Q444:1 ஜீவ-உரிமைகளுக்கான தேவை

தலைப்புகள்
R4637 - இயேசு பூமிக்குரிய ஜீவனைப் பறிக்கொடுத்திடவில்லை
R5085 - கிறிஸ்துவினுடைய பலி
R5621 - நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவ-உரிமைகளின் சாற்றப்படுதல் மற்றும் பயன்படுத்தப்படுதல்
R5342 - இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது
R4461 - எங்களது மேற்கு மாநாட்டின் சுற்றுப்பயணம்
R4905 - நமது கர்த்தருடைய ஜீவ-உரிமைகள் மீதான கேள்விகள்
R4587 - தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி
R4642 - ஜீவன் கொடுத்துவைக்கப்பட்டது மாறாக செலுத்தித்தீர்க்கப்படவில்லை
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q372:2 - இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 - இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q444:1 - ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 - ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:4 - ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q568:2 - மீட்கும்பொருள் - எங்கே provided / ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 - மீட்கும்பொருள் கல்வாரியில் paid / செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 - மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 - மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 - மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்

Q444:1

ஜீவ-உரிமைகளுக்கான தேவை

LIFE-RIGHTS--Necessity for

“கேள்வி – (1911-Z4922)-1- தம் வசத்தில் ஒருவேளை பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமைகளைக் கிறிஸ்து பெற்றிருக்கவில்லையெனில், அவரால் உலகத்திற்கான நித்திய பிதாவாக முடியுமா?

பதில் – ஒருவேளை நமது கர்த்தராகிய இயேசு ஆயிரவருட ஆளுகையின்போது ஆதாமிற்கும், அவரது சந்ததிக்கும் பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமையினை கொடுத்துவிடுவதற்கென, அந்த உரிமையினைச் சொத்தாகப் பெற்றிருக்கவில்லையெனில், அவரைக்குறித்து அந்தச் சந்ததியின் பிதா என்று கூறமுடியாது. கொடுத்துவிடுவதற்கென்று ஜீவனை – பூமிக்குரிய ஜீவன் ஒன்றை அவர் கடவ பெற்றிராதது வரையிலும் அவரால் மனுக்குலத்தின் சந்ததியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. “