R3706 (page 20)
வெளிநாடுகளிலுள்ள நம்முடைய வாசகர்களின் நன்மைக்காக, நமது பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய மரணத்திற்கான ஆசரிப்பிற்குரிய தியதியை நாம் முன்கூட்டியே அறிவிக்கின்றோம். மீண்டுமாக இரண்டு தியதிகளில், ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் நமக்கு வந்துள்ளது. நம்மால் தேட முடிந்த அனைத்து ஆல்மனாக்குகளிலும் (almanac)/ஆண்டுக்குறிப்பேடுகளிலும் (calendar), இளவேனிற் சம இரவு பகல் நாளுக்குப் பின்னர்வரும் அமாவாசைக்கான தியதி மார்ச் 24-ஆம் தியதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தியதியிலிருந்து கணக்கிடுகையில் நீசான் 13-ஆம் தேதியினுடைய இரவாகிய நினைவுகூருதலின் நாளின் தியதியானது ஏப்ரல் 6- ஆம் தியதியாகக் காணப்படுகின்றது. ஆனால் அனைத்து almanac/ஆண்டுக்குறிப்பேடுகளும் நாங்கள் அறிந்திருக்கிறவரை, பௌர்ணமியின் தியதியினை ஏப்ரல் 9 என்று கொடுத்துள்ளது. நாம் ஏற்கெனவே சுட்டிக்காண்பித்திருக்கிற பிரகாரம், வேதவாக்கியங்களில் சந்திரனானது, யூத ஜாதிக்கு அடையாளமாய் இருக்கின்றது மற்றும் இதற்கான நோக்கம் இஸ்ரயேலுக்கான வாய்ப்புகளும், பரீட்சைகளும், நமது கர்த்தர் சிலுவையில் அறையப்படும் காலப்பகுதியில் முழு அளவில் காணப்பட்டது என்பதற்கும், சிலுவையில் அறையப்பட்ட காலம் முதற்கொண்டு, அந்த ஜாதியாருக்கான ஒளி நலிவுற ஆரம்பித்தது என்பதற்கும் அடையாளமாகக் காணப்படவே ஆகும்.
இம்முரண்பாட்டிற்கு (அ) அமாவாசையிலிருந்து பௌர்ணமி வருவதற்கு எப்படி 16-நாட்கள் தேவைப்படும் என்பதற்குக் காரணம் அறிய முடியாததினால், நாங்கள் அலிகெனியின் வான் ஆய்வு மையத்தினைக் கண்காணிப்பவர்களிடம் (Allegheny Observatory Astronomers) விசாரித்தோம்; அவர்களாலும் காரணம் கூறமுடியவில்லை மற்றும் almanac/ஆண்டுக்குறிப்பேட்டின் விவரங்கள் சரியே என்று உறுதி மாத்திரமே செய்தனர். அவர்கள் எங்களை வாஷிங்டனில் (Washington, D.C.) உள்ள அமெரிக்க கடற்படை ஆய்வு மையத்திடம் விசாரிக்கும்படிக்குப் பரிந்துரைத்தனர்; இவர்களும்கூட நமக்கு almanac/ஆண்டுக்குறிப்பேட்டின் தியதிகளை உறுதிப்படுத்தினார்கள். ஆனாலும் இந்த முரண்பாட்டினுடைய விநோதத்திற்கான காரணத்தை அல்லது சாதாரணமாகவே சந்திரனானது பௌர்ணமி பாகத்தை அடைவதற்கு 14 நாட்கள் போதுமானதாய் இருக்க, ஏன் இத்தருணத்தில் 16 நாட்கள் எடுத்துக்கொள்கின்றது என்பதற்கான காரணத்தைக் கொடுக்க முடியாதவர்களாய் இருந்தார்கள்.
அமெரிக்க கடற்படை ஆய்வு மையம்,
வாஷிங்டன், டி. சி.
திரு. சி. டி. ரசல்,
ஐயா, கடந்த 31-ஆம் தேதியன்று நீங்கள் அனுப்பியுள்ளதான செய்தியினை நான் பெற்றுக்கொண்டேன்; அதில் 1906-ஆம் ஆண்டினுடைய சில ஆல்மனாக்குகளில் அமாவாசையானது மார்ச் 24-ஆம் தேதி, மாலை 6:52-க்கு இடம்பெறுவதாகவும், அதன் பௌர்ணமியானது ஏப்ரல் 9-ஆம் தேதி மதியம் 1:12-க்கு இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், இடைவெளி 15 நாட்களும், 6 மணி நேரங்களுமாகக் காணப்படுவதினால், இதில் சில முரண்பாடு இருப்பதாக உங்களுக்குத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
[R3706 : page 22]
இதற்குப் பதிலளிக்கும் வண்ணமாக, நான் உங்களுக்குத் தகவல் அளிப்பது என்னவெனில், கூறப்பட்டுள்ள தகவல் சரியாக உள்ளது என்பதும், நேரமானது கிழக்கத்திய நேரப்படி உள்ளது என்பதுமேயாகும். சந்திரனுடைய வட்டத்தின் மா விலகல் (சுற்றுப்பாதையின் வட்ட விலகல்) காரணமாக அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் இடையிலான காலப்பகுதியானது, அபூர்வமாக 15 நாட்களைத் தாண்டுகின்றதாய் இருக்கின்றது.
உங்கள் மதிப்பிற்குரிய,
வால்டர். எஸ். ஹார்ஷ்மேன்,
கணித பேராசிரியர்,
யு. எஸ். என். கடலோடிகளின் ஆண்டு குறிப்புநூல் இயக்குநர்.
நினைவுகூருதல் ஆசரிப்பதற்கான சரியான தியதியினைத் துல்லியமாய் உறுதிப்படுத்திடுவதற்கு நாங்கள் இவ்வளவு நுணுக்கமாய் ஆராய்ந்திட்டாலும், துல்லியமான தியதியே முக்கியமானது என்ற எண்ணத்தினைப் பதியவைத்திடுவதற்கு நாம் விரும்பவில்லை. நாம் நியாயப்பிரமாணத்தின்கீழ்க் காணப்படாமல், கிருபையின் கீழ்க் காணப்படுகின்றோம். நினைவுகூருதலை நாம் ஆசரித்தல் என்பது சிலாக்கியமும், வாய்ப்புமே ஒழிய கட்டாயப்படுத்தும் கட்டளையல்ல. அதன் ஆசரிப்பிற்கு நாம் ஒன்றுபோல் ஒரு தியதியினைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதை நாம் சரியான மனநிலையில் ஆசரிக்க வேண்டும் என்றும், அதாவது பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய நிழலானது, உலகத்திற்கான மீட்கும்பொருள் விலைக்கிரயமாக, தேவாட்டுக் குட்டியாகிய இயேசுவின் மரணத்தில் நிறைவடைந்ததற்கான நினைவுகூருதல் என்று ஆசரிக்க வேண்டும் என்றுமுள்ளவைகளே முக்கியமானவைகளாகும். நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கின்றாரே, ஆகையால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். வேறு எதையும் அல்ல, இதையே அவரை நினைவுகூரும் வண்ணமாகவும், அவரோடுகூடப் பிட்கப்படுவதற்கும், தற்காலத்தில் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களுக்குத் திறந்துவைக்கப்பட்டுள்ளதான பலியுடன் கூடிய ஊழியங்களில் நம்முடைய ஜீவியங்களை அவரோடுகூட ஒப்புக்கொடுப்பதற்குமான நம்முடைய உடன்படிக்கையினை உறுதிப்படுத்தும் வண்ணமாகவும் நாம் செய்கின்றோம். நினைவுகூருதலை ஆசரிப்பதற்கான மிகுந்த ஏற்றவேளை, ஏப்ரல் 8-ஆம் தேதி, ஞாயிறன்று இரவாகும் என்று நாம் முடிவு செய்கின்றோம். யூதர்களும் இதையே கைக்கொண்டு, ஏப்ரல் 10-ஆம் தேதி, செவ்வாய்க் கிழமையை, பஸ்கா பண்டிகைக்கு (அ) நீசான் 15-ஆம் தேதியின் ஆரம்பம் என ஆசரிக்கின்றனர். இந்தக் கணக்கிடுதலின்படி நீசான் 14-ஆம் தேதி என்பது, ஏப்ரல் 9-ஆம் தேதி திங்கட்கிழமையாய் இருக்கும் மற்றும் யூதருடைய கணக்கிடுதலின்படி, நாளானது முந்தின மாலையோடு, அதாவது ஏப்ரல் 8-ஆம் தேதி, ஞாயிறு மாலையோடு துவங்குகின்றதாய் இருக்கின்றது. அந்தத் தியதியில், நாம் அனைவரும் ஒன்றுபோல் நினைவுகூருதல் இராப்போஜனத்தை ஆசரிப்போமாக.