R3356 (page 126)
கேள்வி: லேவியராகமம் 16:20-22 வரையிலான வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, பிரதான ஆசாரியன் “போக்காட்டின்” மீது பாவங்களை அறிக்கையிடும் நிழலின் அர்த்தமென்ன?
பதில்: இந்த ஆடானது, பலிசெலுத்தத் தவறிப்போகும் ஓர் அர்ப்பணிக்கப்பட்ட வகுப்பாருக்கு அடையாளமாயிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாக இருக்கின்றது என்று நாங்கள் புரிந்துகொள்கின்றோம்; இன்னுமாக இந்த ஆடானது அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட காரியம், அர்ப்பணிக்கப்பட்டும் உடன்படிக்கைக்கு இசைவாக தங்கள் ஜீவியங்களைப் பலிசெலுத்தாத, ஆனாலும் கர்த்தரை மறுதலியாத இவர்கள், ஒன்றில் கர்த்தரை மறுதலிக்கத்தக்கதாக [R3357 : page 127] அல்லது தங்கள் ஜீவியங்களைச் சத்தியத்திற்காகக் கையளித்துவிடத்தக்கதாக, வரவிருக்கின்ற உபத்திரவ காலத்திற்குள்ளாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாக இருக்கின்றது என்று நாங்கள் புரிந்துகொள்கின்றோம். ஆனாலும் ஜீவனைக் கையளிக்கும் இக்காரியமானது, ஒருவிதத்தில் கட்டாயமானதாக இருக்கின்றபடியால், இது “பலியாக” கருதப்படாமல், “மாம்சத்தின் அழிக்கப்படுதலாக” காணப்படும், காளையினுடைய இரத்தத்தினாலும், வெள்ளாட்டுக்கடாவினுடைய இரத்தத்தினாலும் பாவத்திற்கான நிவாரணம் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்க, ஏன் பிரதான ஆசாரியன் இந்த வகுப்பார்மீது குறிப்பிட்ட பாவங்களை அறிக்கைப்பண்ணினார்? என்ற உங்களது கேள்வி இங்கு எழுகின்றது. பாவம் இரண்டு கண்ணோட்டங்களிலிருந்து பார்க்கப்படலாம் என்று நாங்கள் பதிலளிக்கின்றோம். முதலாவதாக கணக்குச் செலுத்தித்தீர்க்கப்பட முடியாது, மாறாக மகா பிரதான ஆசாரியனாகிய தலை மற்றும் சரீரத்தின் பாவநிவாரண பலியினால் சந்திக்கப்பட வேண்டும். இரண்டாவதாக ஜனங்கள் மீது திவ்விய பிரமாணத்தினுடைய பழிவாங்கும் செயல்பாடு ஒன்று உண்டு; இது பாவியின்மீது பாவங்களுக்கான பாடுகளைக் கொஞ்சம் கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது. இந்த இரண்டாம் காரியமே வனாந்தரத்தில் போக்காட்டினுடைய பாடுகளில் வெளிப்படுத்தப்படுகின்றது என்று நாங்கள் நம்புகின்றோம். கர்த்தருடைய முதலாம் வருகையின்போது, தங்கள் நாட்களுக்குரிய வெளிச்சத்தினையும், அறிவையும் பெற்றிருந்தவர்களாகவும், இந்த வெளிச்சம் மற்றும் அறிவிற்கு விரோதமாய்ப் பாவம் செய்தவர்களாகவும் காணப்பட்ட யூதர்களில் அப்போது உயிரோடு இருந்த தலைமுறையினருக்கு விரோதமாய்க் கர்த்தர் குற்றஞ்சுமத்தி, ஆபேல் முதற்கொண்டு சிந்தப்பட்ட இரத்தத்திற்கான கணக்கினை அந்தத் தலைமுறையினருடைய கைகளில் விசாரித்தார்; ஆகையால் இதுபோலவே பெயரளவில் கர்த்தரின் ஜனங்களாகக் காணப்பட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலண்டையில் கூடியிருப்பவர்களாகிய பெயர்க்கிறிஸ்தவ மண்டலத்தில் இன்று காணப்படுபவர்கள்மீது, ஒரு மாபெரும் பொறுப்பானது தேவனுடைய பார்வையில் காணப்படுவதாக நாங்கள் புரிந்துகொள்கின்றோம். பெயர்க் கிறிஸ்தவத்தின் கைகளில் இன்று அதிகம் விசாரிக்கப்படும்; ஏனெனில் ஒருவேளை பெயர்க் கிறிஸ்தவ மண்டலம் முழுவதுமே கர்த்தருக்கு அர்ப்பணித்துக் காணப்பட்டிருந்திருப்பார்களானால், அனைவர் மீது வரும் உபத்திரவ காலத்திற்கான அவசியம் இருந்திருக்காது, மாறாக கோபாக்கினையின் நாளில் தற்கால அமைப்புகளினுடைய கவிழ்த்துப்போடுதலின் அவசியமில்லாமலேயே, கர்த்தர் வந்து விருப்பமுள்ள ஜனங்கள் மத்தியில் தம் இராஜ்யத்தினை ஸ்தாபித்திருந்திருப்பார். ஆகையால் கோபாக்கினையின் நாள் வருகையில், அது நீதியான இழப்பீடு சரிக்கட்டுதலாகத்தான் இருக்கும் மற்றும் திவ்விய கோபாக்கினையானது முழுமையாய் இந்தப் பெயரளவிலான வகுப்பார்மீது வெளிப்படும்.