்திடுவதற்கு நாம் பரிந்துரைக்கின்றோம். இப்படியாக ஆசரித்திட்டாலுங்கூட [R4756 : page 41] நம் அனைவராலும் ஒரே மணிநேரத்தில் ஆசரித்திட முடியாது; காரணம் நேரத்திலுள்ள வித்தியாசம் ஆகும்; எனினும் உலகமெங்கும் இவ்வாசரிப்பானது அதேவேளையில்தான் நடைப்பெறும். அனைவரும் இப்படி ஆசரிப்பார்கள் என்ற இந்தப் பொதுவான ஐக்கியமும்கூட, இத்தருணத்திற்கே உரிய சந்தோஷம் மற்றும் பயபக்தியுடன்கூட அடங்குகின்றது. கர்த்தரை அன்புகூருகின்றவர்களும், மரணம் வரையிலுமாக அவரது சித்தம் செய்வதற்கென முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களுமானவர்கள் அனைவரும், நமக்கு விலையேறப்பெற்றதாய்க் காணப்படுகின்றதான இந்த ஆசரிப்பில் பங்குகொள்ளும்படிக்கு நாம் பரிந்துரைக்கின்றோம்.
இது முதலாவதாக நம் அருமை மீட்பர் தம் சபை சார்பாகவும், பூமியின் – குடிகள் அனைத்தின் சார்பாகவும் உள்ள அவரது பலியினை நமக்கு நினைப்பூட்டுகின்றதாய் இருக்கின்றது. இரண்டாவதாக அவருடைய அடிச்சுவடுகளில் – நடப்பதற்கும், அவரோடுகூடப் பாடுபடுவதற்கும், அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுவதற்கும், மரணத்திற்குள்ளான அவரது ஸ்நானத்திற்குள் ஸ்நானம் பெறுவதற்கும் நாம் கர்த்தரிடத்தில் பண்ணியுள்ளதான வாக்குறுதியை நமக்கு நினைப்பூட்டுகின்றதாய் இருக்கின்றது. நினைவுகூரும் வண்ணமாக, அப்பம் பிட்குதலும், பாத்திரத்தில் பானம்பண்ணுதலும் – இவைகள் அடையாளப்படுத்துகின்ற நிஜங்களிலுள்ள நம்முடைய பங்கெடுத்தலைக்காட்டிலும் முக்கியத்துவம் குறைந்ததேயாகும் என்பது உண்மைதான். நம்முடைய மனங்களிலும், இருதயங்களிலும் நாம் இயேசுவினுடைய பிட்கப்பட்ட சரீரத்தைப் புசித்து, அவர் மூலமாய் நம்முடைய மாம்சத்தின் நீதிமானாக்கப்படுதலை தரிப்பிக்கப்பட்ட விதத்தில் நாம் பங்கெடுக்கின்றோம் என்றும், அவர் மூலமாகவே எதிர்க்கால ஜீவியத்திற்கான நம்முடைய நம்பிக்கைகள் அனைத்தும் வருகின்றது என்றும் விசுவாசத்தின் மூலம் உணர்ந்துகொள்ளப்பட வேண்டும்.
[R4757 : page 41]
இரண்டாவதாக அவரது பாத்திரம் அடையாளப்படுத்துகின்றதுபோல், நாம் அவரது துயரங்களில் பங்கடைய வேண்டும், கிறிஸ்துவின் பாடுகளில் பங்கெடுப்பவர்களாகக் காணப்பட வேண்டும் மற்றும் அவரது அடிச்சுவடுகளில் மரணம் வரையிலுமாக உண்மையாய் நடந்து, கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை நிறைவேற்றிட வேண்டும். பிதா தமக்கு ஊற்றின பாத்திரத்தினை ஆண்டவர் பானம்பண்ணினார். தேவனுடைய கிருபையினால், அவர் பாத்திரத்தில் பங்கடைவதற்கான சிலாக்கியத்தினை நாம் பெற்றிருக்கின்றோம்; ஏனெனில் நாம் அவரோடுகூடப் பாடுபட்டால், அவரோடுகூட ஆளுகை செய்வோம். கிறிஸ்துவின் பாடுகளிலிருந்து நாம் ஓடிவிடுவோமானால், அவரோடுகூட ஜீவப்பலிகளாகுவதற்கு நாம் தவறுவோமானால், நாம் அவரது இராஜ்யத்தினுடைய மகிமையான சிலாக்கியங்களை அடையமுடியாது.