R2688 – அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

R2688 (Page 261)

அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்

DO YE EVEN SO TO THEM

“””ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.”” (மத்தேயு 7:12)

என்ன பரீட்சைகளை நாம் மேற்கொண்டாலும், மற்றவைகள் அனைத்தையும் காட்டிலும் இயேசு மற்றும் அவரது போதனைகளே மேலோங்கி நிற்கின்றதைக் காணமுடிகின்றது. உதாரணத்திற்குப் பொன்னான பிரமாணமானது கண்பூசியஸ் அவர்களின் எழுத்துகளிலும், புதிய ஏற்பாட்டிலும் காணப்படுகின்றது என்றும், இதுவே கண்பூசியஸ் அவர்கள் இயேசுவுக்கு நிகரானவராகவும், தேவனால் அனுப்பப்பட்டவராகவும், காணப்படுகின்றார் என்பதற்கு ஆதாரம் என்றும் நம்மிடம் அடிக்கடி தெரிவிக்கப்படுகின்றது. இப்படியான கூற்றினைத் தெரிவிப்பவர்களில் அநேகர் நேர்மையான எண்ணங்களுடன்தான் இப்படித் தெரிவிக்கின்றனர் என்பதில் எந்த ஐயமுமில்லை; உண்மை என்னவெனில் இயேசுவினால் கொடுக்கப்பட்டதான பொன்னான பிரமாணத்தினுடைய ஆழத்தையும், அகலத்தையும் அநேகம் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் கண்டுணர்ந்ததில்லை மற்றும் கண்பூசியசால் எழுதப்பட்ட பழமொழியானது / கொள்கையானது பொன்னான பிரமாணத்திற்கு ஒத்திருப்பதுபோன்று தோன்றுவதினால், இரண்டும் ஒன்றே என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. பெருமளவில் வித்தியாசம் உள்ளன; மேலும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, கண்பூசியசின் வார்த்தைகள் ஆணவமான/Brazen சட்டமெனச் சொல்லப்படலாம். கண்பூசியஸ் அவர்களின் பழமொழியாவது: “”மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யக்கூடாது என்று எண்ணுகின்றீர்களோ, அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதிருங்கள்.”” இதுவே நமது கர்த்தரினால் கொடுக்கப்பட்டதான பொன்னான பிரமாணத்தில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் பார்க்கப்படுகின்றது என்று நாம் மீண்டுமாகக் கூறுகின்றோம். கண்பூசியஸ் அவர்களின் பழமொழியானது முழு உலகத்திலுள்ள ஒவ்வொரு சிருஷ்டியினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், அதைக் காண்பதில் நாம் மகிழ்ச்சியடைந்திருப்போம்; மேலும் இப்படிச் செய்யப்பட்டிருக்குமானால் சந்தேகத்திற்கிடமின்றிப் பலனானது மனுக்குலத்திற்கு மாபெரும் ஆசீர்வாதமாகவே காணப்பட்டிருக்கும் தற்போதைய நிலைமைகளில் மாபெரும் முன்னேற்றங்கள் சம்பவித்திருந்திருக்கும்; மேலும் கர்த்தருடைய அடிச்சுவடுகளில் தொடர்ந்து நடப்பதற்கு நாடிக்கொண்டிருப்பவர்களாகிய பரிசுத்தவான்களைத் தவிர மற்றப்படி கிட்டத்தட்ட அனைவருமே தினந்தோறும், தங்கள் அயலார் தங்களுக்கு எவைகளைச் செய்யக்கூடாது என்று விரும்புகின்றார்களோ, அதை மற்றவர்கள் விஷயத்தில் செய்யாதவர்களாய்க் காணப்பட்டிருப்பார்கள். இப்படிப் பெரிய அளவில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்பட வாய்ப்பிருப்பினும், இன்னமும் குறைவுகள் காணப்படவே செய்திருக்கும்; “”உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போன்று பூலோகத்திலும் செய்யப்படுவதாக”” என்ற நமது கர்த்தருடைய ஜெபமானது தெரிவித்திடும் நிலைமையில் உலகமானது காணப்படாமலே இருந்திருக்கும். ஏனெனில் மனுஷர்கள் கொள்கைகள் அல்லது ஏதேனும் மற்றக் காரணங்களின் நிமித்தம் ஒருவரோடொருவர் நீதியுடன் நடந்துகொண்டிருப்பார்கள் மற்றும் மற்றவர்கள் தங்களுக்குச் செய்யக்கூடாது என்று அவர்கள் கருதிடும் காரியங்களை மற்றவர்களுக்குச் செய்யாதவர்களாய்க் காணப்பட்டிருப்பார்கள் மற்றும் அவர்கள் அனைவரின் இருதயங்களும் முழுக்க சுயநலத்தினாலும், குறுகிய மனப்பான்மையினாலும், பேராசை முதலியவையினாலும் நிரம்பியிருந்திருக்கும் மற்றும் அன்பினின்று தூரமாயிருந்திருக்கும்.

ஆனால் நமது கர்த்தருடைய பொன்னான பிரமாணத்தினுடைய பரந்த தன்மையினை நாம் கவனிக்கையில், இது முற்றிலும் ஓர் அன்பின் பிரமாணம் என்றும், இதில் கூட்டவோ, குறைக்கவோ எதுவுமில்லை, இது முழுமையானதொரு பிரமாணம் என்றும் நாம் கண்டுகொள்கின்றோம். இது “”தீமைச் செய்யாதே” என்று சொல்லுகிற எதிர்மறை (negative) பிரமாணமாய்க் காணப்படாமல், “”நன்மை செய்வாயாக; உன் அயலான் உனக்குச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகின்றதான நன்மை யாவற்றையும், இரக்கம் யாவற்றையும், ஊழியம் யாவற்றையும், அவனுக்குச் செய்வாயாக”” என்று சொல்லுகிற ஆக்கப்பூர்வமான (positive) பிரமாணமாய்க் காணப்படுகின்றது. “”சுயாதீன பிரமாணம்” என்று அப்போஸ்தலனால் அழைக்கப்படும் இந்தப் பிரமாணத்திற்கு, இந்தப் பூரண பிரமாணத்திற்கு, ஜீவியத்திற்கான இந்தப் பொன்னான பிரமாணத்திற்கு, இணையான ஒரு பிரமாணமானது எங்குமில்லை, எவருடைய எழுத்துகளிலும் இல்லை மற்றும் இதற்கும் மேலாய்ப் பிரமாண்டமாய் வெளிப்படுத்தப்படவும் முடியாது. ஆனால் எத்தனை சொற்பமானவர்கள் இந்தப் பிரமாணத்தினைச் சரியாய்ப் புரிந்துகொண்டவர்களாகவும், இதனை விரும்புபவர்களாகவும் மற்றும் தங்களது சொந்த நடவடிக்கையினை அளந்துபார்த்திட இதனை தினந்தோறும் பயன்படுத்துகின்றவர்களாகவும் காணப்படுகின்றனர்! ஏற்கெனவே தெரிவித்திருந்ததுபோல பெரும்பான்மையானவர்கள், உலகத்திலுள்ள நல்ல ஜனங்கள்கூட, பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள்கூட இப்பிரமாணத்தினுடைய அகலங்களையும், நீளங்களையும் கவனிக்கத்தவறிப்போனவர்களாகக் காணப்பட்டு, மற்றவர்களுக்குப் பாதகம் செய்யக்கூடாது என்று சொல்லும் கட்டளையாக மாத்திரமே இதனை கண்நோக்குகின்றனர். அப்படியானால் எத்தனை சொற்பமானவர்கள் மாத்திரம் இதன் அம்சங்களைச் சந்தோஷத்தோடும், உணர்வோடும் கிரகித்துக்கொண்டவர்களாக, தங்கள் ஜீவியங்களை இப்பிரமாணத்திற்கு இசைவாகப் பெற்றிருக்கத்தக்கதாக இருதயத்திலிருந்து நாடுகின்றவர்களாய்க் காணப்படுவார்கள்! வேறுயாருமல்ல பரிசுத்தவான்களே, வேறுயாருமல்ல “”தெரிந்துகொள்ளப்பட்டவர்களே” தங்கள் பரம பிதாவினுடைய அன்பின் பிரமாணத்தினுடைய ஆவிக்கும், சாரத்திற்கும் இசைவான இருதய நிலைமையில் காணப்படுவார்கள்.

மற்றவர்களிடத்தில் அளவு மீறின தயாளம் காட்டியும், தங்கள் விஷயத்தில் போதுமாய் ஜாக்கிரதையாய் இல்லாமலும் இருப்பதன் வாயிலாகக் கர்த்தருடைய ஜனங்களில் சிலர் இந்தப் பிரமாணத்தினைத் தவறாயும், தங்களுக்குப் பாதகமான நிலைமையிலும் பயன்படுத்திவிடும் அபாயமும் உள்ளது; ஆனால் இம்மாதிரியான சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே காணப்படும், ஏனெனில் நம்முடைய ஒட்டுமொத்த சந்ததியார் விஷயத்திலும், விழுகையானது அன்பையும், தயாளத்தினையும் இல்லாமலாக்கிப்போட்டு, நம்மைச் சுயநலத்தினால் நிரப்பிப்போட்டது. இப்படியாகச் சூழ்நிலையாகிப் போனதாலேயே, “”சுயத்தைப் பாதுகாப்பதே வாழ்க்கையின் முதல் சட்டமாகும்”” எனும் பழமொழி உலகத்தில் காணப்படுகின்றது; சுயம் எப்போதும் முதலாவதாகக் காணப்பட வேண்டும் என்றும், மற்றவர்களைக் குறித்துக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக, நம்மைக் குறித்தே நாம் அக்கறைக்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக் காணப்படுகின்றது.

பரிசுத்த ஆவியினால் புதுச்சிருஷ்டிகளென நாம் ஜெநிப்பிக்கப்பட்ட பிற்பாடும்கூட, நம்முடைய மனங்கள் புதிதாகத் தொடங்கின பிற்பாடும்கூட, பழைய சுபாவத்தினுடைய சுயநலத் தன்மையானது, மிகவும் ஆழமாய் விதைக்கப்பட்டுக் காணப்படுகின்றபடியால், அது நம் ஜீவிதத்தின் முடிவுபரியந்தமும் நம்மீதான அதன் பிடியினைக் கொண்டிருக்கின்றது என்பதை அனுபவத்தின் வாயிலாக நாம் அனைவருமே அறிந்திருப்போம். கர்த்தருடைய சித்தத்திற்கு முழு இசைவுடன் காணப்பட வேண்டும் என்ற வாஞ்சையில் சிலர் இந்தப் பொன்னான பிரமாணத்தினை மிதமிஞ்சின கண்ணோட்டத்தில் எடுத்துக்கொண்டு, “”உன் அயலான், அவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகின்றானோ, அதையே நீ உந்தன் அயலானுக்குச் செய்வாயாக”” என்று பொன்னான பிரமாணம் தெரிவிப்பதாக எடுத்துக்கொள்கின்றனர்; மேலும் இப்படியாகப் பிரமாணத்தினை எடுத்துக்கொள்வது என்பது முற்றிலும் வேறுபட்ட பிரமாணமாய் இருக்கும் என்பதையும், எல்லா விதத்திலும் பாதகமாகவே காணப்படக்கூடும் என்பதையும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இப்படியாகச் சிலர்தான் தவறு செய்யும் அபாயம் இருப்பினும், அநேகர் இக்காரியத்தினை இக்கண்ணோட்டத்தில் சிந்தித்தவர்களாகப் பின்வருமாறு கூறுகின்றனர்: “”இந்தப் பொன்னான பிரமாணத்தினை ஜீவியத்தின் அன்றாட காரியங்களில் எங்களால் கடைப்பிடித்திட முடியாது; உதாரணத்திற்கு என் அயலான் எனக்கு என்ன செய்ய நான் விரும்புவேனோ, அதையே நானும் என் அயலானுக்குச் செய்ய வேண்டுமெனில்… அப்படியானால் ஐந்து டாலர் மதிப்புள்ள ஒரு ஜோடி செருப்பினை நான் அயலானுக்கு ஒரு டாலருக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் அல்லது இருபது டாலர் மதிப்புள்ள உடைகளை, ஐந்து டாலருக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் அல்லது கோதுமையை அல்லது ஓட்ஸை பாதி விலைக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒருவேளை இப்படியான ஒரு பிரமாணத்தை நான் ஒருவர் விஷயத்தில் கடைப்பிடித்தேனாகில், நான் அனைவருக்குமே அதைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் மற்றும் இப்படியே தொடர்ந்தால் சீக்கிரத்தில் என்னுடைய தொழிலானது நஷ்டத்தைச் சந்திக்கும்; ஆகையால் பொன்னான பிரமாணமானது தற்காலத்தில் மனுஷன் சம்பந்தப்பட்ட காரியங்களில் கடைப்பிடிக்கப்படவே முடியாது.””

ஆனால் இது பொன்னான பிரமாணம் குறித்த தவறான கண்ணோட்டமாயிருக்கின்றது என்றும், இதைக் குறித்து நிதானித்துப் பார்த்தாலே ஒருவனுடைய சொந்த இருதயத்தில் காணப்படும் சுயநலமே பிரச்சனை என்பதைக் கண்டுகொள்ளலாம் என்றும் நாங்கள் பதிலளிக்கின்றோம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களைத் தெரிவித்து இருப்பவர், தனது அயலான் தன்னிடம் வாங்கும் பொருட்களை அதற்கேயுரியதான விலைக்குக் குறைவான விலையில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று தன்னிடம் எதிர்ப்பார்ப்பான், காரணம் தானும் தன்னுடைய அயலானிடம் பொருட்களை வாங்கும்போது அதற்கேயுரிய விலைக்குக் குறைவான விலையில் தனக்குத் தரப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருப்பார் என்ற சிந்தனை உடையவராய் இருக்கின்றார். பொன்னான பிரமாணத்தைக் கடைப்பிடிக்கும் [R2688 : page 262] காரியமானது இவருக்கு, இவரது பிரச்சனையைச் சுட்டிக்காண்பித்திடும்; இவர் செருப்பு வாங்கும்படியாக தனது அயலானிடம் செல்கையில், தனது அயலான் இவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று இவர் விரும்புவாரோ அதையே இவரும் அயலானுக்குச் செய்திட வேண்டும் என்றும், செருப்புகளுக்காக அயலானுக்கு நியாயமானதொரு விலையினை, ஜீவிப்பதற்கு நியாயமானதொரு இலாபத்தினை, தான் செலுத்திட வேண்டும் என்றும் உள்ள படிப்பினையைக் கற்றுக்கொடுத்திடும். மேலும் இப்படியே எல்லாப் பரிவர்த்தனைகளிலும் செய்திட வேண்டும். ஒருவேளை நாம் உற்பத்தியாளராய் இருந்து, பொருள்களை விற்கையில், நமக்கு என்னச் செய்யப்பட வேண்டுமென்று விரும்புவோமோ அப்படிபோலவே – விவசாயினுடைய விளைச்சலுக்கு உரிய விலையைச் செலுத்திடுவதற்கும், உற்பத்தியாளருடைய பொருட்களுக்குரிய விலையினைச் செலுத்திடுவதற்கும் நாம் விருப்பம் உள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்று பொன்னான பிரமாணமானது நமக்குக் கற்றுத் தருகின்றதாய் இருக்கின்றது. இதுபோலவே ஒருவேளை நாம் விற்கிறவர்களாய் இருக்கையில் நம்முடைய வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக இலாபம் ஈட்டும் விதத்தில் விலை சொல்வதற்கு நாம் எண்ணிவிடக்கூடாது, அதாவது அவர்கள் ஒருவேளை விற்கிறவர்களாகவும், நாம் வாடிக்கையாளர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பதையே நாமும் அவர்களுக்குச் செய்திட வேண்டும். ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் யாரெல்லாம் ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் இந்தப் பொன்னான பிரமாணத்தைப் பயன்படுத்துவதில் நன்கு பழக்கமடைந்திருப்பார்களோ அவர்கள் நீதி, நியாயம், நேர்மை பற்றின தங்களது புரிந்துகொள்ளுதலானது இதினிமித்தம் அதிகமடைந்திருப்பதைக் கண்டுகொள்வார்கள்; மேலும் தேவனுக்கொத்த இந்தச் சாயல்களானது அதாவது அவர்கள் ஆண்டவருடைய பொன்னான பிரமாணத்திற்கு இசைந்திருப்பதின் காரணத்திற்காக மாத்திரம் அல்லாமல், அவற்றின் உண்மையான அழகையும், பிரமாண்டத்தையும் அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் காரணத்தினாலும், அவற்றோடு அவர்களின் இருதயங்கள் இசைந்திருப்பதின் காரணத்தினாலும், அவற்றிற்கு அவர்கள் கீழ்ப்படியும் நிலையை அடைவது வரையிலும் தேவனுக்கொத்த இந்தச் சாயல்களானது அவர்களது குணலட்சணங்களில் ஒரு பாகமென அவர்களில் அதிகமதிகமாய் வளர்ச்சியடையும்.

நீதியை மனதில் ஆழப் பதியவைத்திடும் இந்தப் பிரமாணமானது, இதையும் தாண்டி கருணையையும் கூட மனதில் பதியவைக்கின்றது; அதாவது நாம் ஒருவேளை தேவையில் இருப்பவர்களாகக் காணப்படும் பட்சத்தில், மற்றவர்களிடத்தில் நாம் எதிர்ப்பார்த்திடும் கருணையினை நம் மனதில் பதியச் செய்திடும். ஓ! கர்த்தருடைய உண்மையான பரிசுத்தவான்கள் இந்தப் பொன்னான பிரமாணத்தினுடைய செல்வாக்கின் கீழ் வருகையில் அவர்கள் ஆவிக்குரிய குணலட்சணத்தில் எத்துணை முழுமையடைந்தவர்களாக இருப்பார்கள்! இது ஜீவியத்தின் கிரியைகளை மாற்றி அவர்கள் அவர்களோடு கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருக்கும் அனைவரிடத்திலும் நீதியோடு காணப்படச் செய்து, பின்னர் அவர்களது உதவிக்கான தேவையில் காணப்படுபவர்கள் யாவருக்கும், தங்களால் முடிந்த உதவியினை யாருக்கும் பாதகமில்லாமல் செய்யத்தக்கதான கருணையுடையவராகவும் இருக்கச் செய்திடும் – மேலும் இது அவர்களிடத்திலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளின் விஷயங்களிலும்கூட அதன் தாக்கத்தைக் கொண்டிருக்கும். இந்தப் பொன்னான அளவுகோலினுடைய வழிநடத்துதலின் கீழ், கசப்பான அல்லது கோபமான அல்லது பழித்தூற்றுதலான வார்த்தைகள் குறைந்துவிடும்; ஏனெனில் இம்மாதிரியாகத் தங்களிடத்தில் கோபமாகவும், கசப்பாகவும் மற்றும் குரோதமாகவும் உள்ள வார்த்தைகள் பேசப்படுவதையோ அல்லது தங்களைக் குறித்துப் புறங்கூறப்படுவதையோ யாரும் விரும்புவதில்லை. கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டிருப்பவர்கள் கோபம், பகைமை, குரோதம், வாக்குவாதம், பொறாமை, தூஷணங்கள் முதலானவைகளைக் களைந்துபோட வேண்டும் என்று அப்போஸ்தலன் நம்மிடத்தில் கூறியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்னுமாக இந்தப் பொன்னான பிரமாணமானது அன்பான வார்த்தைகளை, கனிவான செயல்பாடுகளை, தாழ்மையான நடக்கையைக் கொண்டிருப்பதற்கும்கூட நம்மை வழிநடத்தும்; ஏனெனில் யார்தான் இப்படியெல்லாம் தனது அயலான் நடக்கக்கூடாது என்று எண்ணம்கொள்வார்கள்? அப்போஸ்தலர் மறுபடியும் சொல்வது போன்று சாந்தம், பொறுமை, தயவு, நீடியபொறுமை, சகோதர சிநேகம், அன்பு முதலான கிறிஸ்தவ குணங்களை நாம் தரித்துக்கொள்ள வேண்டும் (கொலோசெயர் 3:8-10, 12-15).

வெளியரங்கமான கிரியைகளின் விஷயத்தில் துவங்கி, பின்னர் நம்முடைய வார்த்தைகளின் விஷயங்களையும் தாக்கத்திற்குள்ளாக்கும் இந்தப் பொன்னான பிரமாணமானது சீக்கிரமாய் நம்முடைய எண்ணங்கள் விஷயங்களிலும்கூட அதன் தாக்கத்தைக் கொண்டிருக்கும்; மற்றவர்கள் நம்மைக் குறித்து அற்பமாய் எண்ணுவதையோ, நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கிரியைகளைக் குறித்தும் தவறாகக் கற்பனை பண்ணிக்கொள்வதையோ நாம் விரும்புவதில்லை. மாறாக நம்முடைய வார்த்தைகளையும், நம்முடைய கிரியைகளையும், அன்போடும், இரக்கத்தோடும் கண்ணோக்க நாம் விரும்புவோம்; ஆகையால் இந்தப் பொன்னான பிரமாணத்தினுடைய [R2689 : page 262] செல்வாக்கின் கீழ் மற்றவர்களைக் குறித்த நமது எண்ணங்கள் மிகவும் கருணையோடும், மிகவும் பரந்த மனப்பான்மையோடும், சந்தேகிக்கும் தன்மை இல்லாமலும் காணப்படும்.

இந்தப் பொன்னான பிரமாணமே, நம்முடைய அருமை மீட்பர் வேறொரு தருணத்தின்போது, “”உன்னை நீ அன்புகூருவதுபோல உன் அயலானையும் அன்புகூருவாயாக”” என்று கூறி வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்திட்ட திவ்விய பிரமாணமாகும் என்பதில் உறுதியே. ஆகையால் ஒரு பிரமாணமானது, மற்றப் பிரமாணத்தினை விளக்குகின்றது என்றும், நாம் நம்மை அன்புகூருவதுபோன்று நம் அயலானை அன்புகூருவது என்பது, நம் அயலான் எவ்விதம் நம்மை அன்புகூரவும், நமக்கு எவற்றைச் செய்யவும் நாம் விரும்புகின்றோமோ, அவ்விதமே நாமும் நம் அயலானை அன்புகூர வேண்டும் மற்றும் அயலானுக்காய் நாம் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இதைவிட மேலான அர்த்தம் இருக்கும் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது. சட்ட ரீதியாகவோ அல்லது இரத்தபந்தத்தின் வாயிலாகவோ நாம் பொறுப்பைப் பெற்றிருப்பவர்களுக்காகவும் நமது குடும்பத்தினர், நமது உறவினர்களுக்காகவும் மற்றும் நமக்காகவும் உள்ள நியாயமான தேவைகளைச் சந்திக்கும்படி தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கின்றார் என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார் “”ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற் போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”” (1 தீமோத்தேயு 5:8)

ஆகையால் நம்முடைய அயலாருக்கு நாம் எதையாகிலும் செய்வதற்கு முன்பதாக, நமது சொந்த வீட்டாரைக் குறித்தே நாம் முதலாவதாக அக்கறைக்கொள்ள வேண்டும், பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நியாயமான கவனம் செலுத்திட வேண்டும். இதினிமித்தம் நமது அயலாருக்கும், நமக்கும் இடையேயும், நமது அயலார் குடும்பத்திற்கும், நம்முடைய சொந்த குடும்பத்திற்கும் இடையேயும் வித்தியாசம் காணவேண்டும்; எனினும் இக்காரியமானது பொன்னான பிரமாணத்தினால் நன்கு சீர்ப்படுத்தப்படுகின்றது; நமது அயலான் தேவையின் சூழ்நிலையில் காணப்படுகையில் – நாம் ஒருவேளை அயலானின் சூழ்நிலைமையிலும், அவர் நம் நிலைமையிலும் காணப்பட்டால் அவர் நமக்கு என்ன செய்திட வேண்டும் என்று நாம் விரும்புவோமோ, அதையே நம்முடைய அயலான் தேவையின் சூழ்நிலையில் காணப்படுகையில் நாம் அவருக்குச் செய்திட வேண்டும் என்று பொன்னான பிரமாணம் நம்மிடம் எதிர்ப்பார்க்கின்றது என்று பிரமாணம் குறித்துச் சரியாய்ப் புரிந்துகொள்ளப்பட்டால், நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும் நம்முடைய மனங்களானது, நீதியின் தளத்துடன் சமநிலையில் காணப்படுவதினால், நாம் பெருந்துயரத்தில் காணப்படுகையில், நம் அயலான் முதலாவதாக தன் சொந்தக் குடும்பத்திற்கு நியாயமான தேவைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்றும், அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு எதுவும் இல்லாமல் போகத்தக்கதாக அல்லது அவர்களுக்குப் பாதகம் உண்டாக்கத்தக்கதாக நமக்குக் கொடுத்து உதவிடக்கூடாது என்றும் நாம் எண்ணம் கொண்டிட வேண்டும்.

பொன்னான பிரமாணம் என்பது கடமையா? – SUB HEADING

சிலர் பின்வருமாறு கேட்கலாம்: “”கிறிஸ்தவர்களாகிய நாம் இந்தப் பொன்னான பிரமாணத்தினை நம்முடைய அன்றாட ஜீவியத்தில் கைக்கொள்ள முயற்சித்திட வேண்டுமா? கிறிஸ்தவ ஜனங்கள் மத்தியில்கூட மிகச் சொற்பமானவர்களே இப்பிரமாணத்தினைப் புரிந்துகொண்டவர்களாயிருக்க அல்லது இப்பிரமாணத்தினைக் கொஞ்சமேனும் கடைபிடிக்க நாடுகின்றவர்களாக இருக்க, நாம் அதை மிகவும் நல்லதொரு பிரமாணம் என்றும், ஆனாலும் அது நம்மீது கடமையாகக் காணப்படுகிறதில்லை என்றும், நாம் நித்திய ஜீவனையும், பரலோக மகிமையும் அடையும் காரியமானது, இந்தப் பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ளுகிற விஷயத்தைச் சார்ந்திருப்பதில்லை என்றும் எண்ணிக்கொள்ளலாமா? அதைப் பூரணப்பிரமாணத்திற்கான நல்லதொரு கொள்கையென/அளவுகோலென மனதில் பெற்றிருக்கலாம். ஆனாலும் அந்தக் கொள்கைக்கு ஏற்ப எந்தவிதத்திலும் வாழவேண்டாம் என்று நாம் எண்ணிக்கொள்ளலாமா?””

இந்தப் பொன்னான பிரமாணத்தினைக் கொண்டுதான் நமது அருமை மீட்பருடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் அளந்துபார்க்கப்பட்டது என்றும், அதற்கு இசைவாகத்தான் அவர் [R2689 : page 263] வாழ்ந்தார் என்றும், அதன்கீழ் அவர் நமக்காக தம் ஜீவனைக் கொடுத்தார் என்றும், அவரது சீஷர்களாக, அவரது பின்னடியார்களாகக் காணப்படுபவர்கள் யாவருக்கும் இப்பிரமாணம் அவசியமானது என்றும், இவர்கள்மீது கடமையாய் உள்ளது என்றும் நாம் பதிலளிக்கின்றோம். இராஜ்யத்தில் அவரது உடன்சுதந்தரர்களாக விரும்புவோர் யாவரும் அவர் வைத்துச்சென்ற மாதிரியின்படி, அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றிட வேண்டும் (1 பேதுரு 2:21); இன்னொரு அப்போஸ்தலன் கூறியுள்ளதுபோன்று, கிறிஸ்துவோடுகூட இராஜ்யத்தில் உடன்சுதந்தரர்களாய் இருக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சபை ஒன்றைத் தேவன் பெற்றிருக்க முன்தீர்மானித்துள்ளார் மற்றும் அதேபோல் தற்காலத்தில் தேவனுடைய அன்பான குமாரனாகிய நமது கர்த்தர் இயேசுவின் சாயலை அடைபவர்கள் மாத்திரமே இறுதியில் அந்த மகிமையடையும் சபையின் அங்கத்தினர்களென ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்றும் முன் தீர்மானித்துள்ளார்; மேலும் அவரைப் பின்பற்றுவது என்பது, அவரிலும், அவரது நடத்தையிலும் மாதிரித்துவம் படுத்தப்பட்ட பொன்னான பிரமாணத்தினைப் பின்பற்றுவதாகும். ஆகையால் இராஜ்யத்தில் பங்கடைய விரும்புபவர்கள் யாவரும், குணலட்சணத்தின் வளர்ச்சிக்குக் கவனம் கொடுத்திட வேண்டும் மற்றும் இந்தப் பொன்னான பிரமாணமானது அத்தகைய குணலட்சண வளர்ச்சிக்கு அவசியமானதாகும் இது நம்மில் நீதி அல்லது நியாயத்தின் கொள்கைகளை மாத்திரமல்லாமல், அன்பின் ஆவியினையும், சுயநலமில்லாமல் மற்றோருக்கு நன்மைச் செய்திடும் ஆவியினையும் வளர்த்துகின்றதாயிருக்கும் (ரோமர் 8:29).

மனுஷீக பெலவீனத்தில், திவ்விய பலமானது பூரணமாய்ச் செயல்படுகின்றது – SUB HEADING

மீண்டும் எழும் கேள்வி என்னவெனில்: சுபாவத்தில் விழுந்துபோனவர்களாகவும், அபூரணர்களாகவும் மற்றும் முழுக்கச் சுயநலத்தினையும், கீழ்த்தரமான தன்மைகளையும் உடையவர்களாகவும் இருப்பவர்களால் எப்படி பூரண மனுஷன் கீழ்ப்படியக்கூடியதும், நமது கர்த்தர் இயேசுவினால் அவரது சகல நற்கிரியைகள் மற்றும் பலிசெலுத்துதல் காரணமாய் நிறைவேற்றப்பட்டதுமான இந்தப் பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ள முடியும்? புறம்பான நடக்கைகளை மாத்திரமல்லாமல், நம்முடைய இருதயங்களின் எண்ணங்களையும், சிந்தனைகளையும்கூட அறிய வல்லமையுள்ளவரின் பார்வையில் நாம் எங்ஙனம் இந்தப் பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்பவர்களாக அங்கீகரிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்க்க முடியும்?

விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலாகிய இந்தச் சுவிசேஷயுகத்திற்கான தேனுடைய கிருபையுள்ள ஏற்பாடு நமக்கு உதவிபுரிய காணப்படுகின்றது என்று நாம் பதிலளிக்கின்றோம். நம்முடைய நீதிமானாக்கப்படுதலானது “”கடந்த காலத்தின் பாவங்களை”” மூடுவது மாத்திரமல்லாமல், நாம் நம்மை அவரது பலிபீடத்தில் ஜீவனுள்ள பலிகளாக ஏறெடுக்கத்தக்கதாகக் கிறிஸ்துவுக்குள்ளாய் நம்மைத் தேவன் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவர்களாக்குகின்றது; மேலுமாக அது – ஜீவியத்தின் பிரயாணம் முழுவதிலும் நம்மோடுகூடக் காணப்படுகின்றது; மேலுமாக வேண்டுமென்றே செய்யப்படாத நம்முடைய குறைபாடுகள் அனைத்திற்காகவும் – அது கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையின்படி ஈடு செய்திடும்; அப்போஸ்தலன் கூறுவதுபோன்று, “”மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் (பொன்னான பிரமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள) நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுகிறது.”” (ரோமர் 8:4)

நாம் அனைவரும் ஒன்றுபோல் விழுந்தவர்களாய் இராதபடியினால், ஒன்றுபோல் சுயநலமில்லாதவர்களாய் இராதபடியினால், மற்றவர்களால் செய்ய முடிகிறதைக்காட்டிலும், சிலர் திவ்விய பிரமாணத்தினுடைய ஆவிக்கு அதிகம் ஒத்துநடப்பார்கள் மற்றும் பொன்னான பிரமாணத்தின் அளவில் அதிகம் அடைந்தவர்களாய் இருப்பார்கள்; எனினும் எந்த விழுந்துபோன சிருஷ்டியினாலும், மாம்சத்தின் பல்வேறு பலவீனங்களினால் முடமாயிருக்கும் காரணத்தினை முன்னிட்டு பொன்னான பிரமாணம் சொல்லுபவைகளின்படி முழுவதுமாய் நடக்க முடியாது; மேலும் கிறிஸ்துவுக்குள்ளான தேவ கிருபையானது நம்முடைய குறைவுகளையெல்லாம் மூடுகின்றது; முன்மாதிரியின்படி அதிகமாய்ப் பின்பற்றுகிறவர்களும்கூட, அதை முழுமையாய்ப் பின்பற்றுகிற காரியத்திற்கு இன்னும் தொலைவாகவே இருக்கின்றனர் மற்றும் இதன் காரணமாக அவர்களது குறைவுகளை ஈடுசெய்யப்படும் வண்ணமாகக் கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தின் புண்ணியத்தினால் தரிப்பிக்கப்படுவது அவசியமாகுகின்றது; மேலும் அதிகம் விழுந்துபோனவர்களாகவும், மிகவும் சிறந்த பிரயாசம் எடுத்தும்கூடப் பொன்னான பிரமாணமாகிய மாபெரும் நியமத்தின் காரியங்களுக்கு வெகுதொலைவில் காணப்படுபவர்களாகவும் இருப்பவர்கள், அவர்களது குறைவுகளை ஈடுசெய்யத்தக்கதாக அவ்வளவுக்கு அதிகமாய்த் தேவகிருபைக்கான தேவையில் காணப்படுவார்கள். ஆகையாலே பாவமும், அபூரணமும் அதிகம் பெருகின இடத்தில், தேவ கிருபை அதிகமாய்ப் பெருகும் என்று அப்போஸ்தலன் தெரிவித்துள்ளார்; கிறிஸ்துவுக்குள்ளாகக் காணப்பட்டு, அவரது அடிச்சுவடுகளில் நடக்க நாடி, தங்கள் இருதயங்களில் தங்களைப் பொன்னான பிரமாணத்தினைக் கொண்டு அளந்து பார்த்து, அது சொல்லுபவைகளுக்கு இசைவாகத் தங்களால் முடிந்தமட்டும் ஜீவிக்க நாடுபவர்கள், அவர்களது பிரயாசங்களில் ஜெயம் அடையும் காரியங்களில் வித்தியாசப்படலாம்; ஆனாலும் திவ்விய கண்ணோட்டத்தில், இவர்கள் அனைவரும், நமது அருமை மீட்பருடைய பலியினுடைய புண்ணியத்தினால் இவர்களது குறைவுகளை மூடப்பெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர் மற்றும் நியாயப்பிரமாணத்தின் நீதியானது, அதன் உண்மையான அர்த்தமானது, அதன் ஆவியானது, பொன்னான பிரமாணத்தின் உண்மையான முழுமையானது இவர்களில் பூரணமாய் – தெய்வீக அங்கீகரிப்பிற்குப் பாத்திரமாய் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.

ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரமாகவோ அல்லது ஒரு மாதமாகவோ இந்தப் பொன்னான பிரமாணமானது நம்மில் நிறைவேற்றப்பட்டதாக இப்படியாய்க் கருதப்படுவது மாத்திரம், நாம் “”ஜெயங்கொண்டவர்களாக”” எண்ணப்படுவதற்குப் போதாது; மாறாக நம்மால் முடிந்தமட்டும் நாம் கர்த்தருடைய அடிச்சுவடுகளில் அதிக கவனமாய் நடப்பதை உண்மையாய்த் தொடர வேண்டும் மற்றும் நம்மால் முடிந்த மட்டும் அவரது பொன்னான பிரமாணத்தினைப் பயன்படுத்துவதை உண்மையாய்த் தொடர்ந்திட வேண்டும்; மேலும் இப்படியாக நாளுக்குநாள், வருஷா வருஷம் தொடர்ந்து செய்ய வேண்டும், அதுவும் தொடர்ச்சியான மற்றும் அதிகரித்துக்கொண்டுவரும் வைராக்கியத்தோடு தொடர்ந்து செய்ய வேண்டும் அதாவது நமது ஆண்டவர் குணலட்சணத்தினுடைய நம்முடைய வளர்ச்சியினைக் கவனித்து வருபவராக இருந்து: “”போதும், குணலட்சணம் உறுதியடைந்துவிட்டது; நீதிக்கான அன்பு நிரந்தரமானதாகவும், முழுமையாய் வளர்ச்சியடைந்ததாகவும் உள்ளது; அன்பின் ஆவியானது நிலையானதாகத் தெரிகின்றது மற்றும் மாம்சத்தில் சுயநலத்தின் சில தடயங்கள் இன்னமும் காணப்பட்டாலும்கூட, உண்மையான இலக்குடன் ஒப்பிடும்போது, அவை மங்கலாகவே காணப்படுகின்றது; மாம்சத்தில் இல்லை, மாறாக இருதயத்தில், சித்தத்தில் ஜெயம் அடையப்பெற்றிருப்பதற்கான நல்ல சான்று விளங்குகின்றது” என்று சொல்லும்வரை மேல்கூறியபடி தொடர்ந்து செய்ய வேண்டும்.

“”என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் “” (மல்கியா 3:17).

ஜீவியத்தின் விஷயங்களில், பொன்னான பிரமாணத்தினைச் செயல்படுத்தும் விஷயங்களில் சிலரால் செய்யப்படும் மிகக் கடுமையான தவறு – SUB HEADING

பொன்னான பிரமாணமானது அதன் தாக்கத்தினை உலக ஜனங்களிடத்திலும்கூடக் (பெயர்க் கிறிஸ்தவர்களிடத்திலும்கூடக்) கொஞ்சம் கொண்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை; அதுவும் இவர்கள், தங்களது அன்றாட நடக்கையினை அளந்து பார்ப்பதற்கான அளவுகோலாக பொன்னான பிரமாணத்தினை அடையாளம் கண்டுகொள்ளவும், பயன்படுத்தவும், வைராக்கியமாய் நாடுகிறார்கள்; ஆனாலும் அதை ஒரு பிரமாணமெனக் கைக்கொள்ளாதவர்களாகவும் அல்லது கைக்கொள்வதாக அறிக்கைப்பண்ணிக் கொள்ளாதவர்களாகவும் காணப்படுகின்றனர். [R2689 : page 264] கர்த்தருக்கென்று தங்களை முழுவதுமாகக் கொடுத்திட்டவர்களும், திவ்விய சித்தத்தின் பிரமாண்டமான வெளிப்பாடு என இந்தப் பொன்னான பிரமாணத்தினை அடையாளம் கண்டுகொண்டுள்ளவர்களுமான கிறிஸ்தவர்கள் மத்தியிலும்கூட, இந்தப் பொன்னான பிரமாணத்தினைச் சரியாய்ப் பயன்படுத்திடும் விஷயத்தில் கடுமையாய்த் தப்பெண்ணம் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கர்த்தருடைய ஜனங்களில் உயர் பண்புகளுடையவர்களில் சிலர்: “”வாருங்கள், நாம் சமுதாயத்தையும், உலக சந்தோஷங்களையும் விட்டுவிட்டு, விழுந்துபோயிருப்பவர்களுக்கான முன்னேற்றத்திற்காய் சமுகம் மறுமலர்ச்சிக்காக, பொருளாதார மறுமலர்ச்சிக்காக, ஒழுக்கம் சார்ந்த மறுமலர்ச்சிக்காக, குடிக்காரர்களின் மறுமலர்ச்சி முதலியவற்றிற்காய் நம் நேரங்களை அர்ப்பணிப்போம்”” என்கிறார்கள். இன்னும் சிலர் இதே ஆவியினாலும், இந்தப் பொன்னான பிரமாணத்தினை நிறைவேற்ற வேண்டும் என்ற இதே வாஞ்சையினாலும் உந்தப்பட்டவர்களாக,

“”நாம் நமது குடும்பங்களையும், நண்பர்களையும் விட்டுப் பிரிந்து, ஊழியக்காரர்களென, அந்நிய மார்க்கத்தினருக்குக் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கத்தக்கதாக தூர தேசங்களுக்குப் புறப்பட்டுச் செல்லலாம் வாருங்கள்”” என்கிறார்கள்.

இவர்கள் புரியும் இப்படியான வேலைகளுக்கான முறைமைகளை நாம் ஒத்துக்கொள்கிறோமா அல்லது இல்லையா என்பது ஒரு பக்கம் இருந்திட்டாலும், இத்தகைய உயரிய உணர்வுகளை மதிக்கும்படிக்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். எல்லாத் தருணங்களிலும் இல்லாவிட்டாலும், அநேகமான சந்தர்ப்பங்களில் நேரம், செல்வாக்கு, சுகம் முதலியவற்றை இப்படித் தியாகம் செய்யும் காரியங்களுக்குக் கீழ் அடிப்படையாய்க் காணப்படும் உயரிய கொள்கைகளை நாம் விரும்பவே/பாராட்டவே செய்கின்றோம்; இது இந்த அருமையான நண்பர்களிடத்திலுள்ள பொன்னான பிரமாணத்தினுடைய நடப்பித்தலேயாகும்; இவர்கள் இவர்களிடத்திலும், மற்றவர்களிடத்திலும் கூறுவதாவது: “”ஒருவேளை நாம் சேரிகளிலோ அல்லது அந்நிய மார்க்கச் சீரழிவுக்குள்ளாகவோ காணப்பட்டிருந்தால், தேவ பிள்ளைகளில் யாரேனும் நம்மிடமாய் வந்து, நம்மைச் சீர்த்தூக்கிவிட, நமக்கு வெளிச்சமூட்டிட நாம் விரும்புவோம்; ஆகையால் மற்றவர்கள் நமக்குச் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புபவற்றை, நாமும் மற்றவர்களுக்குச் செய்திட வேண்டும்”” என்பதேயாகும்.

இது பொன்னான பிரமாணம் குறித்தத் தெளிவான சிந்தித்தலும், சரியாய்ப் பொருத்திப் பார்த்தலுமாகும்; எனினும் தவறானதாகும் என்றும் நாம் நம்புகின்றோம். கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் கிறிஸ்தவன் கற்றுக்கொள்ளும்படிக்கு அழைக்கப்படும் முதலாம் படிப்பினை, அவனது கணிப்புகள்/நிதானிப்புகள் குறைவுள்ளவைகள் என்பதும், விழுகையின் காரணமாய் நமது சரீர ஆற்றல்கள் மாத்திரம் சீரழிந்துபோகாமல் நமது மன ஆற்றல்களும் சீரழிந்து போயுள்ளது என்பதும், முழு உலகமும் சரீரத்தில் மாத்திரமல்லாமல், மனதிலும், நிதானிப்பிலும்கூட ஆரோக்கியமற்றுக் காணப்படுகின்றது என்பதுமாகும். நாம் ஞானத்தில் குறைவுள்ளவர்களாய் [R2690 : page 264] இருக்கின்றோம் என்றும், இதன் காரணமாகவே, “”எல்லா மனுஷனும் தேறினவனாகும்படிக்கு”” அவர் தம்முடைய புத்தகமாகிய வேதாகமத்தினை அருளியுள்ளார் என்றுமுள்ளவைகளே – தேவ பிள்ளைகள் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் கற்க வேண்டிய அடிப்படைப் பாடங்களாய் இருக்கின்றன (2 தீமோத்தேயு 3:16,17).

இரட்சிப்பின் வேலை என்பது மனுக்குலத்தினால் செய்ய முடியாத வேலையென்றும், ஆகையால் தேவன் அவ்வேலையினைக் கையில் எடுத்துள்ளார் என்றும் நமக்கு வேதாகமத்தில் கற்பிக்கப்பட்டுள்ளது; தேவன் அவ்வேலைக்கடுத்த காரியங்கள் தானாய் இயங்கும்படி விட்டுவிடவில்லை என்றும், நம்முடைய பூரணமற்றக் கணிப்புகள் மற்றும் அற்பமான பிரயாசங்கள் வசத்திலும் அவ்வேலைக்கடுத்த காரியங்களை அவர் விட்டுவிடவில்லையென்றும் நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது; உலகத்தோற்ற முதற்கொண்டே மாபெரும் இரட்சகர் (தேவன்) தமது வேலையினைத் திட்டமிட்டுள்ளார் என்றும், இப்படியிருந்த போதிலும் நான்காயிரம் வருடங்களுக்குப் பின்னரே அவ்வேலையை நிறைவேற்றும் விஷயத்தில் முதலாம் மாபெரும் நடவடிக்கையினை, அதாவது ஆதாம் மற்றும் அவரது சந்ததிக்கான மீட்கும் விலையாகத் தம்முடைய குமாரனைக் கொடுக்கும் காரியத்தினை மேற்கொண்டார் (1 பேதுரு 1:20) என்றும் நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. இரட்சிப்பின் இவ்வேலையினைத் துவங்கியுள்ள தேவன், அவ்வேலையினைக் கைவிட்டுவிட வில்லையென்றும், கைவிடுவதற்கு நோக்கம் கொண்டிருக்கவில்லையென்றும், இறுதியில் நியாயத்தைக்கொண்டுவருவார் என்றும், இறுதியில் மனுஷனுக்கான தம்முடைய ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு, திருப்தியாவார் என்றும், இறுதியில் கர்த்தரைப் பற்றின அறிவானது முழு உலகத்திலும் நிரம்பியிருந்து, சிறியோர் முதல் பெரியோர் வரை யாவரும் அவரை அறிந்திருப்பார்கள் என்றும் நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது; அவர் நீதியை வெளிப்படுத்துவார் என்றும், இறுதியில் பூமியின் குடிகள் அனைத்தும் தேவனுடைய கிருபை மற்றும் தயவு குறித்த அறிவினால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள் மற்றும் பலனடைவதற்கான வாய்ப்பினாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது; மாபெரும் தீர்க்கத்தரிசியாகிய இராஜாவின் சொல் கேளாதவர்கள் ஜனத்திலிராதபடிக்கு இறுதியில் இரண்டாம் மரணத்தில் அறுப்புண்டுபோவார்கள் என்றும் நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது; இனிமேல் மரணம் இருப்பதில்லை, அழுகையிருப்பதில்லை, வலியிருப்பதில்லை; ஏனெனில் ஆதாமின் பாவமும், அதன் தண்டனையும், அதனால் உண்டான சீர்க்குலைவுமாகிய முந்தினவைகள் ஒழிந்துபோயிருக்கும். ஏசாயா 14:24,27; 55:11; மத்தேயு 12:20; ஏசாயா 53:11; 11:9; எரேமியா 31:34; அப்போஸ்தலர் 3:19-23; வெளிப்படுத்தல் 21:3,4.

ஆனால் கர்த்தருடைய அருமையான ஜனங்களில் அநேகர் இந்தக் கிருபையான ஏற்பாடுகளையும், அவரது வார்த்தையிலுள்ள வாக்குத்தத்தங்களையும் பார்க்கத்தவறினவர்களாகவும், அன்பின் ஆவியினைக் கொஞ்சம் கொண்டவர்களாகவும் காணப்பட்டு, தங்களுடைய ஞானத்தைக் காட்டிலும், தேவனுடைய ஞானம் பெரியதாய் இருப்பதுபோன்று தங்களுடைய அன்பைக்காட்டிலும் தேவனுடைய அன்பு பெரியது என்பதை மறந்துபோய்விடுகின்றனர்; ஆகையால் முழு இரட்சிப்பின் திட்டமும் தேவனுடையதே என்பதும், அதை அவர் மற்றவர்கள் வசத்தில் தள்ளிவிடவில்லை என்பதும், அதை அவர் தாமே தமது ஏற்றவேளையில் நிறைவேற்றி முடிப்பார் என்பதுமான உண்மைகளைக் கவனிக்கத்தவறிவிடுகின்றனர். இதை மறந்துவிடுகிறபடியாலேயே, அவர்கள் பொறுப்பினுடைய பாரப்பளுவினால் கஷ்டப்படுகின்றனர் மற்றும் உலகத்தினுடைய இரட்சிப்பானது ஏதோ தங்கள் தோள்கள் மீது காணப்படுவதாக எண்ணுகின்றனர் மற்றும் தங்களை முக்கியமானவர்களாகக் கருதுவதினாலும், தேவ வார்த்தைகளை மறந்துபோவதினாலும் இவர்கள் சுவிசேஷம் பரப்பும் ஊழியத்திற்கும், சேரிப்பகுதிகளில் ஊழியத்திற்கும், அந்நிய மார்க்கத்தினர் மத்தியில் ஊழியத்திற்கும் என்று புறப்பட்டுச் செல்கின்றனர்.