R5425 (page 90)
“கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று இயேசு இறுதியாகக் கூறினார். அவருடைய பின்னடியார்கள் அனைவரும் இந்த வார்த்தைகளுக்குச் செவிக்கொடுக்க வேண்டும். இவ்வார்த்தைகளை அசட்டைப் பண்ணுகிறவன், இவ்வார்த்தைகளைக் கொடுத்திட்டவரை அசட்டைப் பண்ணுகிறவனாய் இருந்து, நிச்சயமாய்க் கிடைக்கப்பெறும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறுகிறவனாய் இருப்பான். ஆனால் உலகத்தாரைப் பொறுத்தமட்டில், “அவர்கள் காதுகளிருந்தும் கேளாதவர்களாகவும், கண்ணிருந்தும், காணாதவர்களாகவும்” இருப்பார்கள். நம்மையும், இயேசுவின் பின்னடியார்கள் அனைவரையும் அளப்பதற்கான அதே கொள்கைகளின் அடிப்படையில் நாம் உலகத்தாரைக் கணிக்கக்கூடாது. உலகத்திற்கான உயர்ந்த அளவுகோல்/கொள்கை பொன்னான சட்டமாக இருக்கின்றது. கிறிஸ்தவனுக்கான உயர்ந்த அளவுகோல் / கொள்கை சுயத்தைப் பலிச் செலுத்தி, எல்லாம் இழந்து, தேவ சித்தம் செய்வதாகும்.