R3598 (page 219)
2 நாளாகமம் 33:1-13
“நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.” (நீதிமொழிகள் 14:34)
வேறொரு பாடத்தில் எசேக்கியா அநேக விதங்களில் ஒரு முன்மாதிரியான இராஜாவாகவும் – தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் காணப்பட்டார் என்பதைப் பார்த்தோம். இப்பாடத்தில் நல்ல மனுஷராகவும், கர்த்தருக்கு நேர்மையானவராகவும் காணப்படுபவர்கள் சரியற்ற தகப்பன்மார்களாகவும், தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் தங்களுக்கிருக்கும் பொறுப்பின் விஷயத்தில் அஜாக்கிரதையாகவும் இருக்கக்கூடும் என்று எடுத்துக்காட்டுகின்றதாய் இருக்கும். அந்தோ பரிதாபம் இன்றும்கூட இப்படியாகவே இருக்கின்றது; தேவனுடைய பிள்ளைகளாகவும், பரிசுத்த ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகவும் காணப்படுபவர்கள் மத்தியிலும்கூடச் சிலர் இவ்விஷயத்தில் தெளிந்த புத்தியுள்ள மனதின் ஆவியினை அடைய இன்னமும் தவறுகின்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதிமொழிகள் 22:6) என்று வேதவாக்கியம் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது; அதாவது பிள்ளையினுடைய வனையப்படுதலுக்கேதுவான மனமானது முறையாய்ப் பேணப்பட்டால், நீதியின்கொள்கைகளினால் முறையாய்ப் பதியவைக்கப்பட்டால், பிள்ளையானது அவ்வப்போது தற்காலிகமாய்த் தடைச்செய்யப்பட்டுள்ள பாவ வழிகளில் செல்ல முற்பட்டாலும், பதியவைக்கப்பட்ட காரியங்களானது முழுமையாய் அழிந்துபோகாது என்பதுதான் கருத்தாகும். இந்த முக்கியமான காரியமானது கர்த்தருடைய ஜனங்கள் அனைவராலும் தெளிவாய்ப் புரிந்துகொள்ளப்பட முடியுமானால் . . . உலகத்திற்குள் குழந்தையைக் கொண்டுவருகையில், முக்கியமான ஒரு பொறுப்பானது – துறக்க முடியாத ஒரு பொறுப்பானது – சரியான மனம்கொண்ட எந்த ஒரு நபராலும் தட்டிக்கழிக்க எண்ணங்கொள்ளப்படாத ஒரு பொறுப்பானது கையில் எடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவராலும் உணர்ந்துகொள்ளப்படமுடியும்.
இந்த ஒரு கருத்தானது சீயோன் காவல் கோபுர வெளியீட்டினுடைய வாசகர்கள் யாவரின் மனதிலும் பதியவைக்கப்பட முடியுமானால், இது நிச்சயமாய் அவர்களுக்கும், அவர்களது பிள்ளைக்கும் அதிகமாய்ப் பிரயோஜனம் உண்டாக்குகின்றதாயிருக்கும். சத்தியமானது காவல்கோபுர வெளியீட்டின் வாசகர்களுடைய ஜீவியத்திலும், அவர்களது குடும்பங்கள்மீதும்கூடப் பல்வேறு வழிகளில் பெரிதளவில் செல்வாக்குக்கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சிக்கொள்கின்றோம். இது கர்த்தருடைய ஆவியின், தெளிந்த புத்தியுள்ள மனதினுடைய ஆவியின், அன்பின் ஆவியின், நீதியின் ஆவியினுடைய நடைமுறை சார்ந்த செயல்பாடுகளாகும். இவை அதிகமதிகமாய்ப் பெருகி, தற்கால ஜீவியத்தில் பிள்ளைகளுடைய நலனுக்கடுத்த காரியங்களில் மாத்திரம் வெளிப்படாமல், இதோடுகூடப் பரத்திலிருந்துவரும் ஞானமானது முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும், சாந்தமும், இணக்கமுள்ளதாகவும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாகவும் இருக்கின்றது என்பதற்கான நற்சாட்சியானது நண்பர்கள் மற்றும் அயலார்களுக்கு முன்பும் காணப்படுவதாக.
மனாசே பற்றின பதிவுகளானது சுருக்கமாய்ச் சொல்லப்பட்டுள்ளது மற்றும் அது கர்த்தர் பார்வையில் அருவருப்பாயிருந்தது. பன்னிரண்டு வயதுள்ள சிறுவன் சரியாய் வளர்க்கப்பட்டிருந்தால், நீதியின் வழிகளிலும், கர்த்தரைப்பற்றின உணர்ந்துகொள்ளுதலிலும், யூதேயாவில் கர்த்தருடைய பிரதிநியாகத் தான் காணப்படும், பொறுப்புள்ள ஸ்தானம் குறித்த உணர்ந்துகொள்ளுதலிலும் போதுமானளவுக்கு உறுதிப்பட்டிருக்கும் பகுத்துணர்வையும், புத்தியையும் ஓரளவிற்குப் பெற்றிருக்க வேண்டும். பிள்ளைகள் இருபது முதல் முப்பது வயதை அடையாதது வரையிலும் அவர்களால் பகுத்தறிவுள்ள மற்றும் விவேகமான சிந்தனைகளைச் சிந்திக்க முடியாதவர்களாய் இருப்பார்கள் என்று எண்ணி அநேகம் பெற்றோர்கள் தவறு செய்கின்றனர். மாறாக பத்து வயதை அடைவதற்கு முன்னதாகவே, ஜீவியத்தை விட்டு என்றும் நீங்கா எண்ணங்களானது மனதினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது மற்றும் இப்படிப்பினைக் கொடுக்கப்படுதலானது குழந்தை ஒருமாத குழந்தையாக இருக்கும்போதே கொடுக்க துவங்கப்பட வேண்டும் – சட்டத்திற்கும், ஒழுங்கிற்கும், சிருஷ்டிகரின் மேலான அதிகாரத்திற்கு அடையாளமாய்க் காணப்படும் பெற்றோரின் அதிகாரத்திற்கும் அன்புடன் கீழ்ப்படிவதற்கான படிப்பினைகளானது பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தன் பெற்றோர்களையும், [R3598 : page 220] தன் இல்லத்தின் சட்டங்களையும், ஒழுங்குமுறைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளாத பிள்ளையானவன் – கர்த்தருக்கும், அவரது உடன்படிக்கையினுடைய பிரமாணங்கள் முதலியவைகளுக்கும் தனக்குக் காணப்படும் பொறுப்புகளை உணர்ந்துகொள்ளும் விஷயத்தில் சிரமத்திற்குள்ளாகுவான்.
குழந்தைப்பருவ காலங்களானது குழந்தையின் விருப்பப்படி அல்லது முக்கியத்துவமில்லாத காரியங்களில் அல்லது விளையாட்டுகளில் செலவிடப்பட வேண்டும் என்று எண்ணுவது தவறாகும். வாழ்க்கை என்பது மாபெரும் சிலாக்கியமான ஒன்று என்றும், மகா ஆசீர்வாதமான ஒன்று என்றும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் ஞானமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், வாழ்க்கையில் செய்யப்படும் காரியங்களானது தேவனுக்கு மகிமையை அல்லது நமக்கு நன்மையை அல்லது மற்றவர்களுக்கு நன்மையைக் கொண்டுவந்திட வேண்டும் என்றும் உள்ள எண்ணங்களானது… சிறுவயதிலேயே ஊட்டிவிடப்பட வேண்டும். நேரத்தைப் போக்குவது, நேரத்தை வீணடிப்பது, பிரயோஜனமில்லாமல் அல்லது ஏதோ நன்மையான விதத்தில் இல்லாமல் மணி நேரங்களையும், நாட்களையும் போக்குவது என்பது அவமானத்திற்குரிய காரியம் என்றும், இது பாவம் என்றும் சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும். நேரத்தை வீணடிப்பதற்கு அல்லது பிரயோஜனமற்ற, நன்மையற்ற விதங்களில் நேரத்தைப் போக்குவதற்குக் கற்றுக்கொண்டிருக்கும் குழந்தையானவன்… நிரந்தரமாய்ப் பாதிப்பிற்குள்ளாகுவான்; அவன் உலகில் பிரயோஜனமானவனாக இருக்க வேண்டுமானால், அவன் தன் குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொண்ட தவறான பாடங்களை எதிர்த்துப் போராடியே, எதிர்த்து முயற்சித்தே செய்திட முடியும்.
பிள்ளைகளுக்குச் சரியான அஸ்திபாரம் போடுவதற்கும், அவர்களது மனங்களானது ஆடம்பரமான, அறிவீனமான, முட்டாள்தனமான காரியங்களினால் நிரம்பாமல் பார்த்துக்கொள்வதற்கும், அவர்களது மணி நேரங்களும் நாட்களும் வீணடிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படுவதற்கும், பிள்ளையானவன் வாழ்க்கையில் பிரவேசிக்கவிருக்கின்ற ஜீவியத்தின் மாபெரும் வேலைக்கு அவனை ஆயத்தமாக்கிடுவதற்கு, தகுதியாக்கிடுவதற்கு ஒவ்வொரு நிமிஷமும் விலையேறப்பெற்றது என்று அன்போடு பிள்ளையானவனுக்குப் புரிய வைக்கப்படுவதற்கும் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கின்றனர். வனையப்படுவதற்கேதுவான தன் பிள்ளையினுடைய மனதில் சுயநலமான காரியங்களை அல்ல, மாறாக மேலான எண்ணங்களை, சிறந்த இலட்சியங்களைப் பதியவைத்திடுவதற்கு ஒவ்வொரு பெற்றோரும் கடமைப்பட்டிருக்கின்றனர். எவ்விதமான வீணடித்தல்களும் குற்றஞ்சாட்டுதலுக்கு ஏதுவானவை என்றும், கஞ்சத்தனமாய்ப் பணத்தைச் சேமித்தலும்கூடப் பழிப்புக்கிடமானது என்றும், பணத்தைக் குவித்துக்கொள்வதை மாத்திரமே பிரதானமான இலட்சியமாக வைத்திருக்கும் ஜனங்கள் இது விஷயத்தில் வெறிகொண்டவர்களாய்க் காணப்படுவார்கள் என்றும் வார்த்தையின்மூலமாயும், முன்மாதிரிமூலமாயும் அன்பான விதத்தில் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்; இன்னுமாக தேவனுடைய வழிநடத்துதலின்பேரில் நமக்கு வருகின்றதான ஆசீர்வாதங்கள், சிலாக்கியங்கள், அனுகூலங்கள் மற்றும் வாய்ப்புகள் அனைத்தையும் – நம்முடைய மனரீதியான, ஒழுக்க ரீதியான, சரீர ரீதியான முன்னேற்றத்திற்காக வேண்டியும், பொன்னான பிரமாணத்திற்கு இசைவாகவும், அன்பின் பிரமாணத்திற்கு இசைவாகவும், முதலாவது தேவனை அன்புகூர்ந்து இரண்டாவது நம் அயலார்களை அன்புகூர்தல் எனும் பிரமாணத்திற்கு இசைவாகவும், நம்மால் முடிந்தளவுக்கு அனைவருக்கும் உதவியளிப்பதற்காக வேண்டியும் – பயன்படுத்திடுவது நியாயமான மற்றும் சரியான காரியமாயிருக்கும் என்றும் வார்த்தையின்மூலமாயும், முன்மாதிரிமூலமாயும் அன்பான விதத்தில் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.