R4015 (page 190)
பாவநிவாரண நாளினுடைய பலிகளைக்குறித்தும், அவைகளின் இரத்தம் முதலாவதாக ஆசாரியன் மற்றும் அவரது வீட்டாருக்கு அல்லது லேவி குடும்பத்தாருக்கு மற்றும் இரண்டாவதாக “ஜனங்கள் அனைவருடைய பாவங்களுக்காகவும்” செயல்படுத்தப்படுவதுகுறித்தும் தெரிவித்தப் பிற்பாடு போக்காட்டினுடைய தலையின்மீது, ஜனங்களின் அக்கிரமங்களானது அறிக்கையிடப்படுவதைக்குறித்து நாம் வாசிக்கின்றோம்; இரத்தத்தினால் அனைவருக்கும் நிவிர்த்தி செய்யப்பட்ட பிறகு, எந்தப் பாவங்கள் மீதியிருக்கின்றன?
எல்லா ஜனங்களுடைய பாவங்களுக்கான பாவநிவாரண நாளின் நிஜமான பலிகளானது, ஆதாமின் குற்றம் அனைத்தையும், அனைவர் மீதுமான ஆக்கினைத்தீர்ப்பினையும் ரத்து செய்கின்றது என்றும், இது சுதந்தரித்துக்கொள்ளும் பாவங்கள் மற்றும் அபூரணங்கள் அனைத்தையும் உள்ளடக்குகின்றது என்றும் நாம் பதிலளிக்கின்றோம். இந்தப் பாவங்களில் எதுவும், போக்காட்டினுடைய தலையின்மீது அறிக்கையிடத்தக்கதாக மீதியிருப்பதில்லை.
ஆனாலும் வெளிச்சம் மற்றும் அறிவிற்கு எதிராய் ஓரளவுக்கு மனப்பூர்வமாகச் செய்யப்பட்டுள்ள மற்றவகை பாவங்களும் இருக்கின்றன. இவைகள் ஆதாமின் பாவங்களல்ல மற்றும் இவை பாவநிவாரண பலிகளினால் மூடப்படுவதுமில்லை. இந்தப் பாவங்களும், அக்கிரமங்களும்தான், போக்காடு வகுப்பாராகிய “”திரள் கூட்டத்தார்” மீது சுமத்தப்பட்டதாக இருக்கின்றது. சீக்கிரம் சம்பவிக்கவிருக்கும் நிஜத்தில் “”திரள் கூட்டத்தினர்”” உலகத்தினாலும், அதிலும் விசேஷமாகப் “”பாபிலோனாலும்”” ஒரளவிற்கு மனப்பூர்வமாய்ச் செய்யப்பட்ட பாவங்கள் சிலவற்றிற்காகப் பாடுபடத்தக்கதாக அனுமதிக்கப்பட விருக்கின்றனர்.
யூத யுக அறுவடையினைத் திரும்பிப்பார்க்கையில் நாம் இங்கு எதிர்க்காலத்தில் வரவிருக்கின்றவைகளுக்கான காட்சியினைக் காண்கின்றோம். அங்குத் திவ்விய தயவினின்று புறந்தள்ளப்பட்ட யூத ஜனங்களானவர்கள், பயங்கரமான ஓர் உபத்திரவ காலத்திற்குள் சென்றார்கள். அந்த உபத்திரவத்தைக்குறித்து நமது கர்த்தர் குறிப்பிடுகையில் “நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் (இதற்கான தண்டனை) உங்கள்மேல் வரும்” (மத்தேயு 23:35-36) என்று கூறினார்.
இது போலவே இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய ஆரம்பம் துவங்கி, சிந்தப்பட்ட தேவனுடைய பரிசுத்தவான்கள் அனைவருடைய இரத்தத்தின் கணக்கானது, தற்காலத்துத் தலைமுறையினரிடத்தில் விசாரிக்கப்படும் மற்றும் இது எந்த “ஒரு ஜாதியார் தோன்றினது முதற்கொண்டு உண்டாயிராத மகா உபத்திரவ காலத்தினை” கொண்டுவந்திரும். கடந்த காலத்தில் இரத்த சாட்சியாய் மரித்தவர்கள், [R4016 : page 191] அதாவது “பலிபீடத்தின்கீழ்க் காணப்படும் ஆத்துமாக்கள், பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்” (வெளிப்படுத்தல் 6:10) என்று கூறி, நீதியின் இந்தச் சரிக்கட்டுதலுக்காய்க் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதுபோன்று அடையாளமான விதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்றவர்களாகிய தங்கள் சகோதர் சகோதரிகளும் இதேபோன்று கொல்லப்படுவதற்குக் காத்திருக்கும்படியாகவும், அப்போது அனைவருக்கும் செய்யப்பட்ட குற்றமானது சரிக்கட்டப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (வெளிப்படுத்தல் 6:9-11)
யுகங்களினுடைய இறுதியிலேயே, யுகங்களினுடைய தவறுகள் அனைத்தும் முழுமையாய்ச் சரிக்கட்டப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்று கேள்வி எழும்புகின்றதா?
ஏனெனில் ஒவ்வொரு யுகத்திற்குமான பிரதான வெளிச்சமானது அதன் இறுதி பகுதிகளிலேயே கடந்துவருகின்றது – ஏனெனில் இத்தகைய வெளிச்சத்திற்கு எதிராகப் பாவம் செய்தவர்கள், இவர்களுக்கு முன்பு குறைவான வெளிச்சத்தின் காணப்பட்ட பொல்லாதவர்களைக்காட்டிலும், மிகக் கடுமையாய் நியாயந்தீர்க்கப்படுவதற்கு ஏதுவானவர்களாய்க் காணப்படுவார்கள்.
இந்த ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே நமது கர்த்தர், உண்மை வெளிச்சத்தினை எதிர்த்த அவரது நாட்களிலுள்ள யூதர்கள், முற்காலங்களில் நீதிமான்களைத் துன்புறுத்திய அவர்களது முன்னோர்களைக்காட்டிலும் அதிகம் குற்றமுள்ளவர்களாகக் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். இதே கொள்கையின் அடிப்படையிலேயே அவர் நம்மிடம் “என் ஜனங்களே, நீங்கள் (பாபிலோனுடைய) அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்று கூறுகின்றார் (வெளிப்படுத்தல் 18:4). இன்றும் பாபிலோனை அங்கீகரிப்பவர்களாகவும், அவளது கடந்தகால தவறான செய்கைகள் அனைத்தையும் மறைமுகமாய் அங்கீகரிப்பவர்களாகவும் இருப்பார்கள். தற்கால வெளிச்சத்தில் கடந்த காலங்களினுடைய தவறுகளை அங்கீகரித்தல் என்பது பொறுப்பினை இரட்டிப்பாக்குகின்றது மற்றும் வாதைகளுக்கு ஆளாக்கிவிடும் என்பதே வேதவக்கியங்களினுடைய வாதமாய் இருக்கின்றது. அர்ப்பணம்பண்ணின பின்பு பாளயத்திற்கு வெளியே வரவும், கிறிஸ்துவின் நிந்தனைகளைச் சுமக்கவும் மனமுவந்து, விரும்பி வராத “திரள் கூட்டத்தினரை” தனிமையின் “வனாந்தரத்திற்குள்ளும்,” துன்புறுத்துதல்களுக்குள்ளும் அனுப்பிவைத்திரும் காட்சியினைக் கர்த்தர் போக்காட்டினுடைய நிழலில் வெளிப்படுத்துகின்றார். இவர்கள் பாவநிவாரணத்தில் பங்காற்றுவதில்லை, மாறாக உலகத்தினுடைய பாவங்களின் பாரங்களைச் சுமக்கத்தக்கதாக அனுமதிக்கப்படுகின்றனர் – ஆம்! கட்டாயப்படுத்தப்படுகின்றனர்; இப்படியாக உலகத்திற்கு மரித்துப்போய், கர்த்தர் இயேசுவின் நாளில் இவர்களது ஆவிக்குரிய ஜீவன் இரட்சிக்கப்படும்.