R5770 – பேராசையின் பாவம்

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

R5770

பேராசையின் பாவம்

THE SIN OF COVETOUSNESS

தற்காலத்தில் நாம் எங்கு நோக்கினாலும் அனைத்துப் பாவங்களுக்கும் சுயநலமே ஊற்றாக இருக்கிறதைத் தெளிவாகக் காணலாம். பேராசைதான் சுயநலமாக, பாவமாக இருக்கிறது. அனைவரும் பாவிகளாயிருப்பதினால் இது எங்கும் பரவியிருக்கிறது. நமது சட்டங்கள், நமது நீதியான உரிமைகளில் நம்மைப் பாதுகாக்க நாடுகிறது; எனினும் பொன்னான பிரமாணத்தினை அநீதியாக மீறுகிறவர்களிடமிருந்து நம்மைப் தற்காப்பதிலும், நமது உரிமைகளைப் பத்திரப்படுத்துவதிலும் நாம் பெரும்பாலும் தோல்வியே அடைகிறோம். அனைவருக்கும் பாடம் என்னவென்றால், தேவனுடைய பிள்ளைகள் என்று கூறிக்கொள்ளுகிறவர்களிடமிருந்து பொன்னான பிரமாணத்திற்குக் குறைவானது எதுவும் தேவனுடைய பார்வையில் ஏற்புடையதல்ல என்பதாகும். அனைவருக்குமான காரியங்களில் நீதியின்படியும், பொன்னான பிரமாணத்தினுடைய கோரிக்கையின்படியும் நாம் கண்டிப்பாகச் செய்யவேண்டியவர்களாயிருக்க, நாம் மற்றவர்கள் எப்பொழுதும் நீதியையும், பொன்னான பிரமாணத்தினையும் செய்திடவேண்டுமென்று எதிர்ப்பார்க்கக்கூடாது என்பது இரண்டாவது பாடமாகும். தேவனுக்கும், அவரது ஆளுகைக்கும் புறம்பாய்க் காணப்படும் தேசங்கள் மற்றும் ஜனங்கள் மத்தியில் தேவனுடைய பிள்ளைகள் தங்களை அவருடைய பிரதிநிதிகளாகவும், ஸ்தானாபதிகளாகவும் கருதிக்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் எப்பொழுதும் நீதியுள்ளவர்களாயும், தயாள குணமுடையவர்களாயும், “அந்தகாரத்திலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கிறவர்களாயும்” இருக்க வேண்டும். அவர்களுடைய பரலோகப் பிதா தயாளமுள்ளவராகவும், நீதியுள்ளவராகவும் இருக்கிறதுபோல, அவருடைய பிள்ளைகளும் அவரது குணலட்சணத்தை உடையவர்களாகவும், நீதி சம்பந்தமான எல்லாவற்றிலும் உதவுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.